search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை"

    • உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.
    • சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார்

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் அருகே புத்தளம் ஒசரவிளையை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 24), கொத்தனார். தெற்கு புளியன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவப்பிரியா (20) இருவரும் காதலித்து வந்தனர்.

    கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது பறக்கை சி.டி.எம்.புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். சம்பவத்தன்று சிவபாலன் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். மனைவியிடம் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி சிறிதுநேரம் தூங்கிவிட்டு வருவதாக படுக்கை அறைக்கு சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து சிவப்பிரியா கதவு வழியாக பார்த்தபோது சிவபாலன் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய சிவபாலனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிவபாலன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 9 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சரவணக்குமார் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தார்.
    • வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள பாரியூர் நஞ்ச கவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணக்குமார் (வயது 28).

    இவருக்கு கடந்த 6 மாதத்து க்கு முன்பு தான் திருமண மானது. இவருக்கு வடிவுக்கரசி (23) என்ற மனைவி உள்ளார். சரவ ணக்கு மார் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் டிரைவ ராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சரவணக்குமார் அந்த கம்பெனியில் வழக்கம் போல் வேலை பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு கொண்டு இருந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டி பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன.
    • இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது

    கடலூர்:

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் புதுக்குலதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன. இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை இவர்களுக்குள் மீண்டும்சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அவரை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால்முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் முத்தாண்டிகுப்பம் கிழக்கு தெருவில் உள்ள செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில்ஜனார்த்தனன் கைலி துணியால்தூ க்குபோட்டுதற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விருதுநகர் மாவட்டத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாளையம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவர் மதுரையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதுரைக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து ராஜ்குமாரின் சகோதரி சத்யவாணி அளித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் மைக்கேல். வெளியூரில் வேலை பார்க்கிறார். இவருக்கு அன்னலெட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்ற அன்னலெட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து மைக்கலின் தாயார் ராணி அளித்த புகாரின் பேரில் அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள நாட்டா மங்கலத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 17 வயது மகள் சிவகாசி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று மொபட்டில் கல்லூரி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மாரி முத்து அளித்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
    • அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே சமிட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவரது மகன் ராம்பிரசாத் (வயது 25) விவசாயி இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராம் பிரசாத்துக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் ராம் பிரசாத்துக்கு திருமணத்தில் உடன்பாடு இல்லை என கூறப்படுகிறது. 

    சம்பவத்தன்று ராம்பிரசாத் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் உள்ள்வர்கள் ராம் பிரசாத்தை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ராம் பிரசாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலை அருகே வரும்போது செல்வன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார்
    • மரிய ரேகா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி:

    கல்குளத்தை அடுத்த பறப்பற்று எள்ளூவிளையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் செல்வன் (வயது 36), கொத்தனார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த மரிய ரேகா என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் கடந்த வாரம் தாயார் வீட்டுக்கு மரிய ரேகா சென்றார். கடந்த 3-ந்தேதி மாலையில் மனைவியை அழைத்து செல்ல செல்வன் தனது மோட்டார் சைக்கிளில் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலை அருகே வரும்போது செல்வன் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து செல்வனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் செல்வன் இன்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மரிய ரேகா ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வன் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விழுந்தாரா? அல்லது வாகனம் ஏதும் மோதியதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருமங்கலத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகன் (வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி சித்ரா திருமங்கலம் நகைக்கடையில் வேலை பார்க்கிறார். இருவருக்கும் திருமணமாகி 8 மாதம் ஆகிறது.

    இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டின் படுக்கை அறையில் சுகன் தூக்கில் தொங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.இந்த சம்பவம் குறித்து சுகனின் தாய் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சொத்து பிரச்சினையால் விபரீதம் ஆனது.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது22). இவருக்கும், சந்தியா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டுவில் சவுந்தரபாண்டிக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இதனை திருப்பி தருமாறு சூரியபிரகாஷ் தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சூரியபிரகாஷ் கீழஉப்பிலிகுண்டுவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்வகுமார் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
    • செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார்.

    கோவை

    கோவை வரதராஜபு ரத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 30). இவர் கார் ஷோரூம் மில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாரும், நந்தினி(24) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    மதுப்பழக்கத்திற்கு அடிமையான செல்வகுமார் தினசரி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார் இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக கடந்த சில நாட்களாக செல்வகுமார் மிகுந்த மன வேதனை அடைந்து காணப்பட்டார்.


    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது உடன் விஷம் கலந்து குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் வாந்தி எடுத்து மயங்கினார்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி தனது கணவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்

    அங்கே செல்வகுமாரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வகுமார் இறந்தார் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன
    • விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி :

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 40). இவரும் பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34) என்பவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர்.

    நேற்று 2 பேரும் பணியை முடித்து விட்டு முட்டத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். இரணி யலில் இருந்து தக்கலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர் கோணம் ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்த போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளில் ஆத்திவிளையைச் சேர்ந்த பிரதீஷ் மற்றும் ரெஜு ஆகியோர் வந்தனர்.

    இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ராஜ சேகர் மற்றும் பிரதீஷ் (28) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காயம டைந்த ராஜன் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவ மனையிலும் ரெஜூ சுங்கான் கடையில் உள்ள தனியார் மருத்துவ மனை யிலும் அனுமதிக்க ப்பட்ட னர். இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரதீஷிற்கு வருகிற 1-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அவர் திருமணத்திற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் சொந்தஊர் திரும்பி உள்ளார்.

    திருமண பத்திரிக்கையை கொடுத்து வரும் போது தான் பிரதீஷ் விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார். இதனால் திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மேலும் அந்த கிராமமே சோகத்தில் உள்ளது.

    விபத்தில் பலியான ராஜசேகருக்கு மூன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. மேலும் அவரது மனைவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளக்குறிச்சி அருகே திருமணமான 25 நாளில் புதுமாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்தார்.
    • இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி அருகே எட்ராப்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம். அவரது மகன் இளையராஜா. இவருக்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ரேகிதா (வயது 22) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.  கடந்த 30. 7. 22 அன்று மாலை தன்னுடைய மனைவிக்கு ஜாக்கெட் துணி வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் இளையராஜா வீட்டிற்கு வராததால் அவரது பெற்றோரும், இளையராஜாவின் மனைவியும் பல இடங்களில் தேடி உள்ளனர். பிறகு சின்னசேலம் அருகே உள்ள செல்லியபாளையம் என்ற கிராமத்தில் உள்ள ரயில்வே சப்வே பாலம் அருகே உள்ள கிணற்றில் இளையராஜா பிணமாக கிடந்து உள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இளையராஜாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் சின்னசேலம் போலீசார் சடலத்தை கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேதபரிசாதனைக்காக அனுப்பி வைத்தனர்.பின்னர் இளையராஜாவின் தந்தை மாணிக்கம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் தனது மகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார்
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடை இவரது மகன் சுரேஷ் (வயது30), இவருக்கும் வீரமங்களத்தைச் சேர்ந்த உஷா (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    . இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ஆடி மாதம் பிறந்ததால், உஷாவை அவருடைய பெற்றோர் சொந்த ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்து சென்றனனர். அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று மனைவி உஷாவை பார்க்க சுரேஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சுரேஷ், அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து சுரேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 45 நாட்களில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×