புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

விருதுநகர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சொத்து பிரச்சினையால் விபரீதம் ஆனது.
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

விருதுநகர்

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை சேர்ந்தவர் சவுந்தரபாண்டி. இவரது மகன் சூரியபிரகாஷ் (வயது22). இவருக்கும், சந்தியா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கீழஉப்பிலிகுண்டுவில் சவுந்தரபாண்டிக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இதனை திருப்பி தருமாறு சூரியபிரகாஷ் தந்தையிடம் கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சூரியபிரகாஷ் கீழஉப்பிலிகுண்டுவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஆவியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com