search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதி"

    • சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சேடன் குட்டை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 55) . கூலித் தொழிலாளி.இவர் திண்டிவனம் எம். ஆர். எஸ். கே. கேட் அருகே டாஸ்மாக் கடைக்குஎதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரோட்டை கடந்த போது திண்டிவனத்தில் இருந்து சென்னை சென்ற லாரி இவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் நாகராஜ் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜ் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியில் நெடுஞ்சாலையில் ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளதால் தொடர்ந்து விபத்து நடப்பதாகவும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தொடர்ந்து உயிரிழப்பும் ஏற்படுவதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் போராட்டம் நடத்துவது என திட்டமிட்டுள்ளனர்.

    • லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்த ன்று மாலைய வருந்தியாபா ளையம் அருகே நொய்யல் செல்லும் சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    இதனால் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த துரைசாமியை அருகில் இருந்தவர் மீட்டு அவரை தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற துரைசாமி பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைசாமி யின் உடல்நிலை மோசமான தையடுத்து அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக துரைசாமி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.

    தற்போது சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.
    • லாரி மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது42).

    இவர் தனது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    அப்போது மாரியம்மன் கோயில் அருகே பட்டுக்கோட்டை மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.

    அப்போது முத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வாகனம் மாரிமுத்துவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக

    பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.

    இது குறித்து பட்டுக்கோ ட்டை தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பின்னால் வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா படுகாயம் அடைந்தனர்.

    புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ரேயான் நகரை சேர்ந்தவர் பொன்னு ச்சாமி (வயது 74). இவரது மனைவி சரோஜா (70).

    இவர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் ேரயான் நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அடுத்த மல்லியம்பட்டிக்கு உறவினர் வீட்டு விஷேசத்துக்கு வந்து கொண்டி ருந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பு.புளியம்ட்டி சத்திய மங்கலம் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரே வந்த போது பின்னால் வந்த ஒரு மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பொன்னுச்சாமி மற்றும் அவரது மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் தலை மற்றும் கை, கால்களில் அடிப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    இதை கண்ட பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்சு மூலம் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக அன்னூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் பொன்னுச்சாமி வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    மேலும் சரோஜாவுக்கு அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் இன்றி அவரும் இறந்து விட்டார்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விபத்தில் இறந்த கணவன்- மனைவி ஆகிய 2 பேர் உடல்கள் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படை க்கப்படுகிறது.

    • டாரஸ் லாரி துரைசாமி மீது திடீரென மோதியது.
    • மருத்துவமனையில் டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    சென்னிமலை:

    காங்கேயம் யூனியன் திட்டம்பாளையத்தினை சேர்ந்தவர் துரைசாமி (61). இவர் திட்டம்பாளையத்தில் இருந்து காங்கேயம் - சென்னிமலை ரோட்டில் சென்னிமலை நோக்கி மொபட்டில் வந்தார்.

    பசுவபட்டி பிரிவு அருகே ரோட்டை கடந்தபோது அவ்வழியாக வந்த டாரஸ் லாரி இவர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து அவரது மகன் நவநீதகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் லாரியை ஓட்டி வந்த பவானி, வரதநல்லூரை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில்குமாரிடம் சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.
    • இதில் பள்ளி குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வாய்க்கால்மேடு இச்சிசெட்டிபாளையம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு பள்ளி பஸ் வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் ராஜா என்பவர் ஓட்டி வந்தார்.

    அப்போது தேவம்பா ளையம் என்ற இடத்தில் தனியார் பள்ளி பஸ் வந்து கொண்டிருந்த போது எதிரே டிப்பர் லாரி ஒன்று கல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த லாரி திரும்பும் போது பள்ளி பஸ் மீது மோதியது.

    அப்போது லாரியில் இருந்து கற்கள் பள்ளி பஸ் மீது விழுந்தது. இதில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி உடைந்து. இதில் பள்ளி பஸ்சில் இருந்த குழந்தைகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பினர்.

    இதனையடுத்து பஸ் மீது மோதிய டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. பஸ் டிரைவர் லாரியை துரத்தினார். அப்பவும் லாரி நிற்காமல் சென்றது.

    இது குறித்து மலையம்பா ளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவயிடத்திற்கு நேரில் வந்து விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அங்கே உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது.
    • இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அந்தியூர்:

    அந்தியூர் மாவிளக்கு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சிவசிதம்பரம் (28). இவர் அந்தியூர்அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். மேலும் திருமண நிகழ்ச்சிகளில் பீடா போடும் பகுதிநேர வேலையும் செய்து வந்தார்.

    இந்த நிலையில் சிவசிதம்பரம் சம்பவத்தன்று இரவு அந்தியூர் பர்கூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பீடா போடும் வேலையை முடித்து விட்டு அங்கிருந்து இரவு 10.30 மணி அளவில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்தியூர் அரசு மருத்துவமனை அருகே வந்த போது கர்நாடக மாநிலத்தில் இருந்து சரக்கு ஏற்றி வந்து கொண்டிருந்த லாரி சிவசிதம்பரம் மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதியது. அதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வந்து பார்வையிட்டார். மேலும் உடலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து சிவசிதம்பரத்தின் தந்தை கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.
    • சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு, பிப். 21-

    ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). தொழிலாளி. இவர் தனது உறவினர் ஒருவருடன் மொபட்டில் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    லாரி மோதி விபத்து

    அவர்கள் ஸ்டோனிபாலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.

    இதில் மணியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாரியின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 29). இவர் அவிநாசி பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இவர் தனது ஓட்டலுக்கு சப்ளையர் தேவைப்படு வதால், இது சம்பந்தமாக ஈரோட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் வேலை முடித்து அவினா சியை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    பெருந்துறை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்க ம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
    • பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது.

    கடலூர்:

    சிதம்பரத்திலிருந்து நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். அப்போது கீரப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் அடை யாளம் தெரியாத முதியவர் லிப்ட் கேட்டு அந்த மோட்டார் சைக்கிளில் ஏறி வந்தார்.

    இந்நிலையில் புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த போது மோட்டார் சைக்கிளில் பின்புறம் இருந்த 50 வயது மதிக்க முதியவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த லாரியின் பின் சக்கரம் இந்த முதியோர் மீது ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீ சார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது.
    • இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (27). எலக்ட்ரீசியன். இவர் கோபிசெட்டிபாளையத்தில் இருந்து கரட்டடிபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோடு லக்கம்பட்டி பிரிவு அருேக சென்றபோது அந்த வழியாக வந்த ஒரு லாரி முத்துக்குமார் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.

    விபத்தில் இறந்த முத்துக்குமாருக்கு ஜோதி புஷ்பம் என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இந்த விபத்து குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

     சென்னிமலை அருகே உளள் முகாசிபிடாரியூர் 1010 நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரு டைய மனைவி மகேஸ்வரி (61). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் பாவு நூல் பிணைக்கும் வேலை செய்து வந்தார்.

    வேலை முடிந்த பிறகு மகேஸ்வரி அதே பட்ட றையில் தறி மேஸ்திரியாக வேலை பார்க்கும் சென்னி மலை அருகே கொத்த ம்பாளையத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார்.

    அப்போது சென்னிமலை-பெருந்துறை ரோடு வண்ணாம்பாறை பிரிவு என்ற இடத்தில் திரும்பும் போது அந்த வழியாக குழாய்கள் ஏற்றி வந்த ஒரு லாரி அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நாகராஜ் மற்றும் மகேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனி ன்றி மகேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    ×