என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது.
- பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
திருப்பூர் :
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையாக பதிவுத்துறை உள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் நிலத்தின் சந்தை மதிப்பைக் காட்டிலும், வழிகாட்டி மதிப்பு மிகவும் குறைவு. பெருநகரங்களை யொட்டியுள்ள புறநகர் பகுதிகளில் வழிகாட்டி மதிப்பை விட சந்தை மதிப்பு 10 மடங்கு அதிகம். இதன் காரணமாக பத்திரப்பதிவு களில் கருப்புப் பணம் பெருமளவு கை மாறுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் 2017 ஜூனில், அரசாணை வெளியிடப்பட்டு வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் குறைக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒரு சதவீதமாக இருந்த பதிவுக்கட்டணம் 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் சந்தை மதிப்புக்கும், வழிகாட்டி மதிப்புக்குமான இடைவெளி மேலும் அதிகரித்தது.
கடந்த 2016 நவம்பரில் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. அப்போது பல ஆயிரம் கோடி கருப்பு பணம் வைத்திருந்த பலரும் அந்த பணத்தை வைத்து தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களை பேசி முடித்து ஒப்பந்தம் போட்டிருந்தனர். அந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்காகவும், அரசின் வளர்ச்சி பணிகளுக்காக, நில ஆர்ஜிதத்துக்குத் தரப்படும் இழப்பீடை குறைக்கவும், வழிகாட்டி மதிப்பு குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த 20ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வழிகாட்டி மதிப்பை 33 சதவீதம் உயர்த்தியும், பதிவுக்கட்ட ணத்தை நான்கில் இருந்து 2 சதவீதமாக குறைத்தும் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு எல்லா தரப்பிலும் கடும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு பணப்புழக்கத்தை குறைத்து அரசின் வருவாயை அதிகரிக்க, தற்போதுள்ள சந்தை மதிப்புக்கேற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்துவது அவசியம். இப்போதும் கடந்த 2017ல் குறைத்த 33 சதவீதம் வழிகாட்டி மதிப்புதான் மீண்டும் உயர்த்தப்படுகிறது. அதேநேரத்தில் அப்போது ஒன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்ட பதிவுக்கட்டணம் இப்போது 2 சதவீதமாக மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு மக்களின் சுமையை குறைத்திருப்பதை போல் இருந்தாலும் உண்மையில் பத்திரப்பதி வுக்கு முன்பை விட கூடுதல் தொகையையே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக தற்போது 666 ரூபாயாக உள்ள ஒரு சதுர அடி வழிகாட்டி மதிப்பு, இனி ஆயிரம் ரூபாயாக உயரும். ஒரு சென்ட் நிலத்துக்கு இதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவு கட்டணம் சேர்த்து பதிவு செலவை கணக்கி ட்டால் ரூ.7,092 அதிகக் கட்டணம் செலுத்த வேண்டும். இனிமேல் அரசு அமைத்துள்ள குழு ஆய்வு செய்து நிலத்திற்கு புதிய வழிகாட்டி மதிப்பை பரிந்துரை செய்தாலும் பதிவு கட்டணம் இதே 2 சதவீதமாகவே தொடர வாய்ப்புள்ளது. முன்பு குறைத்த வழிகாட்டி மதிப்பை கூட்டிய தமிழக அரசு, முந்தைய அரசு மூன்று சதவீதம் கூட்டிய பதிவுக்கட்ட ணத்தை மீண்டும் ஒரு சதவீதமாகக் குறைப்பது அவசியம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்