search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BRIDEGROOM"

    • ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன.
    • இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது

    கடலூர்:

    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பம் புதுக்குலதெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது31),இவரது மனைவி ஆனந்தவள்ளி இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள்ஆகின்றன. இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. நேற்று மாலை இவர்களுக்குள் மீண்டும்சண்டை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜனார்த்தனன் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.

    அவரை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால்முத்தாண்டி குப்பம் போலீசில் புகார் செய்தனர்.காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையில் முத்தாண்டிகுப்பம் கிழக்கு தெருவில் உள்ள செந்தாமரை என்பவருக்கு சொந்தமான முந்திரி தோப்பில்ஜனார்த்தனன் கைலி துணியால்தூ க்குபோட்டுதற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.  இது பற்றி தகவல் அறிந்ததும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜனார்த்தனன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுமாப்பிள்ளை தூக்கில் பிணமாக தொங்கினார்
    • உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவுடை இவரது மகன் சுரேஷ் (வயது30), இவருக்கும் வீரமங்களத்தைச் சேர்ந்த உஷா (22) என்பவருக்கும் கடந்த 45 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    . இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், ஆடி மாதம் பிறந்ததால், உஷாவை அவருடைய பெற்றோர் சொந்த ஊரான வீரமங்கலத்திற்கு அழைத்து சென்றனனர். அதனைத் தொடர்ந்து சம்பவத்தன்று மனைவி உஷாவை பார்க்க சுரேஷ் அங்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே குடும்பத்தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்நிலையில் சுரேஷ், அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார், விரைந்து வந்து சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து சுரேஷின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அறந்தாங்கி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து ஆவுடையார் கோவில் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 45 நாட்களில் வாலிபர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×