search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavily intoxicated"

    • மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
    • மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார்.

    ஈரோடு, நீலகிரி மாவட்டம், கூடலூர், கோத்ராவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (44). இவரது மனைவி லைலா (38). இவர்களுக்கு 17,18 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    ராஜன், மதுவுக்கு அடிமையானதால் கருத்துவேறுபாடு ஏற்பட்டு மனைவி, குழந்தைகளைப் பிரிந்து ஈரோட்டுக்கு வந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

    அதிக அளவில் மது குடித்ததால் ராஜனுக்கு குடல் மற்றும் உடலின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்துள்ளார். ஆனாலும், டாக்டரின் அறிவுரையை ஏற்காமல் தொடர்ந்து மது குடித்து வந்த ராஜனுக்கு கடந்த 13-ந் தேதி உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனையில் உள் நோயாளியாக ராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில், நேற்று முன் தினம் மருத்துவ மனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த ராஜன், மேம்பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மீண்டும் மது குடித்துள்ளார். இதை யடுத்து, அவர் அங்கேயே இறந்துவிட்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த ராஜன் மனைவி லைலா, நேற்று ஈரோடு வந்து அவரது உடலை பெற்றுக் கொண்டார்.

    இதுகுறித்து, ஈரோடு அரசு மருத்துவமனை புறக் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×