search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் சிவசங்கரன்
    X

    நாகையில் பள்ளி வாகனங்களை அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு செய்தார்.

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் சிவசங்கரன்

    • தனியார் பள்ளிகளின் 12 ஆயிரத்து 179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள தனியார் பள்ளிகளின் மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தமிழக போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார்.

    நாகப்பட்டினம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் 106 பள்ளி வாகனங்களில் முதலுதவி பெட்டி, மாணவர்கள் இருக்கை, சி.சி.டி.வி கேமரா, அவசரகால வழி, வாகனத்தின் தரம், தீயணை ப்பான் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிரு ப்பதாவது :-

    தமிழக முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் 32,167 வாகனங்களில் 12,179 வாகனங்கள் இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மீதமுள்ள வாகனங்களை வரும் 29ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் நிர்ணயம் செய்ய தமிழக அரசிடம் வழிமுறை இல்லை .

    தனியார் பஸ்கள் சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதனை மீறியதாக ஒரு சில பஸ்கள் மீது புகார் வந்துள்ளது.

    கூடுதல் கட்டணம் வசூல் செய்யும் தனியார் ஆம்னி பஸ்கள் மீது போக்குவரத்து ஆணையர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும்.

    போக்குவரத்து கழகங்களில் உள்ள காலிப்பணி யிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும்.

    பள்ளி வாகனம் அல்லாமல் தனியார் வாகனத்தை பயன்படுத்தி மாணவர்களை அழைத்துச் சென்றால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் விரைவில் மினி பஸ்கள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நாகை மாலி எம்.எல்.ஏ., வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×