search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
    X

    இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

    • கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது.
    • பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கோம்பைக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பிரேமா (வயது 35). இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம், மேலும் சரவணனுக்கு மனைவியின் மீது சந்தேகம் இருந்து வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று காலை கணவன் -மனைவிக்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பிரேமா சேலம் சூரமங்கலம் நகரமலை அடிவாரத்தில் உள்ள தனது உறவினரை பார்த்து விட்டு வருவதாக கூறிவிட்டு ராசிபுரத்தில் இருந்து பஸ் ஏறி சேலத்திற்கு வந்தார்.

    பின்னர் சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் பஸ்சை விட்டு இறங்கிய அவர், அந்த ரவுண்டானா பகுதியில் உள்ள ஒரு திட்டில் படுத்து மயங்கி கிடந்தார். இதை கண்ட அந்த பகுதி மக்கள் இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கும், 108 ஆம்புலன்ஸ்சுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேமாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பிரேமா விஷம் குடித்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இரவு 10 மணி அளவில் பிரேமா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகார் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரேமா திருவாக்கவுண்டனூர் பைபாஸில் பஸ்சை விட்டு இறங்கியதும் விஷம் குடித்துள்ளார் என்பது தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    Next Story
    ×