search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை

    • வடமாநில தொழிலாளி உள்பட 4 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள சித்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 27). இவருக்கு 5 வருடங்களுக்கு முன்பு ராமுத் தாய் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமார் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று முத்துக்குமார் மது குடித்து விட்டு தகராறு செய்வதை மனைவி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் முத்துக்குமார் தூக்குப்போட்டு தற்கொ லை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை முத்துராமன் கொடுத்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள சங்கர்செவல் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (34). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தூக்குப்போட்டு ராமர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம், நாரிபாரி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (19). இவரும், இவரது சகோதரர் அசோக் குமாரும் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலை ஒன்றில் வேலை செய்து வந்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் ராகுல் சொந்த ஊர் சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அவர் விரக்தியடைந்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள புளியமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். தகவலறிந்த போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து ராகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து சகோதரர் அசோக் குமார் கொடுத்தபுகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி பிச்சாண்டி தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து இவரது தாய் தங்கமாரி கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×