என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பைக்குகள் மோதிய விபத்து - திருமணம் ஆன 4 மாதத்தில் புது மாப்பிள்ளை பலி
Byமாலை மலர்15 Feb 2019 9:02 AM GMT (Updated: 15 Feb 2019 9:02 AM GMT)
வடமதுரை அருகே பைக்குகள் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே உள்ள காணப்பாடி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமணி மகன் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் (34). இவருக்கு லலிதா என்ற மனைவியும் வெற்றி (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிங்காரம் சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
வடமதுரை அருகே உள்ள காணப்பாடி புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னமணி மகன் மணிகண்ட பிரபு (வயது 26). இவர் சம்பவத்தன்று தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மற்றொரு பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் சாந்தி என்பவருடன் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
வடமதுரை அருகே உள்ள தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சிங்காரம் (34). இவருக்கு லலிதா என்ற மனைவியும் வெற்றி (10) என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சிங்காரம் சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். பலத்த காயங்களுடன் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X