search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fees"

    • மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.
    • இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராமேசுவரம்:

    இந்தியாவில் புகழ் பெற்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றாகும். தென்னகத்து காசி என அழைக்கப்படும் இந்த கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகு திகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

    இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் பல்வேறு தோஷங்கள் கழிந்து, குடும்பமும், வம்சமும் செழித்து நன்மைகள் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்னதாக அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்ப ணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் திரளுவார்கள்.

    அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்வது வழக்கம். இதற்காக பக்தர்கள் புரோகிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பேசி வழங்கி வந்தார்கள்.

    இந்த நிலையில் தற்போது அக்னி தீர்த்தகடற்கரையில் மேற்கண்ட சடங்குகளை செய்ய இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திதி, தர்ப்பணம், பிண்ட பூஜை செய்ய ரூ.200 முதல் 400 வரை வசூலிக்கப்படும் எனவும். அதில் இருந்து ரூ.80, 160 புரோகிதர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்து சமய அறநிலையத் துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னோர்களுக்காக திதி கொடுக்க கட்ட ணம் அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமேசுவரம் அக்னி தீர்த்தத்ததில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிண்ட பூஜை செய்யக்கூட கோவில் நிர்வாகத்திற்கு பணம் கொடுக்க வேண்டும் என தி.மு.க. அரசு உத்தரவிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

    நம் முன்னோர்களுக்கு நாம் காட்டும் பாசத்தின், மரியாதையின் வெளிப்பாடாக மரித்தவர்களின் மறுமை வாழ்வுக்காக இறைவனை வேண்டி வைக்கப்படும் பிண்டத்திலும் பணம் பார்க்க வேண்டும் என்ற தி.மு.க. அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை விதைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இந்த முறையற்ற உத்தரவை உடனடியாக திரும்பப்பெற்று இறைவனுக்கான சேவையை முறைப்படுத்தவும், ஆலய மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான கட்டணங்களை தவிர வேறெந்த கட்டணமும் வசூலிக்க வேண்டாம் எனவும் முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறையின் விதிகளின்படியே கோவில் வழிபாடு, பூஜை மற்றும் நம்பிக்கைகள் என்று எதிலும் அந்த துறை தலையிட முடியாது. அவ்வாறு இருக்கும்போது கோவிலுக்கு வெளியே திதி, தர்ப்பண பூஜை செய்யும் இந்துக்களின் அடிப்படை கலாச்சாரத்தின் மீது எப்படி தலையிட முடியும்? எனவே உடனடியாக இந்த அறிவிப்பை அரசு திரும்பப்பெற வேண்டும், இல்லையென்றால் அதற்கான விலையை தி.மு.க. அரசு கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், சட்ட விதிகளின்படி கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் நிர்ணயிக்கலாம். ஆனால் கடற்கரையில் தனிமனித பூஜைக்கு எப்படி கட்டணம் வசூலிக்க முடியும். இது பக்தர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். மேலும் அதிக கட்டண வசூலிக்கும் வழிவகுக்கும். எனவே அரசின் இந்த அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றனர்.

    • தெரு நாய், குதிரை, பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
    • ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மேயர் , துணை மேயர் , கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்டதற்காக முதல் -அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் நேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்ட பணிகளை திறந்து வைத்ததற்காகவும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மண்டல குழு தலைவர்கள் புண்ணியமூர்த்தி, ரம்யா, கலையரசன் ஆகியோர் கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கியதற்காக முதல் -அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசிய விவரம் வருமாறு:-

    கேசவன் :

    30-வது வார்டில் தார் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தெரு நாய், குதிரை , பன்றி தொல்லைகளை கட்டுப்படுத்த வேண்டும். மழைக்காலம் வருவதால் வடிகால்ல் வாய்க்காலை உடனே தூர்வார வேண்டும்.

    காந்திமதி :

    கொண்டிராஜபாளையம் தற்காலிக மீன் மார்க்கெட்டை நிறம் மாற்றக்கோரி தொடர்ந்து பலமுறை வலியுறுத்தி வருகிறேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனடியாக மீன் மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டும்.

    சரவணன்:

    சீனிவாசபுரம் பகுதியில் குப்பைகள் தேங்கியுள்ளது.

    போதிய குப்பை பெட்டிகள் இல்லாததால் கோழி, மீன், இறைச்சி கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன.

    இதனை தடுக்க வேண்டும்.

    ஸ்டெல்லா நேசமணி:

    எனது வார்டில் புதிதாக அங்கன்வாடி, கழிவறைகள் திறக்கப்பட்டதற்கு நன்றி.

    கோபால் :

    4 ராஜவீதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி:

    பெண் கவுன்சிலர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர்.

    அதனால் பெண் கவுன்சிலர் என்பதால் பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற பெண் கவுன்சிலர் ஒருவரின் குற்றசாட்டை ஏற்க முடியாது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை திறந்து வைத்ததற்காக முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எனது வார்டில் ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்:

    புதிதாக திறக்கப்பட்ட ஸ்டெம் பூங்காவில் நுழைவு கட்டணம் குறைந்த அளவில் நிர்ணயிக்க வேண்டும்.

    இதுவரை இணைப்பு வழங்கப்படாத வணிக வளாகத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இதனை தொடர்ந்து கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேயர் சண் .ராமநாதன் கூறும்போது:-

    கவுன்சிலர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சையில் நேற்று முதல் -அமைச்சரால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவடைந்த பணிகள் திறந்து வைக்கப்பட்டது.

    இதில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள புதிதாக திறக்கப்பட்ட பல்நோக்கு மாநாட்டு அரங்கத்திற்கு முத்தமிழ் அறிஞர் மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதேபோல் பழைய திருவையாறு பஸ் நிலைய வணிக வளாகத்திற்கு கலைஞர் முத்துவேல் கருணாநிதி வணிக வளாகம் என்றும், சரபோஜி மார்க்கெட் முன்பாக புதிதாக கட்டப்பட்ட வரும் வணிக வளாகத்திற்கு பேரறிஞர் அண்ணா வணிக வளாகம் என்றும், வல்லம் குவாரி சாலைக்கு தமிழ் சாலை என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இதற்கான தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதிகள் ‘போட்டோ சூட்’ நடத்த ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    • ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    மதுரை

    இருமனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய தருணமாகும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வு காலத்திற்கும் நம் மனதில் நினைவுகளாக இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருப்பதில் புகைப்படங்க ளும் ஒன்று.

    தற்போது திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என மணமக்களை விதவிதமாக போட்டோசூட் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது. சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ சூட் நடத்துவது வழக்கம்.

    அப்படி போட்டோ சூட்டிங்கிற்கு ஆர்வமுள்ள நபர்களுக்காகவே ஒரு புதுமையான ஸ்பாட் கிடைத்துள்ளது. தற்போது ரெயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ சூட் நடத்திக் கொள்ள தெற்கு ரெயில்வே அனுமதி வழங்கி உள்ளது.

    ரெயில் நிலையங்களில் சினிமா திரைப்படங்க ளுக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. பல்வேறு வழிகாட்டு நெறிமுறை களுடன் அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக, தற்போது இளை ஞர்கள் மத்தியில் பிரபல மாக அறியப்பட்டு வரும் திருமண ஜோடிகள் போட்டோ சூட், வெட்டிங் சூட் எடுப்பதற்கு அனுமதி வழங்கி, அதற்கான கட்டணமும் நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.

    இந்திய ரெயில்வே துறை வருவாயை பெருக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரெயில்வே நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு பிளாட்பார்ம் கட்டணம் வசூல் செய்வது, ரெயில் நிலையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ரெயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய அனுமதிப்பது என பல வழிகளில் வருமானத்தை பெருக்கும் நடவடிக்கை களை ரெயில்வே துறையின் வருவாய் பிரிவு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் புதுமண தம்பதியர் ரூ.5 ஆயிரம் கட்டணம் செலுத்தி புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரெயில் பெட்டியை சேர்த்து புகைப்படங்கள் எடுக்க வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூ.1500 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    மற்ற ரெயில் நிலையங்களுக்கான கட்டணம்

    ரூ.3ஆயிரமும், ரெயில் பெட்டிக்கு முன்பு எடுக்க கூடுதலாக ரூ.1000-மும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

    • ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
    • கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ராணி வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-24 கல்வி ஆண்டிற்கு இணைய வழி மூலம் விண்ணப்பித்த மாணவர்க ளுக்கு மே 31 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    முதல் நாளில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திற னாளிகள், தேசிய மாணவர் படை மாணவ, மாணவிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. ஜூன் 2ம் தேதி பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பாடப் பிரிவுகளுக்கும், ஜூன் 3ஆம் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5ஆம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவ லருடன் வர வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும்போது உரிய மதிப்பெண் சான்றி தழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ்கள், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் 5 புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    கலந்தாய்வில் ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பிறகு வேறு பாட பிரிவிற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    ஒரு பாடப்பிரிவில் சேர்க்கை பெற்ற பின்னர் வேறு பாடப் பிரிவிற்கு மாற்றம் செய்ய அனுமதிக்க இயலாது.

    கல்வி கட்டணம் முழுவதும் செலுத்திய பிறகே சேர்க்கை பூர்த்தியாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தனியார் பள்ளிகளின் 12 ஆயிரத்து 179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106 பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, மாணவர்கள் இருக்கை, சி.சி.டி.வி கேமரா, அவசரகால வழி, வாகனத்தின் தரம், தீயணை ப்பான் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் 32,167 வாகனங்களில் 12,179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வாகனங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசிடம் வழிமுறை இல்லை .

    தனியார் பஸ்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீறியதாக ஒரு சில பஸ்கள் மீது புகார் வந்துள்ளது.

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து ஆணையர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

    போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணி யிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

    பள்ளி வாகனம் அல்லாமல் தனியார் வாகனத்தை பயன்படுத்தி மாணவர்களை அழைத்துச் சென்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் விரைவில் மினி பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் திடம், அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பினர் பொது ச்செயலாளர் சரவணன் கொடுத்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட மிக அதிகமாக பல மடங்கு கட்ட ணம் வசூலித்து வருகின்றனர்.

    தற்போது நடப்பு ஆண்டுக்கான கல்வி கட்டண வசூல் தொடங்கி விட்டது. ரூ.9 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக

    பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கும் கட்டணத்தை வங்கி கணக்கில் மட்டுமே கட்டணங்களை மாணவர்கள் செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும்.
    • மகப்பேறு விடுப்பு காலத்தை பிற துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்க வேண்டும்.

    திருவாரூர்:

    தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் முதற்கட்ட போராட்டமாக மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முன்னுரிக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் தவமணி தலைமையில் நடைபெற்று வருகிறது.

    இதில் குழந்தைகளின் நலன் கருதியும் வெயிலின் தாக்கத்தையும் தற்போது பரவிரும் காய்ச்சலையும் கருத்தில் கொண்டு கோடை விடுமுறை அளித்திட வேண்டும்.

    காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் பிரதான அங்கன்வாடி மையங்களை மினி மையமாக்குவதையும் குறு மையத்தை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தையும் கைவிட வேண்டும்.

    அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதிய வழங்கிட வேண்டும். குறுமைய ஊழியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    10 ஆண்டுகள் பணி முடித்து தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவிய உயர்வு வழங்க வேண்டும்.

    பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

    மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிய வேண்டும் அங்கன்வாடி மையங்களுக்கு மின் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை பிறத் துறையில் வழங்குவது போல் ஒரு வருடம் வழங்கிட வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த காத்திருப்பு போராட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

    மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது.
    • பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.

    கும்பகோணம் தாலுகா, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, அரியத்திடல் கிராமத்தில் குடும்ப தலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

    முன்னதாக வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெசிந்தா மார்ட்டின் கலந்து கொண்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் சேவைகள் குறித்த பிரசுரங்கள், சட்ட உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி, எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக நீதிபதிகள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வளாகத்தின் அருகே மரக்கன்றுகள் நட்டனர்.

    முகாமில் தலைவர் பிரேமா ராமச்சந்திரன், துணை தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார். முகாம் ஏற்பாடுகளை குணசீலன் செய்திருந்தனர்.

    • நாட்டில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
    • கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் , துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் , சட்டப்பூர்வ அமைப்புகள் தீர்ப்பாயங்கள் போன்ற வற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

    இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதா ரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவே ண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்ப ட்டுள்ளது.

    இப்பணி காலியிடங்களு க்கு www.ssc.nic.in என்ற பணியா ளர் தேர்வாணை யத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்படையி லான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ண ப்பிக்க கடைசி நாள் 3.05.2023.

    மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.
    • மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகை வழங்கல்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஜோதி அறக்கட்ட ளை சார்பில் விளிம்புநிலை குடும்பங்களை சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள அலுவ லகத்தில் நடைபெற்றது.

    இதில் தஞ்சையில் உள்ள தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் தந்தையை இழந்த மாணவிக்கு ஏற்கனவே 2 ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில் தற்போது இறுதியாண்டு கட்டணமும், இ-தேர்வு கட்டணமும் வழங்கப்பட்டது.

    இதே போல், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளத்தை சேர்ந்த தனியார் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிக்கும் கல்விக்கட்டணம் வழங்கப்பட்டது.

    மேலும், சலவை தொழிலாளி ஒருவருக்கு சுயமாக தொழில் செய்ய புதிய இஸ்திரி பெட்டியும் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ஜோதி அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில்:-

    கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட அறக்கட்டளை தற்போது வரை மாணவ- மாணவிகளுக்கு சுமார் ரூ. 13 லட்சம் வரை கல்வி உதவி தொகையாகவும், விளிம்புநிலை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்த வரையில் சுமார் ரூ. 34 லட்சம் வரையில் செலவிடப்பட்டுள்ள தாகவும், விளிம்புநிலை மக்களின் துயர் துடைக்கும் வகையில் சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்களிலும் ஜோதி அறக்கட்டளை தொடர்ந்து ஈடுபடும் என்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
    • பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

    திருப்பூர் :

    தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களை யொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக பத்திரப்பதிவு களில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.

    அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.

    கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வைத்திருந்த பலரும் அந்த பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களை பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சி பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடை குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    கடந்த 20ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்ட ணத்தை நான்கில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு எல்லா தரப்பிலும் கடும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

    கருப்பு பணப்புழக்கத்தை குறைத்து அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம் இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களின் சுமையை குறைத்திருப்பதை போல் இருந்தாலும் உண்மையில் பத்திரப்பதி வுக்கு முன்பை விட கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    உதாரணமாக தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து பதிவு செலவை கணக்கி ட்டால் ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும் பதிவு கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பை கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்ட ணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.
    • விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024 ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற் பள்ளிகள் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீடிப்பு வழங்கவும் கூடுதல் அலகுகள் சேர்க்கவும் 28.02.2023 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

    அங்கீகாரம் பெற ஒரு தொழிற் பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்க உள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் / கூடுதல் அலகுகளுக்கு தேவையான விபரங்கள் அனைத்தும் ஒரு விண்ணப்பத்தில் மட்டுமே அளிக்க வேண்டும்.

    என்.இ.எப்.டி மூலம் தொழிற்பள்ளி பணம் ( விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ) செலுத்தும்போது தொழிற்பள்ளியின் வங்கிக் கணக்கிலிருந்து டிரான்ஸ்பர் செய்யப்பட வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழிற் பள்ளிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை வங்கி ஸ்டேட்மெண்ட் -ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரிலுள்ள வங்கிக் கணக்கிலிருந்து ஆர்.டி.ஜி.எஸ், என்.இ.எப்.டி மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.

    விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள புரோஸ்பெக்டஸ்-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2023. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

    மேலும் விபரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். திருச்சி மண்டலப்பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விபரம் பெறலாம்.

    தொலைபேசி எண் :0431-2422171 மின்னஞ்சல் :tnjadtrg2018@gmail.com ஆகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×