search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக காங்கிரஸ்"

    • தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    மதுரை:

    புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு பிரதமர் எந்த அளவுக்கு பொய் செல்ல வேண்டுமோ அந்த அளவையும் மீறி பிரதமர் மோடி பொய் சொல்லி வருகிறார். தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆளும் மாநிலங்களை பிரதமர் புறக்கணித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னை மற்றும் தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை பெய்து மக்கள் பாதிக்கப்பட்டனர். அமைச்சர்களும், அதிகாரிகளும் ஒன்றாக சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தமிழக மக்களை புறக்கணித்ததுடன் இதுவரை நிவாரணத்துக்கான எந்த உதவியைுயம் செய்யவில்லை. தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொண்டு வந்ததாக பொய் பிரசாரம் செய்து வருகிறார். அவ்வாறு செய்திருந்தால் அதை பட்டியலிட்டு கூற வேண்டும். ராமேசுவரம், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற பிரதமர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களை சந்திக்கவில்லை.

    10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலின்போது கூறிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டு வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வந்து ஒவ்வொரு கணக்கிலும் 15 ஆயிரம் ரூபாய் செலுத்துவோம் என்று கூறினார். அதை நிறைவேற்றவில்லை. வேலையில்லா திட்டாட்டம், வறுமையால் மக்கள் அவதிப்படுகின்றனர். சிறு-குறு தொழில்கள் மூடப்பட்டுவிட்டன. மின் கட்டணம் உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என மக்கள் அவதிப்படுகின்றனர்.


    மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை குறை சொல்வதை மட்டுமே பிரதமர் செய்து வருகிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு எந்த வேலையும் நடக்கவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அதன் பிறகும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரியிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசினார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. தற்போது புதுச்சேரியில் சாராய ஆறு தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் செய்த சாதனைகளை பா.ஜனதா அரசு செய்ததாக மோடி கூறி வருகிறார்.

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. 2024 தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். அப்போது பா.ஜனதா வீட்டுக்கு அனுப்பப்படும். பா.ஜனதாவிடம் கூட்டணி சேர ஒரு கட்சிக்கூட முன்வரவில்லை. இந்தியா கூட்டணியில் 28 கட்சிகள் உள்ளன. அமெரிக்காவில் கூட இன்றும் வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அதே போல் இந்தியாவிலும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
    • ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்டு பேசியதாவது :-

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில நலன்களை பணயம் வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது.
    • 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் பிரதானமாக இடம் பிடித்துள்ளன.

    இந்த கூட்டணியில் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே ராமநாதபுரம், நாமக்கல் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    மற்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. மற்றும் இடது சாரி கட்சிகள் கடந்த தேர்தலை விட இந்த தடவை கூடுதல் தொகுதி கள் கேட்பதால் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அந்த கட்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆரணி, திருவள்ளூர், கரூர், திருச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, தேனி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் தேனி தொகுதியை தவிர மற்ற 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

    இந்த தடவை தங்களுக்கு 12 தொகுதிகள் தரவேண்டும் என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு தி.மு.க.-காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு சம்பந்தமாக சந்தித்து பேசியபோது 15 தொகுதிகள் கொண்ட பட்டியலை கொடுத்து அதில் 12 தொகுதிகளை ஒதுக்கி தர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.


    ஆனால் இதை தி.மு.க. ஏற்கவில்லை. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் சந்தித்து பேசலாம் என்று முடிவு செய்தனர்.

    ஆனால் 3 வாரம் கடந்த நிலையில் தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்கள் இன்னமும் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு உட்காரவில்லை. மற்ற தோழமை கட்சிகளுடன் தி.மு.க. தலைவர்கள் 2-வது கட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்து விட்ட நிலையில் காங்கிரசுக்கு மட்டும் இன்னமும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இதன் காரணமாக தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எதிர்பாராத தேக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மாற்றப்பட்டு புதிய தலைவராக செல்வபெருந்தகை பொறுப்பு ஏற்றதும் மீண்டும் பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தரப்பில் 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதால் இந்த இழுபறியை முடிவுக்கு கொண்டு வர தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    நேற்று அவர்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் அஜோய்குமாருடன் ஆலோசனை நடத்தினார்கள். பிறகு அஜோய்குமார், செல்வபெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி மனோகரன் ஆகிய 4 பேரும் நேற்று மாலை 6.30 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக அவர்களது ஆலோசனை கூட்டம் நீடித்தது.

    கூட்டம் முடிந்ததும் நிருபர்களிடம் அஜோய்குமாரும், செல்வபெருந்தகையும் பேசுகையில், "தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று கூறினார்கள். ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது தெரிய வந்துள்ளது.


    தற்போதைய சூழ்நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கு 3 விதமான பிரச்சினைகளே முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. இந்த 3 முக்கிய பிரச்சினைகள் வருமாறு:-

    1. காங்கிரஸ் கேட்கும் 12 தொகுதிகளை தர இயலாது என்று தி.மு.க. உறுதிப்பட கூறி இருக்கிறது. 8 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தெளிவுப்படுத்தி உள்ளது.

    2. கடந்த தடவை போட்டியிட்ட தொகுதிகளில் சிலவற்றை இந்த தடவை தர இயலாது. சுழற்சி முறையில் இந்த தடவை வேறு தொகுதிகள் ஒதுக்கப்படும். அதை ஏற்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை காங்கிரஸ் ஏற்க தயங்குகிறது.

    3. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் கூட்டணியில் சேர்க்க சம்மதித்து உள்ள தி.மு.க. கமல்ஹாசனுக்கான தொகுதியை காங்கிரஸ் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளது. இது காங்கிரஸ் தலைவர்களை கூடுதல் நெருக்கடிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

    இந்த 3 பிரச்சினைகளும் நாளுக்கு நாள் இடியாப்ப சிக்கலாகவே மாறி வருகிறது. உதாரணத்துக்கு தொகுதிகளை மாற்றுவதால் காங்கிரஸ் தலைவர்கள் தவிப்புக்குள்ளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சி தொகுதியை துரை வைகோவுக்காக ம.தி.மு.க. கேட்கிறது. இதனால் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார்.

    ஆனால் அதற்குள் ராமநாதபுரம் தொகுதி முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கப்பட்டு விட்டது. அதுபோல கமல்ஹாசனுக்கு எந்த தொகுதி கொடுப்பது என்பதில் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த தேக்கத்துக்கு யார் காரணம்? என்பது தி.மு.க.விலும், காங்கிரசிலும் தலைவர்கள் மட்டத்தில் புரியாத புதிராக இருந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் காங்கிரசுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தர இயலும் என்று தி.மு.க. புதிதாக உறுதி செய்யப்படாத ஒரு தகவலும் உலா வந்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய யூகங்களுக்கும், தேக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் தி.மு.க. தலைவர்களும், காங்கிரஸ் தலைவர்களும் மீண்டும் அமர்ந்து பேச வேண்டும். ஆனால் தி.மு.க. இதுவரை காங்கிரஸ் தலைவர்களை அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    அவர்கள் அழைக்காமல் நாம் எப்படி மீண்டும் செல்வது என்று காங்கிரஸ் தலைவர்கள் தடுமாற்றத்துடன் தயங்கி கொண்டு இருக்கிறார்கள். டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்களும் இந்த சூழ்நிலையை சற்று கவலையுடன் பார்க்கிறார்கள். நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கூட, "தி.மு.க. என்ன முடிவு செய்யும்? அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும்?" என்பது பற்றிதான் நீண்ட நேரம் விவாதம் செய்து இருக்கிறார்கள்.

    கடைசியில் இன்னும் 2 நாட்கள் பொறுமையாக காத்திருக்கலாம். ஓரிரு நாட்களில் தி.மு.க.விடம் இருந்து நல்ல பதில் வரும் என்று டெல்லி மேலிட காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் இருந்து நேற்று இரவே சென்னைக்கு புறப்பட்டு வந்துள்ளனர்.

    அவர்கள் தி.மு.க.வுடன் மீண்டும் எப்போது பேசுவார்கள் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது இதே மாதிரியான சூழ்நிலைதான் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் இடையே நிலவியது. அந்த சமயத்தில் மத்திய மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்தின் மீது தி.மு.க. தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

    இதன் காரணமாகவே காங்கிரசுடன் பேச்சுவார்த்தையில் நீண்ட இழுபறி நீடித்தது. கடைசியில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அதிரடியாக தி.மு.க. அறிவித்தது. இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

    மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள். எனவே தி.மு.க.வுடன் சுமூகமான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க எதிர்பார்ப்புடன் உள்ளனர். சென்னையிலும், டெல்லியிலும் மாறி மாறி நடந்த ஆலோசனையில் இதுவரை எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படாத நிலையில் இந்த தேக்கத்துக்கு எப்போது விடை கிடைக்கும் என்ற கேள்விக்குறி தி.மு.க.-காங்கிரஸ் இரு கட்சி நிர்வாகிகளிடமும் எழுந்து உள்ளது.

    • மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது.
    • கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

    மற்ற கட்சிகள் அனைத்தும் கூடுதல் தொகுதிகளை கேட்டு வருகிறது. இதனால் உடன்பாடு ஏற்படுவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் பற்றி ஆலோசிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயம் வந்தார். அங்கு பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அடுத்ததாக கூட்டணி கட்சியினரை எந்தெந்த தேதிகளில் பேச்சு வார்த்தைக்கு அறிவாலயத்துக்கு அழைப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    மேலும் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    அறிவாலயம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ. சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது கட்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.

    • தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான்.
    • தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை? என்பது இன்னும் முடிவாகாமலேயே உள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க.வுடன் தமிழக காங்கிரசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு பயணமான இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது நடந்த விஷயங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இருவரும் சென்னை திரும்பினார்கள்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக செல்வபெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த இடங்களில் களம் காண்பது என்பது பற்றியெல்லாம் தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும். காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கி தரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு செல்வ பெருந்தகை கூறினார்.

    • இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.
    • புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து இன்று ஊர்வலம், மறியல், ஆர்ப்பாட்டம், பந்த் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பந்த், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் இன்று நடந்தது. இந்த போராட்டம் 2 பிரிவாக நடந்தது. இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வின் தொழிற்சங்கம், தொ.மு.ச. தனியாக ஊர்வலம் நடத்தினர்.

    தாவரவியல் பூங்கா அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சட்டமன்றம் பின்புறத்தை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அதேநேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் ஐ.என்.டி.யூ.சி., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யூ., எல்.எல்.எப்., எம்.எல்.எப்., ஏ.ஐ.யூ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து தனியாக போராட்டம் நடத்தினர்.

    நகர பகுதியில் 3 மணி நேர பந்த், கிராமப்புற பகுதிகளில் கடையடைப்புடன் போராட்டமும் நடத்தினர்.

    நகர பகுதியில் சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வலமாக வந்து மத்திய அரசின் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுவையில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஏற்கனவே மோதல் இருந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியை பெறுவதில் காங்கிரசுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே ஒருங்கிணைப்பு இல்லாததை தொழிற்சங்கங்களின் பிளவு வெளிப்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான்.
    • வேறு எந்த கட்சியும் இல்லை.

    உடுமலை:

    பா.ஜனதா கட்சி சார்பில் மோடி 3.0, வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஓ.பி.சி அணி, மருத்துவ பிரிவு, தொழில் பிரிவு, தமிழ் வளர்ச்சி பிரிவு, பிரசார பிரிவு சார்பில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராமசீனிவாசன் பேசியதாவது:-


    தமிழகத்திலேயே முதல் முறையாக உடுமலையில் மோடி 3.0 வேண்டும் மோடி மீண்டும் மோடி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் இருப்பினும் பா.ஜனதாவுக்கு பிரதான எதிர்க்கட்சி தி.மு.க. தான். வேறு எந்த கட்சியும் இல்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படும். இந்தியா கூட்டணி வருகின்ற நாட்களில் காணாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
    • தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமார் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை தனியாகவும் தேர்தல் பொறுப்பாளர்களை தனியாகவும் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அதைத் தொடர்ந்து அஜய் குமார் நிருபர்களிடம் கூறும்போது, "தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 28-ந்தேதி நடைபெறும்" என்றார்.

    ஏற்கனவே இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள். பின்னர் மேலிடம் தொகுதிகளை உறுதி செய்யும்.

    • காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது.
    • கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் திடீர் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் வெற்றி பெற்ற சுயேட்சை எம்.எல்.ஏ.வை அழைத்து பொங்கல் விழாவை நடத்தியது புதுவை தி.மு.க.வினர் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருவள்ளுவர் தினத்தில் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து புதுவை மாநில தி.மு.க. நிர்வாகிகள் பேசினர். இதனால் காங்கிரஸ், தி.மு.க. உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் அஜோய்குமார், ஹரீஸ் சவுத்ரி ஆகியோர் புதுவைக்கு வந்தனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளோடு அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம் என தி.மு.க.வுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் புதுச்சேரிக்கு வந்து பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தேர்தலை சந்திக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து பேசினர். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இம்முறை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் அமோக வெற்றி பெற அனைத்து தலைவர்களும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

    2 நாட்கள் முன்பு தி.மு.க. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தி.மு.க.வை சேர்ந்த சில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் வைத்தி லிங்கத்தையும், என்னையும் ஒருமையில் பேசி விமர்சனம் செய்து, கூட்டணி தத்துவத்தை மீறியுள்ளனர்.


    காங்கிரசை பொறுத்த வரை கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. தி.மு.க. தலைவர்கள் இந்தியா கூட்டணியில், மதச்சார்பற்ற கூட்டணியில் பல போராட்டங்களை இணைந்து நடத்தியுள்ளோம்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா அரசையும், அவர்களின் ஊழலையும், மத்திய மோடி அரசின் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

    இது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இது பாராளுமன்ற தேர்தல் நேரம். நானும், வைத்திலிங்கமும், முஸ்லிம் சமுதாயத்தினர் நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றோம்.

    மத ஒற்றுமை, மோடி அரசால் சிறுபான்மையினர் தாக்கப்படுவது, முதலமைச்சர் ரங்கசாமி ஆட்சியின் ஊழல், மக்கள் நலத்திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை விளக்கினோம்.

    அந்த கூட்டத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வான நேரு கலந்து கொண்டார். அவர் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. நாங்கள் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியைத்தான் விமர்சித்தோம். இதுதான் அங்கு நடந்தது. இதற்காக தி.மு.க. தலைவர்கள் எங்களை ஒருமையில் பேசி, விமர்சித்து, மக்கள் மத்தியில் எங்களுக்கு கெட்டபெயர் உருவாக்க சிலர் திட்டமிட்டு இந்த வேலையை செய்துள்ளனர்.

    நாங்கள் எந்த காலத்திலும் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. கூட்டணி தர்மத்தை மீறியது தி.மு.க.தான்.

    வில்லியனூர் தொகுதியில் ஷாஜகான் காங்கிரஸ் வட்டார தலைவராக இருந்தார். அவரை தி.மு.க.வில் சேர்த்தது யார்? மணவெளி தொகுதி காங்கிரஸ் செயல்தலைவர் சண்முகத்தை தி.மு.க.வில் இணைத்தது யார்? கூட்டணி தர்மத்தை மீறி இவர்கள் செயல்பட்டு விட்டு, காங்கிரஸ் கட்சியை பற்றி விமர்சிக்க தி.மு.க.வுக்கு எந்த உரிமையும் கிடையாது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்ய உரிமை உண்டு, கட்சியை வளர்க்க உரிமை உண்டு. தங்கள் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க உரிமை உண்டு. இதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தவறாக விமர்சித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

    முதலில் நாம் நம் நடவடிக்கையை சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் யாரிடமும் புகார் தெரிவிக்க மாட்டோம். இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளது. கூட்டணியில் தி.மு.க. குழப்பத்தை உண்டாக்க வேண்டாம்.

    சீட் ஒதுக்கீடு செய்வது கூட்டணி கட்சித் தலைவர்கள்தான். கூட்டணி கட்சி தலைவர்கள் என்ன சொன்னாலும், அதற்கு கட்டுப்படுவோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, 'இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவர் என்பதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வர். யாரை சொன்னாலும் அவர்களுக்கு வேலை செய்வோம்' என்றார். முதுகில் குத்தும் காங்கிரஸ் என தி.மு.க., கடுமையாக விமர்சனம் செய்துள்ளதே என அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அதை நாங்கள் நேரடியாக கேட்கவில்லை. எனவே அதை நாங்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் காதில் அப்படிப்பட்ட விமர்சனம் விழவில்லை என்றார்.

    • இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை.
    • கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம்.

    இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் சிக்கல் நீடிக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் கூடுதல் சீட் கேட்க முடிவு செய்துள்ளது.

    இதுபற்றி அந்த கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியில் பிரச்சினையே இல்லை என்று சொல்லவில்லை. ஆனாலும் தேர்தல் நெருங்க நெருங்க எல்லோரும் ஒன்றுபட்டு பா.ஜனதாவை வீழ்த்துவோம். எல்லா கட்சிகளுக்கும் கூடுதல் சீட்டுக்கான எதிர்பார்ப்பு இருக்கிறது. கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும்போது எங்கள் கருத்தை தெரிவிப்போம். கண்டிப்பாக கூடுதல் தொகுதிகளை தி.மு.க. தலைமையிடம் கேட்போம். தேர்தலில் தி.மு.க. எந்த நிதியும் எங்களுக்கு தந்தது கிடையாது. நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் தி.மு.க. வினரின் செலவுக்கு தேவைப்படும் நிதியை வாங்கி தி.மு.க.வினரிடமே கொடுத்து விட்டோம். இந்த முறையும் அப்படித்தான். அவர்களிடம் நிதி வாங்கி நாங்கள் தேர்தல் செலவுக்கு பயன்படுத்த மாட்டோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது.
    • காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணியை உடைக்கும் முயற்சியில் பா.ஜனதா மறைமுகமாக ஈடுபடுகிறது. அதற்கு துணை போகும் வகையில் சில கட்சிகளும் ராகுலை பிரதமராக ஏற்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர்.


    இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்த வேண்டும். அதை ஏற்காத கட்சிகளுடன் கூட்டணி தேவையில்லை. காங்கிரஸ் இதில் உறுதியாக இருக்க வேண்டும். அகில இந்திய கட்சியாக இருந்து கொண்டு மாநிலக் கட்சிகள் வளர காங்கிரஸ் துணைபோக கூடாது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்
    • காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி உறுப்பினர்கள் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொள்ள நெல்லை வந்துள்ளார்.

    இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா தலைமையில் மகளிர் அணி நிர்வாகிகள் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு அமைந்துள்ள காமராஜர், இந்திராகாந்தி சிலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு சேலையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் கட்சி அலுவலகம் வாசல் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது மாநில இணைச்செயலாளர் கமலா கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார தலைவர்கள் பதவி இடம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன் வைக்கப்பட்டபோதும் எங்களை அவமதிக்கும் நோக்கில் மாநில தலைவரும், கிழக்கு மாவட்ட தலைவரும் ஈடுபட்டு வருகிறார்கள். பாராளுமன்ற தொகுதிக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற்று உள்ளது.

    மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளிடம் எந்த ஒரு ஆலோசனைகளையும் பெறாமல் இதுபோன்ற சம்பவங்களில் கிழக்கு மாவட்ட தலைவர் ஈடுபட்டு வருகிறார்.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைய வேண்டும் என்ற நோக்கிலேயே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி செயல்பட்டு வருகிறார்.

    எனவே மாநில தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் ஆகியோரை மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×