search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்து டப்பாவில்"

    • சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.
    • சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அப்பாஸ் (29). வெல்டர். இவரது மனைவி சிம்ரான் (28). இவர்களுக்கு 3 வயதில் சையத் அத்னான் என்ற மகன் உள்ளான்.

    சிம்ரான் அதே பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் செயல்பட்டு வரும் பிளா ஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். சிம்ரான் வேலைக்கு செல்லும்போது குழந்தை சையத் அத்னானையும் உடன் அழைத்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்றபோது அங்கிருந்த தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த சையத் அத்னான் தோட்டத்தில் கிடந்த காலி மருந்து டப்பாவில் தண்ணீர் பிடித்து குடித்து விட்டான்.

    சிறிது நேரத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்ட குழந்தையை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை சையத் அத்னான் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×