search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel snatcher"

    • காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
    • மர்ம நபர்கள் மூதாட்டியை தாக்கி நகையை கொள்ளையடித்து சென்றனர்

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீனவ கிராமம் அண்ணா சாலை தெருவை சேர்ந்த நாராயணசாமி மனைவி இருதாயி (வயது 70).

    இவர் கீற்று கயிறு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார்.

    இவரது மகள், மகன்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    கடையில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு இருதாயி தனியாக வாழ்ந்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு உள்ளே படுத்து உறங்கி உள்ளார்.

    நள்ளிரவு சுமார் 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த இருவர் இருதாயி முகத்தை துணியை போட்டு மூடிவிட்டு அவரை தாக்கி கழுத்தை நெரித்துள்ளனர்.

    காயங்களுடன் மயங்கிய மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின் மற்றும் தோடு உள்ளிட்ட 6½ பவுன் நகைகளை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

    காலையில் அவ்வழியே சென்றவர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து என தெரியவந்தது.

    திருமங்கலம்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஞானகுரு. இவரது மனைவி தங்கேஸ்வரி(வயது40). இவர்களது மகள் கவிதா. நேற்று திருநகரில் உள்ள தனது தந்தையை பார்ப்பதற்காக தங்கேஸ்வரி தனது மகளுடன் புறப்பட்டார். இதற்காக வத்திராயிருப்பில் இருந்து பஸ்சில் திருமங்கலம் வந்த அவர்கள் திருநகர் செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர்.

    அப்போது திடீரென ஒரு வாலிபர் கவிதா அணிந்திருந்த 1 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடினார். உடனே அங்கு ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த விருதுநகரை சேர்ந்த சில போலீசார் விரைந்து செயல்பட்டு நகை பறித்த அவரை விரட்டிச்சென்று பிடித்தனர். திருமங்கலம் நகர் போலீசில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கரிசல்பட்டியை சேர்ந்த மாரிமுத்து(29) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    • பண்ருட்டி அருகேபெண்ணிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
    • நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காடாம்பு லியூர்கொஞ்சிகுப்பம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் சத்யானந்தன் இவரது மனைவி ராதா (37). இவர், காடாம்புலியூர் மாயா கார்டன் ரவி என்பவரின்தோப்பில் ஆடு மேய்த்து கொண்டிருந்தார்அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர்இவரை மிரட்டி இவர் அணிந்து இருந்த செயின்மற்றும் செல்போ னை பறித்துசென்றா ர்.

    இதுகுறித்து காடாம்பு லியூர் போலீசா ர்வழக்குபதிவுசெய்து விசா ரணை நடத்திவந்தனர். கடலூர் எஸ்பி சக்தி கணேஷ் உத்தரவின் பேரின் பண்ருட்டி துணைபோலீ ஸ்சூப்பிரண்ட் சபியுல்லா மேற்பார்வையில் காடாம்பு லியூர் இன்ஸ்பெக்ட ர்ராஜதாமரை பாண்டியன்,சப்இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், போலீசார் ரகு மர்மஆசாமியை வலைவீசி தேடி வந்தனர்.

    நேற்று சாத்திப்பட்டு பஸ்நிறுத்தம் அருகில் போலீசா ர்வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் போலீசை கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையி ல்காடாம்புலியூர் அடுத்த தெற்குமேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் ( 27 ) என தெரிய வந்தது. இவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணிடம் நகை பறித்தை ஒப்பு க்கொண்டார்

    இதனை தொடர்ந்துஅவரை கைது செய்துஅவரிடமிருந்து நகை செல்போன் ஆகியவைபோலீசார் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில்அடைத்தனர்

    • நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
    • நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    நெய்வேலி பிளாக் 29 சேர்ந்தவர் வெங்கடேசன். (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டலில் மூடி விட்டு வெளியில் படுத்து தூங்கினார்‌. பின்னர் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×