search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in a lorry collision"

    • கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்தார்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    சேலம் மாவட்டம் எடப்பாடி தாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 29). இவர் அவிநாசி பகுதியில் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். திருமணம் ஆன இவருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

    இவர் தனது ஓட்டலுக்கு சப்ளையர் தேவைப்படு வதால், இது சம்பந்தமாக ஈரோட்டுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பின்னர் வேலை முடித்து அவினா சியை நோக்கி சென்று கொண்டி ருந்தார்.

    பெருந்துறை அடுத்துள்ள டீச்சர்ஸ் காலனி நுழைவு பாலம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி பூபதி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்க ம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வழியிலேயே இறந்து விட்டதா கூறினர். இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×