search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் விவசாயி காயம்
    X

    விபத்தில் விவசாயி காயம்

    • மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
    • சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    அறச்சலூர்:

    அறச்சலூர் அருகே உள்ள குள்ளரங்கன் பாளையத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (42) விவசாயி. இவர் தனது சொந்த வேலை காரணமாக சென்னிமலைக்கு தனது மொபட்டில் சென்றார்.

    பின்னர் இரவு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஊசிபாளையம் என்ற இடத்தின் அருகே சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது மொபட் மோதாமல் இருக்க மொபட்டை திருப்பி உள்ளார்.

    இதில் மொபட் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் சந்திரசேகருக்கு தலை மற்றும் முகத்தில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.

    உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் சந்திரசேகரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்திரசேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×