search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடை உரிமையாளர்"

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட கூட்டப்புளி கிழங்குவிளையைச் சேர்ந்தவர் பிஜு (வயது 38) இவர் படந்தாலுமூட்டில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.

    இங்கு திருமணமான 20 வயது இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். அவரை மிரட்டி அருகே நின்று, பிஜு போட்டோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்ப மாக இருந்ததால், இளம் பெண் பணிக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிஜு, இளம்பெண்ணுடன் தான் இருக்குமாறு எடுத்த போட்டோக்களை அவரது கணவர் மொபைல் போனுக்கு அனுப்ப போவ தாக மிரட்டி உள்ளார். மேலும் மற்றொரு மொபைல் போனிலிருந்து அந்தப் போட்டோக்களை பெண்ணின் கணவருக்கு அனுப்பி உள்ளார். இதனால் பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாயார் வீட்டுக்கு வந்த பெண் எறும்பு பொடி(விஷம்) யை தண்ணீரில் கலக்கி குடித்து உள்ளார்.

    இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து களியக்கா விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்கு மார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து பிஜூவை தேடி வருகின்றனர்.

    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர்
    • போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே சுல்தான்பேட்டையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் அருந்தி அதிகமானோர் தற்கொலை செய்கின்றனர் எனவும், இதற்கு முக்கிய காரணம் அப்பகுதியில் தங்குதடையின்றி சாணி பவுடர் கிடைப்பது தான் எனவும் புகார்கள் வந்தன.

    இதனையடுத்து நேற்று சாணி பவுடர் விற்கும் கடைகளில் சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது சுல்தான்பேட்டை பஸ் நிலையம் அருகே உள்ள மளிகைக் கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மஞ்சள் சாணி பவுடர் இருப்பது தெரியவந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார் கடை உரிமையாளரான மாரிமுத்து என்பவரை கைது செய்து கடையில் இருந்த 10 பாக்கெட் பவுடரை பறிமுதல் செய்தனர்.

    ×