search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people including"

    • இளம்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெருமாள்பட்டியை சேர்ந்தவர் பூமாரி(வயது27). இவரது கணவர் தங்கபாண்டி, இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    மனைவியில் நடத்தையில் சந்தேகப்பட்டு தங்கபாண்டி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த பூமாரி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மாரீசுவரன்(38). இவரது மனைவி புவனேசுவரி. இவர்களுக்கு திருமணமாகி 11 வருடமாகிறது. மாரீசுவரன் மது பழக்கத்திற்கு அடிமையானார்.

    இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழக்கையில் விரக்தியடைந்த மாரீசுவரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×