search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் சாவு
    X

    வேலைக்கு சென்ற இளம்பெண் திடீர் சாவு

    • கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார்.
    • இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கோசணம் கடைசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் கோபால்குமார். டிராக்டர்டிரைவர். இவரது மனைவி ரேவதி (27). இவர் செட்டி தோட்டம் என்ற பகுதியில் தனியார் தறிகுடோனில் வேலைப்பார்த்து வந்தார்.

    வழக்கம் போல் நேற்று காலையும் கோபால்குமார், தனது மனைவி ரேவதியை மோட்டார் சைக்கிளில் வேலைக்கு அழைத்து சென்றார்.

    பின்னர் தறி குடோனில் வேலை செய்து கொண்டு இருந்த ரேவதி மாலையில் திடீரென தனக்கு உடல் நிலை சரியில்லை என்று தனது கணவருக்கு செல்போனில் தகவல் கொடுத்து உள்ளார்.

    கோபால்குமார் வருவதற்குள் தறிபட்டறை உரிமையாளர் தனது காரிலேயே ரேவதியை நம்பியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து கோபிசெட்டிபாளையம் செல்லும் வழியிலேயே ரேவதி திடீரென இறந்து விட்டார். இதுப்பற்றி தெரியவந்ததும் ரேவதியின் கணவர் அவரது உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து நம்பியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் ரேவதி இறப்புக்கான காரணம் தெரியவரும்.

    காலையில் வேலைக்கு சென்ற இளம்பெண் மாலையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×