search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The farmer was injured"

    • மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக சென்னிமலைக்கு தனது மொபட்டில் சென்றார்.

    பின்னர் இரவு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊசிபாளையம் என்ற இடத்தின் அருகே சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மொபட் மோதாமல் இருக்க மொபட்டை திருப்பி உள்ளார்.

    இதில் மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய வேலைக்காக சென்ற போது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பூங்குளம் காளி வட்டத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று தன் வீட்டில் இருந்து விவசாய வேலைக்காக டிராக்டரை ஒட்டிக்கொண்டு பூங்குளம் நோக்கி சென்றார். அப்போது பூங்குளம் ரைஸ் மில் அருகே டிராக்டர் நிலை தடுமாறி சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் டிராக்டரை ஓட்டி சென்ற நவீன்குமார் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் நவீன் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
    • இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே சோளக்காளிபாளையத்தை சேர்ந்தவர் துரைசாமி (65). விவசாயி. இவர் சம்பவத்த ன்று மாலைய வருந்தியாபா ளையம் அருகே நொய்யல் செல்லும் சாலையில் தனது மொபெட்டில் சென்று கொண்டிருந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று துரைசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் துரைசாமிக்கு தலையில் பலத்த அடிபட்டது.

    இதனால் உயிருக்கு போராடிக்கொ ண்டிருந்த துரைசாமியை அருகில் இருந்தவர் மீட்டு அவரை தனியார் ஆம்புல ன்ஸ் மூலம் கொடுமுடியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற துரைசாமி பின்னர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் துரைசாமி யின் உடல்நிலை மோசமான தையடுத்து அங்கிருந்து சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக துரைசாமி அனுப்பி வைக்கப் பட்டுள்ளார்.

    தற்போது சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கொடுமுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது.
    • இதில் அவர் லேசான காயம் அடைந்தார்.

    சத்தியமங்கலம்:

    ஆசனூர் அருகே உள்ள ஓங்கல்வாடி பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (37). பேக்கரி ஊழியர். நேற்று இரவு 10 மணி அளவில் வேலை முடிந்து வனப்பகுதியை ஒட்டி உள்ள தனது கிராமத்துக்கு சென்றார்.

    அப்போது இருட்டில் புதரில் மறைந்து இருந்த ஒரு யானை பசுபதியை தூக்கி வீசியது. இதில் அவர் லேசான காயம் அடைந்தார். இது பற்றி தெரிய வந்ததும் ஆசனூர் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.

    பின்னர் காயத்துடன் இருந்த பசுபதியை மீட்டு வனத்துறை ஜீப்பிலேயே சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    • லாரி மீது பைக் மோதியது
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி புள்ளான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சென்றாயன் (வயது 54) விவசாயி வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சென்றாயன் தனது பைக்கில் பொன்னேரி ஏலகிரி மலை கூட்டுரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சாலை உள்ள தடுப்பு மீது மோதி எதிரே வாணியம்பாடி இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற லாரி மீது மோதியதில் பலத்த படுகாயம் அடைந்தார். இதனால் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து லாரி டிரைவர் சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×