என் மலர்
இந்தியா

காங்கிரஸில் திருப்பம்: முடிவுக்கு வரும் ராஜஸ்தான் பூசல்?.. அசோக் கெலாட் - சச்சின் பைலட் நேரில் சந்திப்பு
- 2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் விரிசல் ஏற்பட்டது.
- முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசியலில் நீண்டகாலமாக நடந்து வந்த அரசியல் மோதலுக்கு ஒரு திருப்புமுனையாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் சச்சின் பைலட், முன்னாள் மாநில முதல்வர் அசோக் கெலாட்டை நேற்று ஜெய்ப்பூரில் சந்தித்தார்.
இந்த சந்திப்பு இரு தலைவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்த விவாதத்துக்கு வலு சேர்த்துள்ளது.
சச்சின் பைலட், தனது தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் ராஜேஷ் பைலட்டின் 25வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொள்ள அசோக் கெலாட்டை தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்தார். இந்த நினைவு நிகழ்ச்சி வரும் ஜூன் 11 ஆம் தேதி ராஜேஷ் பைலட்டின் முன்னாள் நாடாளுமன்றத் தொகுதியான தௌசாவில் நடைபெறுகிறது.
2020 ஆம் ஆண்டு ராஜஸ்தான் காங்கிரசில் வெடித்த அரசியல் நெருக்கடிக்குப் பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பதால், இது முக்கியத்துவம் பெறுகிறது.
2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு முதல்வர் பதவி கெலாட்டுக்குச் சென்றதிலிருந்தே பைலட் - கெலாட் இடையேயான பகைமை தொடங்கியது. 2020இல் பைலட் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் இந்த மோதலை உச்சத்திற்குக் கொண்டு சென்றது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.






