search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளி"

    • அரசு பள்ளியை போன்று தனியார் பள்ளிகளும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.
    • தனியார் பள்ளிகளையும் நாங்கள் எங்கள் பள்ளி போன்று தான் கருதுகிறோம்.

    வடவள்ளி:

    கோவை தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவுக்கு கலெக்டர் கிராந்திகுமார் பாடி முன்னிலை வகித்தார். தனியார் பள்ளி இயக்குனர் எஸ்.நாகராஜ் முருகன் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கோவை, ஈரோடு, நாமக்கல் மற்றும் திருப்பூர் உள்பட 5 மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கிகார ஆணைகளை வழங்கினார்.

    விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    அரசு பள்ளியை போன்று தனியார் பள்ளிகளும் சிறந்த மாணவர்களை உருவாக்கி வருகிறது.

    சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் அரசு பள்ளிகளை போன்று தனியார் பள்ளிகளின் பங்களிப்பும் அதிகரித்துள்ளது.

    தனியார் பள்ளிகளையும் நாங்கள் எங்கள் பள்ளி போன்று தான் கருதுகிறோம். அனைத்து மாணவர்களின் நலன் கருதியே நாங்கள் பலவற்றை செய்து வருகிறோம்.

    அரசு பள்ளியும், தனியார் பள்ளியும் இணைந்து செயல்பட வேண்டும். இருவரும் இணைந்து செயல்பட்டு சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.

    தனியார் பள்ளிகளில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப ஆசிரியர்களையும் நியமித்து தாய்மொழியை கற்று கொடுக்க வேண்டும்.

    கொரோனாவால் மக்கள் மட்டுமல்ல பள்ளி நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு துணையாக நீங்கள் இருங்கள். உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    விழாவில் திருச்சி தனியார் பள்ளி இயக்கக இணை இயக்குனர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி நன்றி தெரிவித்தார்.

    • வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் வெயிலின் தாக்கம் குறையாததால், பள்ளிகளுக்கான கோடை விடுமுறை வருகிற 13-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புதுவை மரப்பாலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சில நாட்களாக சிறப்பு வகுப்புகள் நடப்பதாக புகார் எழுந்தது.

    அதனைத் தொடர்ந்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் வி.சி.சி. நாகராஜன் மற்றும் நாராயணசாமி ஆகியோர், பள்ளி முதல்வரிடம் விசாரித்தனர். ஆனால் பள்ளி முதல்வர் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் மாணவர் சங்க நிர்வாகிகள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் சிவகாமி அப்பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளியில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற்றதை கண்டார். உடனே வகுப்பில் இருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்ததில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி இயங்கி வருவது தெரியவந்தது.

    இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவை மீறி மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க அந்த பள்ளிக்கு இணை இயக்குனர் சிவகாமி நோட்டீஸ் வழங்கினார்.

    தனியார் பள்ளி அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • இந்த பள்ளிக்கூடம் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.
    • பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது.

    ஈரோடு :

    ஈரோடு சம்பத் நகரில் ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளிக்கூடம் தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் 1998-ம் ஆண்டு முதல் வாடகைக்கு இயங்கி வருகிறது.

    பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகள் மட்டுமே வாடகை செலுத்திய பள்ளிக்கூட நிர்வாகம் அதன் பின்னர் வாடகை செலுத்தவில்லை. இதனால் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் பலமுறை வாடகை கேட்டும் பள்ளிக்கூட நிர்வாகம் செலுத்தவில்லை.

    இதற்கிடையில் வீட்டு வசதி வாரியம் கூடுதல் தொகை நிர்ணயித்திருப்பதாக கூறி பள்ளிக்கூட நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்ததுடன் இதில் அரசே முடிவெடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து, பள்ளிக்கூடம் செயல்பட்டு வந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்தது. மேலும் ரூ.3 கோடியே 90 லட்சம் வாடகை பாக்கி தொகையை செலுத்த வீட்டு வசதி வாரியம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது.

    எனினும் பள்ளிக்கூட நிர்வாகம் வாடகை பாக்கியை செலுத்தவில்லை. இதனால் இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று பள்ளிக்கூடத்துக்கு வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சென்றனர். பின்னர் பள்ளியின் முன்பக்க கதவை பூட்டி 'சீல்' வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

    இதன் காரணமாக இந்த பள்ளிக்கூடத்தில் படித்து வரும் மாணவ -மாணவிகளின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம்.
    • 228 பள்ளிகளில் நாளை காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்ல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 013-2014-ம் கல்வி ஆண்டு முதல் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த குழந்தைகள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

    மேலும் 2023-2024ம் கல்வி ஆண்டிற்கு இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள 228 பள்ளிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாணவர்கள் சேர்க்கைக்காக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். விண்ணப்பித்த பெற்றோர்கள் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர் பொது ச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக பல மடங்கு கட்ட ணம் வசூலித்து வருகின்றனர்.

    தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண வசூல் தொடங்கி விட்டது. ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக

    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு வாலிபர் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
    • இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் கொப்பு வாய்க்கால் பகுதியில் இன்று அதிகாலை ஒரு வாலிபர் தலை,உடல் முழுவதும் வெட்டுகாயத்துடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    மேலும் அவரது உடல் அருகே ஒரு மோட்டார் சைக்கிளும் கிடந்தது. இதுப்பற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் ஏ.எஸ்.பி.ஐமன் ஜமால் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பிணமாக கிடப்பது சத்தியமங்கலம் செண்பகபுதூர் அருகே உள்ள சாணார் பதி பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பது தெரியவந்தது.

    மேலும் இவருக்கு திருமணமாகி கல்யாணி (30) என்ற மனைவியும், 13 வயதில் ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாரிமுத்துவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    மாரிமுத்து ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். நேற்று மாலை வீட்டில் இருந்த அவரை அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றார்.

    அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் தான் அவர் உடலில் வெட்டு காயத்துடன் பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து போலீசார் மாரிமுத்துவின் நண்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கொலை செய்யப்பட்டாரா?அல்லது விபத்தில் இறந்தாரா? என்று பிரேத பரிசோதனையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
    • சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஓடக்கா ட்டை சேர்ந்தவர் வெங்க டேஷ் (45). ரியல் எஸ்டேட் அதிபரான வெங்கடேஷ் விவசாயமும் செய்து வருகிறார்.

    இவரது மனைவி வசந்தி. கோபி அருகே மொடச்சூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் நவீன்.

    வெங்கடேஷ் அதே பகுதியில் தோட்டத்திலேயே சுற்றிலும் சுவராலும், மேற்கூரை தென்னை ஓலையால் அமைத்து அதன் மேல் தகர சீட் அமைத்து உள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேஷ் தொழில் விசயமாக வெளியே சென்று விட்டார். அவரது மனைவி பள்ளிக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் வெங்கடேசின் தந்தை பெருமாள், தாயார் பாவாயம்மாள் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர்.

    இந்நிலையில் மதியம் திடீரென வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த பெருமாளும், பாவா யம்மா ளும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.

    அதற்குள் தீ விபத்து குறித்து தகவல் அறிந்து அருகில் இருந்த வர்கள் தீயை அணைக்க முயன்ற போது தென்னை ஓலையால் மேற்கூரை அமைக்கப்பட்டதால் தீ மளமளவென பரவியது. இதனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்து நம்பியூர் தீயணைப்பு த்துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் தீ மளமள வென பரவி வீட்டில் பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 3 லட்சம் ரொக்க பணம், தோட்டத்தின் பத்திரங்கள், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள், வீட்டில் இருந்த பிரிட்ஜ், டி.வி., மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சமையல் பொருட்கள் என சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து முற்றிலும் சேதமானது.

    தீ விபத்து ஏற்பட்ட போது ஓலையால் மேற்கூரை அமைத்து அதன் மீது இரும்பு தகர சீட் போடப்பட்டு இருந்ததால் தீயை உடனடியாக அணை க்க முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்த போது சுவர்களும் இடிந்து விழுந்ததால் வீட்டில் இருந்த பொருட்க ளை மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தீ விபத்தின் போது வீட்டில் இருந்த பெருமாள் மற்றும் பாவாயம்மாள் ஆகியோர் உடனடியாக வீட்டை விட்டு வெளி யேறியதால் அதிர்ஷ்டவ சமாக உயிர் தப்பினர்.

    இந்த தீ விபத்து குறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் சுயநிதிப்பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-ன் படி, சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் சேர்க்கை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையற்ற அனைத்து தனியார் சுயநிதிப்பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பில் 25 சதவீதம் ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் இன்று முதல் அடுத்த மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோர் அவரவர் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அளிக்கப்படும்.

    முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை எந்தவித கட்டணமும் இல்லாமல் பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2019 முதல் 31-7-2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1-8-2017 முதல் 31-7-2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். மாணவர்களின் புகைப்படம், மாணவர், பெற்றோரின் ஆதார் அட்டை நகல், இருப்பிட சான்று, வருமான சான்று, சாதிச்சான்று, முன்னுரிமை ஏதேனும் இருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த மாவட்டத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

    நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெற்றால் குலுக்கல் முறையில் வருகிற மே மாதம் 23-ந் தேதி அந்தந்த பள்ளிகளில் நடைபெறும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள ஆதரவற்ற எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், துப்புரவு தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் தகுதியான விண்ணப்பங்கள் முதலில் சேர்க்கை வழங்கப்படும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.
    • கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

    சென்னை:

    இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரை ஒரு லட்சம் இடங்களில் சேர்க்கை நடைபெறுகிறது.

    2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கடந்த 20-ந்தேதி முதல் தொடங்கியது. பெற்றோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. ஏப்ரல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    தகுதியான பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விரும்பினால் குழந்தையின் புகைப்படம், ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோர் ஆதார், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை ஆகிய 8 ஆவணங்கள் அவசியம் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

    1-8-2019 முதல் 31-7-2020 வரை பிறந்த குழந்தைகள் இலவச கல்வி இட ஒதுக்கீட்டில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு பிரைமரி நர்சரி பள்ளிகள் சங்க மாநில தலைவர் நந்தகுமார் கூறுகையில், 'தனியார் பள்ளிகளில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கட்டணத்தை மட்டும் அரசு செலுத்தும்.

    புத்தகம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் பெற்றோர் செலுத்த வேண்டும். தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய தொகையை சமீபத்தில் கொடுத்துள்ளது. நிலுவை தொகையை படிப்படியாக கொடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என்றார்.

    கடந்த ஆண்டு 70 ஆயிரம் குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டனர். விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

    ஒரே பள்ளியில் அதிக விண்ணப்பங்கள் வரப்பெற்றால் பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

    • லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.
    • இதில் பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வாய்க்கால்மேடு இச்சிசெட்டிபாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.

    அப்போது தேவம்பா ளையம் என்ற இடத்தில் தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.

    அப்போது லாரியில் இருந்து கற்கள் பள்ளி பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து. இதில் பள்ளி பஸ்சில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    இதனையடுத்து பஸ் மீது மோதிய டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. பஸ் டிரைவர் லாரியை துரத்தினார். அப்பவும் லாரி நிற்காமல் சென்றது.

    இது குறித்து மலையம்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கே உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும்
    • இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    திருச்சி:

    திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

    இதில் 322 பேருக்கு பட்டா, 20 பேருக்கு குடும்ப அட்டை, 6 மாற்று திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம், 64 பேருக்கு கல்மந்தை காலணியில் குடியிருப்பு ஒதுக்கீடு உள்ளிட்ட நல திட்டங்கள் ரூ.60 லட்சத்து 22 ஆயிரத்து 510 மதிப்பில் வழங்கப்பட்டது.

    பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டும், சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவித்த படியும் எந்த காலத்திலும் செல்போனுக்கு அனுமதி கிடையாது. அதையும் மீறி வகுப்பறைக்கு மாணவர்கள் யாராவது செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும். அது திருப்பி தரப்படமாட்டாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்ற ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் பெரும் உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களின் கவன சிதறலை போக்கும் வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிலையில் முதல் ஐந்து நாட்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். அதன் பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கிய உடன் தன்னார்வ அமைப்புகள் மற்றும் காவல் துறையை சேர்ந்தவர்களை கொண்டு புத்தாக்க பயிற்சி வழங்கப்படும்.

    இதில் காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டு போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.

    நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. நாம் கொடுத்த அழுத்தத்தினால் தான் ஆளுநர் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பினார். எந்த சட்டப்போராட்டமாக இருந்தாலும் முதலமைச்சர் அதில் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்கும் படி நேரடியாக பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்தார். அதன் காரணமாக ஜி.எஸ்.டி. நிலுவை தொகை மாநிலத்திற்கு வழங்கப்பட்டது.

    முதலமைச்சர் கொடுக்கும் குரல் நியாயமான குரல் என ஒட்டுமொத்த இந்தியாவே ஒத்துக்கொள்கிறது. அது போலத்தான் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்கிற குரலும் நியாயமான குரல். அதில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

    தனியார் பள்ளிகள் அங்கு படிக்கும் மாணவர்களை சீறுடை, புத்தகம் உள்ளிட்டவற்றை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்த கூடாது. அதேபோல் அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்களின் மாற்றுச்சான்றிதழை உடனடியாக தாமதமின்றி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    12 வயதுக்கு மேற்பட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. அரசு பள்ளியில் சேரும் மாணவர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இந்த ஆண்டில் 9,494 புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த உள்ளோம்.

    பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் இல்லம்தேடி கல்வியின் தேவை இருக்கிறது. இல்லம் தேடி கல்வி திட்டத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளோம். இரண்டாண்டுகளுக்கு பின் இந்தாண்டு தான் வழக்கம் போல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் போது தான் இல்லம் தேடி கல்வி திட்டத்தை படிப்படியாக நாம் நிறுத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×