search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
    X

    மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை

    • ராஜபாளையத்தில் மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மில்கிருஷ்ணாபுரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் பாபு (வயது 34). கூலித்தொழிலாளி. இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பாக கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் மனைவி பிரிந்து விட்டதால் மனமுடைந்த பாஸ்கர்பாபு வீட்டில் தூக்குப்பபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீடு கடந்து 2 நாட்களாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் பாஸ்கர்பாபுவின் தங்கை லட்சுமிபிரபாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டை திறந்து பார்த்தபோது பாஸ்கர் பாபு தற்கொலை செய்து பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதுபற்றி ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×