search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சச்சின் பைலட்"

    • தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள், எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கூறியதாவது:-

    அரியானா மாநிலத்தில் தற்போது எம்.பி.யாக இருக்கும் நபர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ராஜஸ்தானில் கூட மக்களவை எம்.பி.யாக இருந்தவர் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஆகவே, தற்போது பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

    காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டு, எங்களது தலைவர்களின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்சி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

    பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். இந்தியா கூட்டணிக்கு நல்ல சூழல் உருவாகி வருகிறது. முக்கியமான போட்டி, குறிப்பாக வட இந்தியாவில் காங்கிரஸ்க்கும் பா.ஜனதாவுக்கும் இடையில்தான்.

    இவ்வாவறு சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

    • ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது.
    • ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சச்சின் பைலட் கலந்து கொண்டு பேசியதாவது :-

    ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க பாரதிய ஜனதா அரசு தவறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநில நலன்களை பணயம் வைத்து தெலுங்கு தேசம் மற்றும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வுடன் இணக்கமாக செயல்பட்டு வருகின்றனர்.

    ஆந்திர பிரதேச மறு சீரமைப்புக்கு பிறகு வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஆந்திர மாநிலத்தின் அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சச்சின் பைலட்டின் தந்தை குறித்து பா.ஜனதாவின் மால்வியா விமர்சனம்
    • ஒட்டு மொத்த நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தல்

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இளம் வயதுடைய சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்தது.

    இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதல் போக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாக வெடிக்க, சச்சின் பைலட் காங்கிரசில் தனதுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.-க்களை திரட்டி கெலாட்டிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், கெலாட் திறம்பட செயல்பட்டு தனது ஆதரவை நிலைநிறுத்திக்கொண்டார்.

    பின்னர், மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. அதன்பின் அடிக்கடி மோதல் ஏற்பட்ட போதிலும், இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டபை தேர்தலும், அடுத்த ஆண்டு மத்தியில மக்களவை தேர்தல் வருவதாலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

    சமீப காலமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை குறித்து அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதவினர் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியையும், சச்சின் பைலட் தந்தையையும் பற்றி பா.ஜனதா சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    அதில் மால்வியா, ''ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இந்திய போர் விமானம் மூலம் கடந்த 1966-ல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர், இருவரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகி, மந்திரி சபையில் இடம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலத்தின் சொந்த மக்கள் மீது குண்டுகள் வீசியதற்கு பரிசாக இந்திரா காந்தி அரசியலில் இடம் வழங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்த சச்சின் பைலட் ''நீங்கள் தவறான தேதி மற்றும் தவறான சம்பவத்தை சொல்கிறீர்கள். ஆமாம். இந்திய விமானப்படை விமானியான எனது தந்தை குண்டுகளை வீசினார். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் வீசினார். நீங்கள் சொல்வதுபோல் 1966-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி மிசோரமில் அல்ல. எனது தந்தை 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதிதான் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் அசோக் கெலாட், ''இந்திய விமானப்படையில் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தைரியமான விமானியாக திகழ்ந்தார். அவர்களை இழிவுப்படுத்துவது, பா.ஜனதா இந்திய விமானப்படையில் தியாகம் செய்தவர்களை இழிவுப்படுத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.
    • ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது.

    முந்தைய பா.ஜனதா ஆட்சி மீதான ஊழல் புகார்கள் குறித்து அசோக் கெலாட் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சச்சின் பைலட் கடந்த மாதம் போராட்டம் நடத்தினார்.

    சச்சின் பைலட்டின் தந்தையும், மறைந்த முன்னாள் மத்திய மந்திரியுமான ராஜேஷ் பைலட் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சச்சின் பைலட், தனிக்கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், காங்கிரஸ் மேலிடம் அதை மறுத்தது.

    இந்நிலையில், ராஜேஷ் பைலட் நினைவுநாளையொட்டி, தவுசா நகரில் உள்ள ஒரு விடுதியில் ராஜேஷ் பைலட் சிலையை சச்சின் பைலட் திறந்து வைத்தார். தனிக்கட்சி அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    என்னை பொறுத்தவரை, மக்களிடையே நம்பகத்தன்மை பெறுவதற்குத்தான் முதல் முன்னுரிமை அளிக்கிறேன். மக்கள் நம்பிக்கை, அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள், நம்பகத்தன்மை ஆகியவைதான் அரசியலில் மிகப்பெரிய சொத்துகள்

    நான் அரசியலில் நுழைந்து கடந்த 22 ஆண்டுகளாக, இந்த நம்பிக்கை குறைந்து போகும் அளவுக்கு எந்த காரியமும் செய்யவில்லை. இனிவரும் காலங்களிலும் அந்த நம்பிக்கைதான் எனக்கு மிகப்பெரிய சொத்து. அது எப்போதும் குறைந்துபோக விட மாட்டேன். இது சத்தியம்.

    எத்தகைய சூழ்நிலையாக இருந்தாலும், மக்களுக்காக போராடி அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வேன். கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மாட்டேன்.

    நான் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்தபோது, ஆட்சியில் இருந்த பா.ஜனதாவை துணிந்து எதிர்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார்.
    • காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல் இன்று வரை உட்கட்சி பூசல் ஓயவே இல்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில் இருந்து இன்று வரை உட்கட்சி மோதல் ஓயவே இல்லை.

    முதல் மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட்டும் அறிவிக்கப்பட்ட போதும் உட்கட்சி பூசல் முடிவுக்கு வரவில்லை.

    அசோக் கெலாட், காங்கிரஸ் மேலிடத்தின் முழுமையான ஆதரவால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களை ஓரம் கட்டினார். ஒருகட்டத்தில் கொந்தளித்துப்போன சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.

    இப்படி ஒவ்வொரு முறையும் பைலட் கலகக் குரல் எழுப்பும் போதெல்லாம் டெல்லி மேலிடம் தலையிட்டு சமாதானப்படுத்தியது. ஆனால் தங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்கிற ஆதங்கம் சச்சின் பைலட் கோஷ்டியிடம் இருந்து வந்தது.

    இதற்கிடையே, காங்கிரசில் இருந்து சச்சின் பைலட் வெளியேறுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகவும், நாளை மறுதினம் தனிக்கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்கவுள்ளதாக பரவும் தகவல் வதந்தி. ராஜஸ்தான் சட்டசபைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் எனவும் கே.சி.வேணுகோபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வருகிறது.

    வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே கோஷ்டி மோதல் நீடித்து வந்தது.

    இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரின் தலைமையில் இருவரையும் தனித்தனியே சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், அசோக் கெலாட், சச்சின் பைலட் ஒன்றிணைந்து செயல்பட ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இருவரும் ஒருமனதாக இந்த முன்மொழிவை ஒப்புக்கொண்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தியுடன் நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறுகையில், "பாஜகவுக்கு எதிரான கூட்டுப் போராட்டமாக இது இருக்கும். வரும் சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஒன்றாக போட்டியிடுவார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என கூறியுள்ளார்.

    • அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார்.
    • எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல.

    ஜெய்ப்பூர் :

    காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி கடந்த மாதம் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் சச்சின் பைலட்.

    அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக நடைபயணம் மேற்கொண்டார். ராஜஸ்தானின் அஜ்மீரில் கடந்த 11-ந் தேதி நடைபயணத்தை தொடங்கிய அவர், தலைநகர் ஜெய்ப்பூரில் நேற்று நிறைவு செய்தார்.

    ராஜஸ்தான் அரசு தேர்வாணையத்தை மறுசீரமைக்க வேண்டும், அரசு பணி தேர்வு தாள் கசிவு வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், முந்தைய பா.ஜ.க. அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய 3 கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் இந்த நடைபயணத்தை மேற்கொண்டார்.

    நடைபயணத்தின் இறுதி நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், "எனது கோரிக்கைகள் இம்மாத இறுதிக்குள் ஏற்கப்படாவிட்டால், மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.

    நான் எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது கடைசி மூச்சு வரை ராஜஸ்தான் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்று உறுதி அளிக்கிறேன். யாரும் என்னை அச்சுறுத்த முடியாது.

    எனது போராட்டம் யாருக்கும் எதிரானது அல்ல. ஊழலுக்கு எதிராகவும், இளைஞர்களின் நலனுக்காகவும் நடத்தப்படுகிறது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.
    • அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கும், மற்றொரு காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது.

    இந்நிலையில் பா.ஜனதா தலைவர் வசுந்தரா ராஜேவால் தனது ஆட்சி கவிழாமல் தப்பியது என்று அசோக் கெலாட் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூறி இருந்தார்.

    இதற்கு சச்சின் பைலட் இன்று பதிலடி கொடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முதல்-மந்திரி (அசோக் கெலாட்) பேச்சை கேட்டதும் அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல என்றும், வசுந்தரா ராஜே தான் தலைவர் என்றும் நினைக்கிறேன். அசோக் கெலாட் காங்கிரசை அவமானப்படுத்துகிறார். பா.ஜனதாவை பாராட்டுகிறார்.

    இவ்வாறு சச்சின் பைலட் கூறியுள்ளார்.

    • அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார்.
    • சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    ஜெய்ப்பூர் :

    ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட் என இரு தலைவர்களிடையேயான மோதலில் காங்கிரஸ் கட்சி, சிக்கித்தவிக்கிறது.

    2018 சட்டசபை தேர்தலுக்குப்பின் முதல்-மந்திரி பதவியை இளம் தலைவர் சச்சின் பைலட் எதிர்பார்த்தார். ஆனால் அந்தப் பதவி, கட்சியின் மூத்த தலைவரான அசோக் கெலாட்டுக்கு கிடைத்தது. அதில் இருந்தே அவருடன் சச்சின் பைலட் மோதி வருகிறார். இந்த மோதல் போக்கு, கட்சித்தலைமையின் தலையீட்டால் அவ்வப்போது சற்றே தணிவதும், பின்னர் மீண்டும் அனல் வீசுவதும் தொடர்கிறது.

    இந்த ஆண்டு அங்கு சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னணி ஒன்றை சச்சின் பைலட் தொடங்கினார். அத்துடன் முந்தைய முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த அசோக் கெலாட் அரசை வலியுறுத்தி 11-ந் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவேன் எனவும் அவர் அதிரடியாக அறிவித்தார்.

    இதற்காக அவருக்கு ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தவா எச்சரிக்கை விடுத்தார். மாநில அரசுக்கு எதிரான இத்தகைய போராட்டம், கட்சி விரோத நடவடிக்கை, கட்சியின் நலன்களுக்கு எதிரானது என எச்சரித்தார்.

    ஆனாலும் சச்சின் பைலட் அதைப் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி ஜெய்ப்பூரில் வரலாற்றுச்சிறப்பு மிக்க போர் நினைவுச்சின்னமான 'ஷாகீத் ஸ்மாரக்'கில் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தினார்.

    வரவேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டதால், இந்த உண்ணாவிரதப்போராட்டம் நடந்த இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வரவில்லை. ஆனால் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கு போட்டி நடவடிக்கை போல 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தான் மாநிலத்தை முன்னணி மாநிலமாக உயர்த்துவதற்கான தொலைநோக்குப்பார்வை வீடியோவை அசோக் கெலாட் அதிரடியாக வெளியிட்டார்.

    இந்த வீடியோவில் அவர், " 2030-ம் ஆண்டுக்குள் ராஜஸ்தானை முன்னணி மாநிலமாக ஆக்குவதற்கு நான் தீர்மானித்துள்ளேன். இந்தக் கனவை நனவாக்குவதற்காக, கடந்த 4 ஆண்டுகளாகவும், இந்த ஆண்டும் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் பிற எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களை அறிவித்து இருக்கிறேன்" என கூறி உள்ளார். தான் அமல்படுத்தி உள்ள சிரஞ்சீவி சுகாதார காப்பீடு, சமையல் கியாஸ் சிலிண்டர் மானியம், ரூ.10 லட்சம் விபத்துக்காப்பீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    அசோக் கெலாட், சச்சின் பைலட் மோதல் மீண்டும் வெளிப்படையாக வெடித்திருப்பது, தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

    • ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இவருக்கும் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. அவ்வப்போது அவர்களுக்குள் மோதல் ஏற்படுவது உண்டு. அப்போது எல்லாம் கட்சி மேலிடம் இருவரையும் சமரசம் செய்து வைத்து வருகிறது.

    இந்த மோதலின் உச்சகட்டமாக அசோக் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். முந்தைய வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க தற்போதைய அரசு தவறி விட்டது என்றும் 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை பூர்த்தி செய்ய வேண்டியது காங்கிரசின் கடமை என்றும் கூறி இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சச்சின் பைலட் தெரிவித்தார்.

    அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி மேலிடம் எடுத்த முயற்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.

    தான் அறிவித்தபடி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று சச்சின் பைலட் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். இந்த போராட்டத்தில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியை சேர்ந்த மூத்ததலைவர் போராட்டத்தில் குதித்து உள்ளது காங்கிரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்து உள்ளது.

    • ராகுல்காந்தியின் பாத யாத்திரை வெள்ளிக்கிழமை 100 வது நாளை நிறைவு செய்கிறது.
    • இது அரசியல் யாத்திரை அல்ல, மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம்.

    சவாய் மாதோபூர்:

    இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 7ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, பாதயாத்திரை நடத்தி வருகிறார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களை தாண்டி இந்த யாத்திரை டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைந்து நடைபெற்று வருகிறது. வரும் வெள்ளிக்கிழமை இந்த பாத யாத்திரை 100வது நாளை நிறைவு செய்கிறது. இதையொட்டி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட் கூறியுள்ளதாவது:

    பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வரும் ராகுல் காந்தி, தினமும் 30 கிலோமீட்டர் நடந்து வருகிறார். மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள், அவருடன் இணைந்து நடந்து வர முயற்சிக்கிறார்கள். அனைத்துப் பிரிவினரும் யாத்திரையில் பங்கேற்று வருகின்றனர். ராகுல் காந்தி தொடர்ந்து 100 நாட்களாக பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதன் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது,

    இதனால் பாஜக மிகவும் வருத்தமடைந்துள்ளது. இவ்வளவு பேர் எப்படி யாத்திரையில் இணைக்கிறார்கள் என்பது அந்த கட்சிக்கு கவலை அளிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோரை ராகுல் நேரில் சந்தித்து பேசுகிறார். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அவர் பணியாற்றி வருகிறார். இது அரசியல் யாத்திரை அல்ல, நாட்டை மற்றும் மக்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது.
    • காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும்.

    புதுடெல்லி :

    ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட்டுக்கும் இடையிலான மோதல் முற்றி உள்ளது. சச்சின் பைலட் ஒரு துரோகி, அவர் முதல்-மந்திரி ஆக முடியாது என்று அசோக் கெலாட் கூறியிருந்தார்.

    இதற்கு சச்சின் பைலட் பதில் அளித்துள்ளார். ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

    அசோக் கெலாட் என்னை குறிவைத்து பேசி இருப்பதை பார்த்தேன். என்னை 'துரோகி', 'உபயோகம் இல்லாதவன்' என்றெல்லாம் அவர் கூறி இருக்கிறார்.

    இத்தகைய அவதூறு வார்த்தைகளை பேசுவது நீண்டகால அனுபவம் வாய்ந்த, ஒரு மூத்த தலைவருக்கு அழகல்ல. அவர் சொல்வது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள்.

    நீண்ட காலமாகவே அசோக் கெலாட் என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இந்த நேரத்தில் நாம் பா.ஜனதாவுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டும்.

    அசோக் கெலாட் மூத்த பார்வையாளராக உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பாதயாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தியின் கரத்தையும், கட்சியையும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

    இது, பா.ஜனதாவை தோற்கடிக்க ஒன்றுபட்டு போராட வேண்டிய நேரம். ஏனென்றால், காங்கிரசால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும். இந்த நேரத்தில் மாறி மாறி சேறு வாரி வீசுவது, எந்த பயனையும் அளிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே, அசோக் கெலாட்-சச்சின் பைலட் மோதல் தீர்த்து வைக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருப்பதாவது:-

    அசோக் கெலாட், அனுபவம் வாய்ந்த, மூத்த அரசியல் தலைவர். தனது இளைய சகா சச்சின் பைலட்டுடன் அவருக்கு என்ன கருத்து வேறுபாடு இருந்தாலும், கட்சிக்கு வலுவூட்டும்வகையில் அதற்கு தீர்வு காணப்படும்.

    இந்த நேரத்தில் பாதயாத்திரைக்கு வடமாநிலங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் ஒவ்வொரு காங்கிரசாரின் கடமையாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×