search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new groom"

    • செல்வகணேஷ் ஏராளமான கடன்கள் வாங்கி வைத்திருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
    • இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வ கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 37). வெல்டராக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரியும் பெண்ணுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் செல்வ கணேஷ் ஏராளமான கடன்கள் வாங்கி வைத்தி ருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த செல்வ கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சரவணக்குமார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
    • வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 28).

    இவருக்கு கடந்த 6 மாதத்து க்கு முன்பு தான் திருமண மானது. இவருக்கு வடிவுக்கரசி (23) என்ற மனைவி உள்ளார். சரவ ணக்கு மார் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணக்குமார் அந்த கம்பெனியில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ராம்பிரசாத் (வயது 25) விவசாயி இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ராம் பிரசாத்துக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. 

    சம்பவத்தன்று ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை முல்லை நகரைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் கார்த்திக். இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு அழகுலட்சுமி என்பவருடன் திருமணம் நடந்தது. கார்த்திக்கிற்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. மருத்துவரிடம் காண்பித்தும் பலனில்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த கார்த்திக் சம்பவத்தன்று விஷம் குடித்து தல்லாகுளம் பகுதியில் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் கார்த்திக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தல்லாகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை ஹார்வி பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி சுமதி (வயது 25). கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமதி எல்லீஸ் நகரில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வாழ்க்கையில் விரக்திய டைந்த அவர் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    • திருமங்கலத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா திருமங்கலம் நகைக்கடையில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டின் படுக்கை அறையில் சுகன் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சுகனின் தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முருகராஜ் ஜே.சி.பி. டிரைவர்.
    • கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் வன்னிகோனேந்தலை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முருகராஜ் (வயது29). ஜே.சி.பி. டிரைவர். இவரது மனைவி மணிமேகலை (25).

    தூக்குப்போட்டு தற்கொலை

    இவர்கள் இரண்டு பேரும் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகராஜ் தூக்குப்போட்ட நிலையில் காணப்பட்டார். அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக உயரிரிழந்தார்.

    போலீசார் விசாரணை

    இது தொடர்பாக தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவணை முறையில் டிராக்டர் புதிதாக வாங்கி முருகராஜ் ஓட்டி வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் கடனை சரிவர கட்டமுடியாமல் தவித்து வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் கணவருடன் கோபித்து கொண்டு மணிமேகலை தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வகுமார் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார்.

    கோவை

    கோவை வரதராஜபு ரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், நந்தினி(24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக செல்வகுமார் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.


    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது உடன் விஷம் கலந்து குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

    அங்கே செல்வகுமாரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வகுமார் இறந்தார் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 25 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார்.
    • இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே எட்ராப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மகன் இளையராஜா. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேகிதா (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.  கடந்த 30. 7. 22 அன்று மாலை தன்னுடைய மனைவிக்கு ஜாக்கெட் துணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர். பிறகு சின்னசேலம் அருகே உள்ள செல்லியபாளையம் என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே சப்வே பாலம் அருகே உள்ள கிணற்றில் இளையராஜா பிணமாக கிடந்து உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இளையராஜாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் சின்னசேலம் போலீசார் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதபரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இளையராஜாவின் தந்தை மாணிக்கம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வடமதுரை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள காணப்பாடி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமணி மகன் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் (34). இவருக்கு லலிதா என்ற மனைவியும் வெற்றி (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிங்காரம் சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.

    குளச்சல் அருகே புது மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளச்சல்:

    நாகர்கோவில் மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 34). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது மனைவி உஷா (29). இவர்களுக்கு திருமணம் முடிந்து 12 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மணி மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் பாலப்பள்ளத்தில் உள்ள உஷாவின் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    அங்கு இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    குளச்சல் பள்ளிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தினகரன் (51). பெயிண்டிங் வேலை செய்து வந்தார்.

    இவரது மனைவி சுதா (40). இவர் குளச்சல் நகராட்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினகரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட் டது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமாகாத வருத்தத்தில் அவர் அதிகளவு மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக தினகரன் இறந்தார்.

    இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தக்கலை பேலஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் (70). இவர் வக்கீலாக இருந்தார்.

    இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மற்றும் மகன் நாகர்கோவிலுக்கு வந்திருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு சதாசிவம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தார். மேலும் சம்பவம் குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரம்மகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பிணமாக கிடந்த சதாசிவத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் புதுமாப்பிள்ளை இறந்த தகவல் அறிந்த அவரது இளம்மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று பொது மக்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். இதனால் தூத்துக்குடி நகரமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களில் தூத்துக்குடி தாமோதர நகரைச் சேர்ந்த மணிராஜூம் (வயது 25) ஒருவர். இவர் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வந்தார்.

    இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க அவர் காலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வந்தார். துப்பாக்கி சூட்டில் அவர் பலியானது அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    புதுமாப்பிள்ளை மணிராஜ் இறந்த தகவல் அறிந்த அவரது இளம் மனைவி கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. வாழ்க்கையை தொடங்கிய 3 மாதத்திலேயே மணிராஜின் வாழ்வு முடிந்துபோனது.
    ×