search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
    X

    வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

    • வீட்டின் மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் அக்சயா(21). இவர் கல்லூரியில் முதுகலை அறிவியல் படித்து வந்தார். அக்சயாவின் வீடு 3-வது மாடியில் உள்ளது.

    நேற்று காலை வீட்டில் இருந்தபோது 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அக்ச யாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் மீட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது தெரியவில்லை. இது குறித்த புகாரின்பேரில் எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புற்றுநோய் பாதித்த பெண்

    நெல்பேட்டை சீனி ராவுத்தர் தோப்பை சேர்ந்தவர் பிச்சைக்கனி மனைவி மும்தாஜ் பேகம்(வயது 60). இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த மும்தாஜ் பேகம் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மூதாட்டி

    ஆத்திகுளம் பழனிச்சாமி நகர் பெருமாள் மனைவி சீனி புஷ்பம் (62). இவருக்கு நெஞ்சு வலி இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனி புஷ்பம் சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர்.

    வாலிபர்

    விளாச்சேரி, தெற்கு முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் முகமது உசேன் (30). இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மனைவியை விவாகரத்து செய்தார். தனியாக வசித்து வந்த முகமது உசேனுக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. நேற்று மதியம் அவர் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×