என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்15 Sep 2022 8:52 AM GMT
- ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மில்கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்து விட்டதால் மனமுடைந்த பாஸ்கர்பாபு வீட்டில் தூக்குப்பபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீடு கடந்து 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாஸ்கர்பாபுவின் தங்கை லட்சுமிபிரபாவிற்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பாஸ்கர் பாபு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X