search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்
    X

    கலெக்டர் மகாபாரதி.

    ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

    • நாட்டில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
    • கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:-

    மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு-2023 தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் , துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் , சட்டப்பூர்வ அமைப்புகள் தீர்ப்பாயங்கள் போன்ற வற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-ற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களை அறிவித்துள்ளது.

    இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதா ரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

    பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவே ண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்ப ட்டுள்ளது.

    இப்பணி காலியிடங்களு க்கு www.ssc.nic.in என்ற பணியா ளர் தேர்வாணை யத்தின் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கணினி அடிப்படையி லான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ண ப்பிக்க கடைசி நாள் 3.05.2023.

    மேலும் ஆன்லைனில் கட்டணம் செலுத்து வதற்கான கடைசி நாள் 04.05.2023 ஆகும்.

    எனவே இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன் அடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×