search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை"

    • தலைமறைவான கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை
    • கைதான அரசு ஊழியர் சஸ்பெண்டு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே பெத்தேல் புரம் படுவாக்க ரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பன் விளை- திக்க ணங்கோடு சாலையில் நாட்டு மருத்துவ வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி வைத்தியசாலைக்கு வந்த ஒருவர் வைத்தியர் ஜார்ஜின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது வைத்தியரிடம் நகை பறித்த கொள்ளை யனின் உருவம் சிக்கியது. மேலும் அவர் வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கொடுப்பைகுழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படி யாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது வைத்தியர் ஜார்ஜிடம் திருடியதை ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போதுபிடிப்பட்ட வர்கள் நட்டாலம் பொற்றைவிளை பகுதியை சேர்ந்த அபிஷேக்( 22 )சாந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் (19 )கொடுப்பை குழியை சேர்ந்த சிவசங்கு( 53 )அவரது மகன் ஜோதி (29) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் சிவசங்குவின் மற்றொரு மகன் சிவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது .அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்ப டையில் அபிஷேகத்திற்கு வேலை கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக அபிஷேக் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு சிக்கி கொண்டார். அபிஷேக் கைது செய் யப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    இதைதொடர்ந்து அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசங்கு ஜோதி மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொள்ளை வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • ரியல் எஸ்டேட் தொழில் செய்தவர் கொலை வழக்கில் கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
    • சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலூர்

    சிவகங்கை மாவட்டம் கட்டாணி பட்டி அருகே உள்ள பொன்குண்டு பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது55). இவர் இடத்தை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர் கரூரில் ஓட்டல் நடத்தி வருகிறார்.

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மாதத்தின் பெரும்பாலான நாட்களில் சொந்த ஊரில் தங்கும் கண்ணன் மேலூருக்கு வேலை நிமித்தமாக சென்று வருவது உண்டு. அதன்படி நேற்று மதியம் கண்ணன் தனது மொபட்டில் மேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    நான்கு வழிச்சாலையில் உள்ள ஆட்டுக்குளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் கண்ணனை மறித்து சரமாரியாரக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் படுகாயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழில் முன்விரோதத்தில் கண்ணன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனிப்படை

    இதனிடையே கண்ண னை கொலை செய்து காரில் தப்பிய கொலை யாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் மன்னவன் (மேலூர்), சப்-இன்ஸ்பெக்டர் குமரகுரு (ஊமச்சிக்குளம்) ஆகியோர் தலைமையில் 2 தனிப்ப டைகள் அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலை நடந்த பகுதியில் பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி காமிரா பதிவுகளை எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    கொலையாளிகள் சிக்கிய பின்பே கொலைக்கான காரணம் தெரியவரும்.

    • காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர்.
    • ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம் மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொண்டனர்.

    பல்லடம் :

    மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பஜூலு மண்டல் என்பவரது மகன் ஷாஜி மண்டல்(35) இவர் தற்போது பல்லடம் அருகே உள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் வசித்துக் கொண்டு, தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வட மாநிலப் பெண் ஒருவர் வேலையில்லாமல் கஷ்டப்படுவதாகவும் வேலை இருந்தால் சொல்லுமாறும், தற்போது மிகவும் சிரமமாக இருப்பதால் பண உதவி செய்யுமாறு கூறியுள்ளார். இதனால் அவருக்கு உதவி செய்வதற்காக அந்தப் பெண் வரச் சொன்ன சின்னக்கரை பஸ் நிறுத்தம் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் ஷாஜி மண்டலை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் கொண்டு சென்று அங்கு உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்து, அவரை அடித்து மிரட்டி ரூ.10லட்சம் பணம் கேட்டுள்ளனர். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக்கூறி ஷாஜி மண்டல் அழுதுள்ளார். மீண்டும் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு, பணம் ரூ. 5 ஆயிரம், மற்றும் வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை பறித்துக்கொ ண்டனர். பின்னர் திருப்பூரில் உள்ள ஏடிஎம் மையத்தில் ஷாஜி மண்டலின் ஏடிஎம் கார்டு பயன்படுத்தி ரூ. 56 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளனர். பின்னர் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனை அருகே இறக்கி விட்டு, சீக்கிரமாக பணத்தை ரெடி செய், இது குறித்து புகார் செய்ய போலீசுக்கு போனால் குடும்பத்தையே கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து தன்னை கடத்தி பணம் பறித்த பெண் உள்ளிட்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர் பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் அவரிடம் பேசிய ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரது மனைவி சுகுலா சர்தார்(35) என்பவரை பிடித்து விசாரணை செய்த போது, அவரும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த நிலையில் பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 180 மி.லி. கொண்ட 96 மது பாட்டில்கள் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயம் இருந்தது.
    • காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கீழ்வேளூர் போலீஸ் சரகம் பெருங்கடம்பனூர் - சிக்கல் சாலையில் உள்ள குற்றம் பொருத்தானிருப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த காரில் காரைக்கால் பகுதியில் இருந்து கடத்திவரப்பட்ட வெளி மாநில 90மிலி கொண்ட 1920 மது பாட்டில்களும், 180மிலி கொண்ட96 மது பாட்டில்களும் மற்றும் 230 லிட்டர் பாண்டி சாராயமும் இருந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரில் 4 நபர்கள் வந்தவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் காரில் வந்த நாகை வெளிப்பாளையம் வ.உ.சி. தெருவை சேர்ந்த தென்னரசன் (வயது 57), வெளிப்பாளையம் கொட்டுப்பாளைய தெரு காளியப்பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த யாசர் அரபாத் (35), காரைக்கால், தருமபுரம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வம் (47), காரைக்கால் காமராஜர் நகரை சேர்ந்த கருணாகரன் (43) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

    கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கீழ்வேளூர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தென்னரசன் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

    • போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.
    • வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார்.

    கோவை:

    கோவையில் கடந்த மாதம் 13-ந்தேதி லட்சுமி கார்டனை சேர்ந்த கோகுல் என்பவரை மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது. இது தொடர்பாக போலீசார் 7 பேரை கைது செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல் தலைமையில் ஒரு குழுவும், ரத்தினபுரியை சேர்ந்த குரங்குஸ்ரீராம் தலைமையிலான ஒரு குழுவும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு குரங்கு ஸ்ரீராமை, கோகுல் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தார். இந்த கொலைக்கு பழிவாங்கவே குரங்குஸ்ரீராமின் நண்பர்கள் கோகுலை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    இதுதவிர இந்த 2 குழுவினரும் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டும் மோதிக்கொண்டனர். குரங்கு ஸ்ரீராம் இறந்த பிறகு, நண்பரின் மரணத்துக்கு விரைவில் பழி தீர்க்கப்படும் எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.

    மேலும் இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, பட்டாக்கத்தி, அரிவாள் வைத்து நடந்து வருவது போலவும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அதிலும் உச்சமாக அவர்களுடன் இளம்பெண் ஒருவர் கையில் கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடந்து வருவது போன்ற காட்சியும் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக பிரகா பிரதர்ஸ் என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகமான வீடியோக்கள் இருந்தன.

    இதையடுத்து போலீசார் வீடியோக்கள் வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். மேலும் இதுபோன்று வீடியோ வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

    போலீசாரின் அதிரடி நடவடிக்கையால் ரவுடிகளின் கொட்டம் சற்று குறைந்தது. ஆயுதங்களுடன் வீடியோ வெளியிடுவது குறைந்திருந்தது.

    இந்த நிலையில் நேற்று இளம்பெண் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் அரிவாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இதையடுத்து போலீசார் அந்த வீடியோ எந்த சமூக வலைதளத்தில் இருந்து வந்தது என விசாரித்த போது அது பிரண்ட்ஸ் கால் மீ தமன்னா என்ற பெயரில் இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து அவர் யார் என்பதை கண்டறிய விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர் விருதுநகரை சேர்ந்த வினோதினி என்ற தமன்னா(வயது23) என்பதும், கோவை காளப்பட்டியில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    வினோதினி நர்சிங் படித்து முடித்துள்ளார். இவர் கோவை காளப்பட்டியில் தனது ஆண் நண்பரான சூர்யா என்ற சூர்ய பிரகாசுடன் சேர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார். அதில் வந்த பணத்தை கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

    மேலும் வசதி படைத்த இளைஞர்களிடம் நைசாக பேசி, அவர்களை தனது இடத்திற்கு வரவழைத்து, தனது ஆண் நண்பர்கள் மூலம் அவர்களை மிரட்டி பணமும் பறித்து வந்துள்ளார். அதேபோல இதுபோன்ற வீடியோக்களையும் வெளியிட்டு, 2 குழுக்களுக்கு இடையே பகையை உருவாக்கவும் முயற்சி செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் வீடியோ வெளியிட்ட வினோதினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது அவர் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் தனிப்படையினர் இன்று திருப்பூர் விரைந்துள்ளனர். திருப்பூரில் முகாமிட்டு அவர் எங்கு உள்ளார் என்பது குறித்து அந்த மாவட்ட போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நோடல் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கோவை,  

    சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை தவிர்க்க, ஒரு முறை பயன்படுத்தி துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

    ஆனாலும் விதிமீறல் தொடர்வதால், தினமும் டன் கணக்கில் சேகரமாகும் குப்பையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகம் காணமுடிகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பிளாஸ்டிக் பொருட்களுக்கு முதல் முறை ரூ.25 ஆயிரம், இரண்டாவது முறை, ரூ.50 ஆயிரம், மூன்றாவது முறை ரூ. 1 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் போன்ற மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கு, முதன் முறை, 10 ஆயிரம், இரண்டாவது 15 ஆயிரம், மூன்றாவது முறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மளிகைக்கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு முதன் முறை, ரூ.1,000, இரண்டாவதாக, ரூ.2,000, மூன்றாவதாக, ரூ.5,000-ம், சிறு வணிக விற்பனையாளர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாவதாக, ரூ.200, மூன்றாவது முறை ரூ.500 விதிக்க விதி முறை உள்ளது. ஆனாலும் விதிமீறல்கள் தொடர்கின்றன.

    இதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கிடங்குகள், கடைகள் உள்ளிட்டவற்றில்ஆய்வு செய்துஅபராதம் விதிக்க தனிப்படை அமைத்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்காக, பிளாஸ்டிக் நோடல் அலுவலராக, சலேத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிளாஸ்டிக் தொடர்பான புகார்களை நோடல் அலுவலரின், 94894-57403 என்ற செல்போன் எண்ணில், பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.

    தனிப்படையில் சுகாதார ஆய்வாளர் உள்ளிட் டோர் இடம்பெற்று உள்ளனர். தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. இதனால் விதிமீறல்கள் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மத்திய மண்டல ஐ.ஜி தகவல்
    • தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    பெரம்பலூர்,

    தொண்டப்பாடி கிராமத்தில் மாணிக்கம், அவரது மனைவி மாக்காயி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கான ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளாதேவி, நிருபர்களிடம் கூறியதாவது;-இரட்டை கொலை தொடர்பாக குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரட்டை கொலை சம்பந்தமாக இரண்டு விதமான விசாரணையை தொடங்கி உள்ளோம். நகை, பணத்தை கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள் கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்களா? அல்லது முன் விரோதம் காரணமாக, உறவினர், உள்ளூர்வாசிகளே யாராவது இந்த கொலைகளை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேலும் போலீசாருக்கு சவால் விடும் விதமாக மிளகாய் பொடியை தூவிவிட்டு குற்றவாளிகள் சென்றுள்ளதால், பழைய குற்றவாளிகளா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்த பகுதியில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவான ரவுடியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
    • வீட்டில் பதுங்கியிருந்த போது பிடிபட்டார்.

    மதுரை

    மதுரை சோலை அழகுபுரம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மாயக்கண்ணன் என்ற மாயாண்டி. இவரது மகன் காசி மணி (வயது 23). இவர் மீது தெற்கு வாசல் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் ஆகிய 2 போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து தாக்குதல், பொது இடத்தில் ஆபாசமாக பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதைத்தொடர்ந்து காசிமணியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதனைத் தொடர்ந்து அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதனைத் தொடர்ந்து காசி மணி தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்வதற்காக தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் காசிமணி மதுரை புறநகரில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது காசிமணி ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து கைது செய்து மீண்டும் மதுரை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    • ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது.
    • காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், வேப்பூர்-சேலம் சாலையின் ஓரமாக சுமார் 2. கிலோ மீட்டர் தூரம் பெரியநெசலூர் வரை ஓடை நீர்நிலை புறம்போக்கு நிலம் உள்ளது. அந்த ஓடைக்கரையின் 2 பக்கமும் அதிகளவில் பனைமரங்கள், மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளது. இந்நிலையில். மர்ம நபர்கள் ஜே.சி.பி., எந்திரம் மூலம் பனை மரங்களை வெட்டிலாரியில் ஏற்றும் பணி நடந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திட்டக்குடி போலீஸ் டி.எஸ்.பி. காவ்யாவிற்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் டிஎஸ்பி, காவ்யா, வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், வேப்பூர் துணை தாசில்தார் மஞ்சுளா, வருவாய் ஆய்வாளர் மற்றும் வேப்பூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர் . இதை அறிந்த மரம் வெட்டிக்கொண்டு இருந்தவர்கள் ஜே.சி.பி. டிரைவர் உள்ளிட்டோர் தப்பி ஓடினார்கள்.

    இது குறித்து திட்டக்குடி டி.எஸ்.பி., காவ்யா அங்கு விசாரணை செய்ததில் அரசு அனுமதியின்றி, சுமார் 61 பனைமரங்கள், 6 சீமை கருவேல மரங்கள், 1 ஈச்ச மரம் ஆகியவற்றை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது அதனை தொடர்ந்து டி.எஸ்பி. காவ்யா பனை மரங்கள் வெட்டப்பட்ட இடங்களை அளவீடு செய்து, காவல் துறையில் புகார் அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இது குறித்து சிறுநெசலூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து உள்ளனர். மரங்களை வெட்டிய மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • தொழிலாளி ஒருவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.
    • போலீசார் தனிப்படை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட மர்மநபரை கைது செய்தனர்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ்பாபு (வயது 43) தொழிலாளி. இவரை ரூ.30 ஆயிரம் பணத்திற்காக மர்ம நபர் கடத்தினார்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவுப்படி கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் சிவசெந்தில், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கீர்த்தி வாசன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம் செந்தில், ஜனார்த்தனன், நாடிமுத்து, பார்த்திபநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட நபர் பாபநாசம் அருகே உத்தமதானியை சேர்ந்த உத்திராபதி (25) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பதுங்கி இருந்த உத்திராபதியை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ரமேஷ்பாபுவை பத்திரமாக மீட்டனர்.

    இவ்வழக்கை விரைவாக விசாரித்து 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.
    • சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    வல்லம்:

    தஞ்சை வடக்குவாசல் பொந்தேரிபாளையம் கங்கா நகரை சேர்ந்தவர் சாமிநாதன்(வயது 36).

    இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது.

    போலீசாரின் ரவுடி பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்று உள்ளது.

    சம்பவத்தன்று தஞ்சை சுந்தரபாண்டியன் நகர் பிருந்தாவன் ஆர்ச் அருகே 6 பேர் சேர்ந்து சாமிநாதனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கள்ளபெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 6 பேரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பையில் இருந்து ரெட்டிப்பாளையம் சுடுகாடு அருகே சாமிநாதன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரும் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று பதுங்கி இருந்த 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    பின்னர் 6 பேரையும் போலீசார், கள்ளப்பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் தஞ்சை பொந்தேரிபாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரன்(வயது 28), சுந்தரபாண்டியன் நகரை சேர்ந்த முத்துக்குமார்(28), முத்துக்குமாரின் தம்பி பங்கஜ்குமார்(23), பள்ளியக்ரஹார‌ம் பகுதியை சேர்ந்த ஜெபஸ்டின் (20), காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்த மாதவன்(25) பிருந்தாவன் பகுதி இ.எம்.ஜி.நகரை சேர்ந்த அபிசாய்(25) ஆகிய 6 பேரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி நேற்று இரவு புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    நாகர்கோவில், அக்.20-

    நாகர்கோவில் கோட்டார் மேல தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 47). இவர் கடியப்ப ட்டணத்தில் நகை பட்டறை வைத்துள்ளார்.தினமும் காலையில் சென்று விட்டு குமார் இரவு வீட்டிற்கு வருவது வழக்கம்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இவரது நகை பட்ட றையில் வட மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வேலைக்கு சேர்ந்தார்.அவர் குமார் வீட்டிலேயே தங்கினார். தினமும் குமார் வேலைக்கு செல்லும்போது மோட்டார் சைக்கிளில் அவரை அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்றும் குமார் வேலைக்கு சென்றபோது அந்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். மதியம் குமார் கடையில் இருந்து வெளியே சென்று விட்டு பின்னர் கடைக்கு வந்தார். அப்போது கடையில் இருந்த வட மாநில தொழிலாளியை சாப்பிட்டு விட்டு வருமாறு கூறினார்.

    இதையடுத்து அவர் குமாரின் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்றார். சாப்பிட சென்ற வட மாநில தொழிலாளி நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதனால் குமார் அவரை தேடினார்.

    பின்னர் அவரது பட்ட றையிலிருந்து நகையை சோதனை செய்தபோது 8 பவுன் நகை மாயமாகி இருந்தது தெரிய வந்தது. மாயமான நகையை வட மாநில தொழிலாளியே எடுத்து சென்றிருக்க லாம் என்று குமார் மண வாளக்குறிச்சி போலீசில் புகார் செய்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி றார்கள். குமாரின் நகை பட்டறையில் அந்த வாலி பரை வேலைக்கு சேர்த்து விட்டது யார்? என்ற விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    மேலும் நகையை எடுத்துச் சென்ற வாலிபர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் அங்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள். அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குமாரிடமிருந்து வாங்கி சென்ற மோட்டார் சைக்கி ளை அவர் எங்காவது பஸ்நிலையம் அல்லது ெரயில் நிலையத்தில் விட்டுச் சென்று இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதை யடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையங்களில் மோட்டார் சைக்கிளை தேடும் பணி நடந்து வருகிறது. வேலைக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே நகை பட்டறையிலிருந்து நகையை வடமாநில தொழி லாளி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது

    ×