search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்
    X

    கும்பகோணம் அருகே அரியத்திடலில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.

    கும்பகோணம் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்

    • எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது.
    • பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.

    கும்பகோணம் தாலுகா, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, அரியத்திடல் கிராமத்தில் குடும்ப தலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

    முன்னதாக வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெசிந்தா மார்ட்டின் கலந்து கொண்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் சேவைகள் குறித்த பிரசுரங்கள், சட்ட உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி, எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக நீதிபதிகள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வளாகத்தின் அருகே மரக்கன்றுகள் நட்டனர்.

    முகாமில் தலைவர் பிரேமா ராமச்சந்திரன், துணை தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார். முகாம் ஏற்பாடுகளை குணசீலன் செய்திருந்தனர்.

    Next Story
    ×