search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை"

    • இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பூமாரி(வயது27). இவரது கணவர் தங்கபாண்டி, இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மனைவியில் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கபாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த பூமாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன்(38). இவரது மனைவி புவனேசுவரி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது. மாரீசுவரன் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த மாரீசுவரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூலி தொழிலாளி-முதியவர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை சொக்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் தனபாலகிருஷ்ணன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அவர் எந்நேரமும் குடித்து விட்டு ஊர் சுற்றினார். இதை மனைவி தட்டி கேட்டார். இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனபால கிருஷ்ணன், சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மதுரை புலிப்பட்டியை சேர்ந்தவர் பூசாரி (வயது 70). இவருக்கு நீரிழிவு நோய் இருந்து வந்தது. இதனால் அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து நோயின் பாதிப்பு அதிகரித்து வந்ததால் அவர் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து பூசாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா(21). இவர் கல்லூரியில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். அக்சயாவின் வீடு 3-வது மாடியில் உள்ளது.

    நேற்று காலை வீட்டில் இருந்தபோது 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அக்ச யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புற்றுநோய் பாதித்த பெண்

    நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பை சேர்ந்தவர் பிச்சைக்கனி மனைவி மும்தாஜ் பேகம்(வயது 60). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மும்தாஜ் பேகம் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மூதாட்டி

    ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் பெருமாள் மனைவி சீனி புஷ்பம் (62). இவருக்கு நெஞ்சு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனி புஷ்பம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    வாலிபர்

    விளாச்சேரி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (30). இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவியை விவாகரத்து செய்தார். தனியாக வசித்து வந்த முகமது உசேனுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. நேற்று மதியம் அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 32). இவரது மனைவி தீபிகா.

    குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் மன விரக்கியில் இருந்த சரேஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்,

    • மீனவர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, 2-வது நாளில் குழந்தை மெர்ஜித் உடலும் மீட்கப்பட்டது.
    • ஆட்டோ டிரைவரிடம் கூறிச் சென்ற அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அது ஏன்? என்பது தான் மர்மமாக உள்ளது

    கன்னியாகுமரி :

    மார்த்தாண்டம் அருகே உள்ள மாமூட்டுக்கடை பகுதியை சேர்ந்தவர் மெல்பின் (வயது 37).இவர் மாலத்தீவில் வேலை பார்த்து வந்த நிலையில் மனைவி சசிகலா (32) மகன் மெர்ஜித் (3½) ஆகியோர் இங்கு வசித்து வந்தனர்.

    சம்பவத்தன்று மகனுடன் ஆட்டோவில் மண்டைக் காடு அருகே உள்ள வெட்டு மடை கடல் பகுதிக்கு சசிகலா சென்றுள்ளார். அங்கு திடீரென மகனை கடலில் வீசிய அவர் தானும் கடலில் குதித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.அவர்களை சவாரி அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர், நீண்ட நேரமாக சசிகலா வராதது குறித்து அந்த வழியே சென்றவரிடம் தெரிவித்த பிறகு தான், சசிகலா தற்கொலை செய்த விவரமே தெரியவந்தது.

    தொடர்ந்து சசிகலா உடல் கடலில் மிதந்ததால் உடனடியாக மீட்கப்பட்டது. ஆனால் குழந்தை உடல் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சசிகலா உடலை மீட்டு போலீசார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மீனவர்களின் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, 2-வது நாளில் குழந்தை மெர்ஜித் உடலும் மீட்கப்பட்டது.

    இந்த நிலையில் மாலத் தீவில் இருந்து மெல்பின் ஊர் வந்து சேர்ந்தார். அவர் வெட்டுமடை கடல் பகுதிக்கு வந்தார்.அங்கு மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.அவருக்கு உறவின ர்கள் ஆறுதல் கூறினர்.

    பின்னர் குழந்தையின் உடலையும் மரைன் போலீ சார் பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாய், மகன் இருவரது உடல்களும் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மெல்பினிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    குளச்சல் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமை யிலான போலீசார் காதல் திருமணம் செய்த சசிகலா, கணவர் வெளிநாட்டில் இருக்கும் நிலையில், மகனுடன் கடலில் குதித்து தற்கொலை செய்தது ஏன்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவரது உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். பத்ம நாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக்கும், வெட்டுமடை வந்து சசிகலாவின் உறவின ர்களி டம் விசா ரணை நடத்தினார்.

    சசிகலா வீட்டில் இருந்து தனது தாய் மற்றும் மகனுடன், பிரசன்னம் பார்ப்பதற்காக தான் சென்றுள்ளார். பின்னர் தாயை மட்டும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, மகனுடன் ஆட்டோவில் மண்டைக்காடு அருகே உள்ள வெட்டு மடைக்கு வந்துள்ளார்.

    வழியில் பிரியாணி பார்சலும் வாங்கிய அவர், கடற்கரையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர் கை கழுவி வருவதாக ஆட்டோ டிரைவரிடம் கூறிச் சென்ற அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார். அது ஏன்? என்பது தான் மர்மமாக உள்ளது. இது குறித்து போலீ சார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது.
    • பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரேமா (வயது 35). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கணவன் -மனைவிக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரேமா சேலம் சூரமங்கலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராசிபுரத்தில் இருந்து பஸ் ஏறி சேலத்திற்கு வந்தார்.

    பின்னர் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர், அந்த ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திட்டில் படுத்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள் இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேமாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரேமா திருவாக்கவுண்டனூர் பைபாஸில் பஸ்சை விட்டு இறங்கியதும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    • வடமாநில தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு ராமுத் தாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமார் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று முத்துக்குமார் மது குடித்து விட்டு தகராறு செய்வதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சங்கர்செவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தூக்குப்போட்டு ராமர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம், நாரிபாரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (19). இவரும், இவரது சகோதரர் அசோக் குமாரும் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ராகுல் சொந்த ஊர் சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சகோதரர் அசோக் குமார் கொடுத்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து இவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார்.
    • இதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை கரைத்து குடித்துவிட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோட்டு வீராம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது கணவர் ரவி. இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார். இவர்களுக்கு ரேகா (25) என்ற மகளும், பூபதி (22) என்ற மகனும் உள்ளனர்.

    11-ம் வகுப்பு வரை படித்துள்ள பூபதி செண்ட்ரிங் வேலை செய்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான பூபதிக்கு இதய நோய் பாதிப்பும் இருந்து வந்துள்ளது.

    இதனால் அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இந்த நிலையில் மதுவுக்கு அடிமையானதாலும், நோய் பாதிப்பு காரணமாகவும் பூபதி மனமுடைந்து காணப்பட்டார். அதன் காரணமாக பூபதி சம்பவத்தன்று இரவு சாணிப்பவுடரை (விஷம்) கரைத்து குடித்துவிட்டார்.

    இதனால் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சற்று மனநலம் பாதிக்கப்பட்டு  திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்தார்.
    • வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் விஜய பாஸ்கர் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 9 -வது வார்டு பகுதியில் உள்ள பாட்டப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம், லட்சுமி தம்பதியரின் மகன் விஜயபாஸ்கர் (வயது 47).

    இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு  திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்து வந்தார். அதே நிலையில் இருதய நோயால் அவதிப்பட்டும் வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோர், உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் விஜய பாஸ்கர் தூக்கில் பிணமாக ெதாங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்து தெரியவந்தது. இதுபற்றி விஜய பாஸ்கரின் தாய்

    லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    • வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.
    • மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்த

    நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழி லாளி தங்கராஜ் (வயது 38). இவருக்கும் வாழப்பாடி அடுத்த சிட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தி என்பவருக்கும், 16 ஆண்டுக்கு முன் திருமணமாகி, 12 வயதில் மகன் உள்ளான்.

    தங்கராஜிற்கு குடிப்ப ழக்கம் ஏற்பட்டதால், கண வன் –மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையே, தீபாவளி பண்டிகை தருணத்தில், நடுப்பட்டியில் இருந்து சிட்டாம்பட்டியிலுள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு ஆனந்தி சென்றுள்ளார். ஒரு வாரம் கடந்தும் இவர் தனது கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

    இந்நிலையில், நேற்று மாலை, சிட்டாம்பட்டி யிலுள்ள மாமனார் வீட்டிற்கு சென்ற தங்கராஜ், தனது மனைவியை தன்னுடன் வீட்டிற்கு வரு மாறு அழைத்துள்ளார். மனைவி வர மறுத்ததால் மதுபோதையில் இருந்த தங்கராஜ் மனமுடைந்து, பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்துள்ளார்.

    மயங்கிக்கிடந்த இவரை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாப மாக உயிரிழந்தார். இது குறித்து வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மில்கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்து விட்டதால் மனமுடைந்த பாஸ்கர்பாபு வீட்டில் தூக்குப்பபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீடு கடந்து 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாஸ்கர்பாபுவின் தங்கை லட்சுமிபிரபாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பாஸ்கர் பாபு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×