search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓட்டல் உரிமையாளர்"

    • ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் வாட்டர் ஆபீஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆ னந்த் (42). இவரது மனைவி பிரேமா (32). இவர்கள் அதேபகுதியில் கடந்த 13 வருடங்களாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன் ஆனந்துக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 4 நாள்களாக ஆனந்த மிகவும் சோர்வாக இருந்துள்ளார். மனைவி பிரேமா அவரிடம் மருத்துவமனைக்கு போகலாம் என கேட்டதற்கு வேண்டாம் என ஆனந்த் கூறிவிட்டார்.

    இந்த நிலை யில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வழக்கம் போல ஓட்டலை பூட்டி விட்டு அங்கேயே கணவன்-மனைவி 2 பேரும் படுத்து தூங்கியுள்ளனர்.

    தொடர்ந்து அதிகாலை 4.30 மணிய ளவில் பிரேமா கண் விழி த்து பார்த்தபோது அருகில் ஆனந்த் இல்லாததால் பக்கத்து அறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஆனந்த் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசு தலை மை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஆனந்த் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
    • கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் ஏர்வாடி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இன்று காலை இவர் வள்ளியூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்த கணேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கணேசன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.

    • ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்மாபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது44). ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று கடைக்கு சாமான் வாங்குவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இதைத்தொ டர்ந்து ஸ்ரீவில்லி புத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் சுரேஷ்கு மாரின் மனைவி காளீஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சந்திரகிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராஜ். இவரது மகன் மாரீஸ்வரன் (24). இவர் ராமநாத புரத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். ஊருக்கு வந்து விட்டு கடந்த7-ந் தேதி மீண்டும் ராமநாதபுரம் சென்றார். ஆனால் ஜவுளி கடைக்கு செல்லவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப் பட்டு ள்ளது. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொ டர்ந்து ஆம த்தூர் போலீஸ் நிலையத்தில் மகனை கண்டு பிடித்து தருமாறு சங்கர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா

    ரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார்.
    • பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவர் அதே பகுதியில் கோவை செல்லும் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இவரது மனைவி இமாக்குலேட் கீதா (49). இவர் திருப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

    இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்களாகிறது. குழந்தைகள் இல்லை. ஆனந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது மனைவி பணிபுரிந்து வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில், இமாக்குலேட் கீதா திருச்சியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றிருந்தார். ஆனந்த் மட்டும் வீட்டில் இருந்துள்ளார்.

    நேற்று காலை சுமார் 8 மணியளவில் வீட்டில், பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

    அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அவினாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஓட்டலில் உள்ள கழிவறைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
    • நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஓட்டல் உரிமையாளர்களுடன் மாநகராட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்தில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சியை மாநிலத்தி லேயே முதல் மாநகராட்சி யாக கொண்டு வர வேண்டும் என்பதே எங்களது நோக்கமாகும். கடந்த 5 மாதங்களில் மாநகராட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி உள்ளோம். தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இந்த நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள ஒரு சில ஓட்டலில் உணவு தயாரிக்கும் முறை வேதனை அளிப்பதாக உள்ளது. தெருக்களில் உணவு பொருட்கள் மற்றும் பலகாரங்கள் தயாரிக்கப்படு கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. உணவை மட்டும் சுத்தமாக வைத்துக் கொண்டால் போதாது.

    ஓட்டலில் உள்ள கழிவறை களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நள்ளிரவு கடையில் உள்ள கழிவு பொருட்கள் ரோடுகளில் கொட்டப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகரை சுத்தமான மாநகராட்சியாக மாற்றி காட்ட வேண்டும். இதற்காக தூய்மை பணியாளர்கள் முழுமூச்சுடன் செயல் பட்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஏராளமான டீக்கடைகள் உரிமங்கள் இல்லாமல் செயல்பட்டு வருகிறது. அனைத்து ஓட்டல்கள், டீக்கடைகளிலும் மாநகராட்சியில் சொத்து வரி செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பெறாத டீக்கடைகள், ஓட்டல்கள் மீது இனிவரும் காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டலில்மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து வழங்க வேண்டும்.

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் தற்போது தினமும் 100 டன் குப்பைகள் வருகிறது. இதில் 35 டன் குப்பைகள் மட்டுமே தரம் பிரிக்கப்படுகிறது. 65 டன் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தான் கொட்டப்பட்டு வருகிறது. பார்வதிபுரம் பகுதியில் ஏற்கனவே டீக்கடையில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இது போன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்க வேண்டும். கடைகளை ஆக்கிரமித்து கட்டக்கூடாது. ஆக்கிரமித்துக் கட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக யாரும் சிபாரிசுக்கு வரக்கூடாது. கடைகளை தொடர்ந்து வீடுகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆணையாளர் ஆனந்த மோகன், உணவு பாதுகாப்பு அதிகாரி செந்தில்கு மார், மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமார், மாநகராட்சி கவுன்சிலர் அக்சயா கண்ணன், மாநகராட்சி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் குமார பாண்டியன், மாநகராட்சி சுகாதார ஆய்வா ளர்கள் மாதவன் பிள்ளை, ராஜேஷ், பகவதி பெருமாள், தியாக ராஜன், சத்யராஜ்,ராஜா, நகரமைப்பு அதிகாரி விமலா, ஆய்வாளர் கெபின் ஜாய் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செந்தில்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
    • பாண்டி செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்

    கோவை:

    கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர் நகர பஸ் நிலையம் அருகே ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.

    இவரது மனைவி பாண்டி செல்வி (27). மது பழக்கத்துக்கு அடிமையான செந்தில்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் மனவேதனை அடைந்த பாண்டி செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் மனைவி கோபித்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

    வீட்டிற்கு திரும்பிய பாண்டி செல்வி கணவர் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள ராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (48). லோடுமேன். சம்பவத்தன்று இவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மதுவுடன் ஆசிட்டை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராம்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெரைட்டிஹால் ேராடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
    • நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி பிளாக் 29 சேர்ந்தவர் வெங்கடேசன். (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டலில் மூடி விட்டு வெளியில் படுத்து தூங்கினார்‌. பின்னர் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சேலம் அருகே பரோட்டா கேட்டு ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க. கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் மீது புகார் செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் கோணகாபாடி பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி. தனியார் பஸ் டிரைவர். இவரது மகன் செந்தில்குமார். இவர் சேலம் மெயின் ரோடு தண்டுமாரியம்மன் கோவில் அருகே கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த திங்கட்கிழமை தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் என்பவர் செந்தில்குமார் கடைக்குச் சென்று பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது பரோட்டா இலவசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சாப்பிட்டு விட்டு சென்ற அரவிந்த் அடுத்த நாள் மது போதையில் கூட்டாளிகள் 4 பேருடன் செந்தில்குமாரின் ஓட்டலுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

    இதில் செந்தில்குமாரின் கண் மற்றும் நுரையீரல் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது திமுக கவுன்சிலர் செல்வி மகன் அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் இலவசமாக பரோட்டா கேட்டு என்னை தகாத வார்த்தையில் பேசி அடித்தனர். இதுபற்றி நான் போலீசில் கொடுத்த வழக்கை திரும்பப் பெறுமாறும், இல்லை என்றால் ஓட்டலை நடத்த முடியாது எனக் கூறி மிரட்டி வருகின்றனர். இதனால் மீண்டும் கடை நடத்த பயமாக உள்ளது. எனவே காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து மீண்டும் கடையை நடத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    ×