search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனிப்படை"

    • பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார்.
    • ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் தாலுக்கா கரப்பாளையம் பகுதியில் பட்டதாரி இளம் பெண் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டார். அன்று முதல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவைப்பு சம்பவங்கள், வன்முறை நடைபெற்று வந்தது.

    இதன் காரணமாக சுமார் 800க்கும் மேற்பட்ட போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்து வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.

    ஜேடர்பாளையம் அருகே உள்ள பொத்தனூர் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி முகவர் சவுந்தர்ராஜன் (55). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூர் பகுதியில் உள்ளது. இதில் 3 ஏக்கர் நிலத்தில் பாக்கு மரங்களையும், மீதியுள்ள 2 ஏக்கர் நிலத்தில் கரும்பு மற்றும் தென்னை பயிர் செய்திருந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சவுந்தரராஜனின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த தங்கமுத்து சென்றுள்ளார். அப்போது சவுந்தரராஜன் நிலத்தில் பயிர் செய்திருந்த பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சவுந்தரராஜனுக்கு தகவல் தெரிவித்தார்.

    தோட்டத்தில் பயிர் செய்திருந்த சுமார் 1800 பாக்கு மரங்கள் அனைத்தையும் மர்ம நபர்கள் வெட்டிச் சாய்த்துள்ளதை பார்த்த சவுந்தர்ராஜன் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கோவை மண்டல ஐ.ஜி சுதாகர் மற்றும் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி ஆகியோர் சவுந்தரராஜன் தோட்டத்திற்கு சென்று மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட பாக்கு மரங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து எஸ்.பி. ராஜேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பாக்கு மரங்களை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் தனித்தனி குழுவாக ஆனங்கூர் மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வீட்டில் உள்ளவர்கள் பெயர்கள், அவர்களுடைய செல்போன் எண்களைப் பெற்றும், பாக்கு மரங்களை வெட்டி சாய்த்த சம்பவங்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதேபோல் இந்த பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக ஆனங்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.

    • மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் கள்ளச்சாரா யம் விற்பனை மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுவிலக்கு போலீசார் குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அருமனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் மடத்துவிளை வீடு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அங்கு விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப் படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பாகோடு பேரை மடத்து விளை வீடு பகுதியை சேர்ந்த ராஜ ஜெபசிங் என்ற ஜினு (வயது 40) என்பவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த ராஜ ஜெபசிங் தலைமறைவாகி விட்டார்.

    அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்ப டையில் தனிப்படை போலீ சார் அங்கு விரைந்துள்ளனர்.

    ஏற்கனவே ராஜஜெபசிங் மீது தக்கலை மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்பட 3 இடங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அருண்குமாரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது.
    • தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). சில மாதங்களுக்கு முன்பாக இவர்கள் இருவரும் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த இவர்கள் தினமும் மயிலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

    இவர்கள் நேற்று முன்தினம் மைலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட மோட்டார் சைக்கிளில் வந்தனர். இவர்களை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 3 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தது. அப்போது வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் வந்த போது, இவர்களை மர்மகும்பல் மடக்கி சுற்றி வளைத்தது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த மர்மகும்பல், அருண்குமார், அன்பரசனை கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டனர்.

    இது தொடர்பாக வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையி லான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமை யில் தனிப்படை அமைத்து கொலையாளி களை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இவர் கூலிப்படையை வைத்தோ, அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ அருண்குமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    இதில் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர்களை வைத்தே அருண்குமாரை முகிலன் கொலை செய்திருக்கலாம் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட நபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேசமயத்தில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டில் சரணடைய உள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசா ரணை நடத்தி கண்காணித்து வருகின்றனர்.

    • போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கணவரை பிடிக்க தனிப்படை தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • விரைவில் பிடிபடுவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆவரம் பட்டியை அருகே உள்ள ஒத்தப்பட்டியை சேர்ந்தவர் மதிமன்னன்(வயது 28). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது அத்தை மகளான பிரியாவுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த 6 மாதத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவரை பிரிந்து சென்றுவிட்டார்.

    இதையடுத்து பாண்டி செல்வி(22) என்பவரை மதிமன்னன் 2-வது திரு மணம் செய்தார். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மதிமன்னனுக்கு தனது 2-வது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் தனது பாட்டி இறந்ததால் ஒரு வாரத்திற்கு முன்பு பாண்டி செல்வி அங்கு சென்று விட்டார். அந்த வீட்டிற்கு நேற்று மதிமன்னன் சென்றார். அவர் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து சென்று மனைவி பாண்டிசெல்வியை கத்தியால் சரமாரியாக குத்தினார்.

    இதில் படுகாயமடைந்த பாண்டிசெல்வி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கொலை சம்பவம் குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மதிமன்னனை கைது செய்தனர். மதிமன்னம் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால் எழுத்து மூலமாக அவரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிந்த நிலையில் அவரை சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு முன்னதாக ராஜ பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு மருத்து பரிசோத னைக்காக அழைத்து சென்றனர்.

    இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்த கழிவறைக்கு சென்ற மதிமன்னன், ஆஸ்பத்திரியின் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். கழிவறைக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த போலீசார் அவரை தேடி பார்த்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய மதிமன்னனை பிடிக்க ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரீத்தி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று மதிமன்னனை தேடி வருகின்றனர்.

    கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர் தப்பியோடிய சம்பவம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் உசார்படுத்தப் பட்டனர். இதனால் மதி மன்னன் விரைவில் பிடிபடு வார் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொன்ற தொழிலாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
    • ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம் பண்ணையை அடுத்துள்ள ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவரது மனைவி ராஜேஸ்வரி(வயது40). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜேஸ்வரிக்கும், சங்கரநத்தத்தை சேர்ந்த விறகு வெட்டும் தொழிலாளி பரமசிவம் (42) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அவரது கணவர் முத்துப்பாண்டி கண்டித்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட பிரச்சினையில் கணவன்-மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் ராஜேஸ்வரி தனது தவறை உணர்ந்து இனிமேல் பரமசிவத்துடன் பழக மாட்டேன் என கூறியுள்ளார். இதையடுத்து கணவன், மனைவி மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்தநிலையில் ராஜேஸ்வரியிடம் பேச பரமசிவம் முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததோடு, இனிமேல் தன்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம் என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரத்தில் இருந்த பரமசிவம் நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜேஸ்வரி வீட்டுக்கு வந்துள்ளார்.

    வீட்டு திண்ணையில் தூங்கி இருந்த ராஜேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்துவிட்டு பரமசிவம் அங்கிருந்து தப்பினார்.

    இது தொடர்பாக ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பியோடி தலைமறைவாகிய பரமசிவத்தை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    அவர் வெளியூருக்கு எங்காவது தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆகவே பரமசிவத்தை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் செய்யது இப்ராகிம் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தனிப்படை போலீசார் பரமசிவத்தை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
    • காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர்.

    சென்னிமலை, 

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ஈங்கூரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் அதே பகுதியில் ஈங்கூர் பாலப்பாளையம் பிரிவு அருகே உள்ளது. கடந்த 23-ந் தேதி மாலையில் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் சத்தியமூர்த்தி (47) என்பவர் பாலப்பாளையம் பிரிவு கிளை நிறுவனத்தில் பண பரிவர்த்தனை முடிந்த பிறகு ரூ.23 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு ஈங்கூரில் உள்ள நிறுவனத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாலப்பா ளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்த போது வேறு ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சத்திய மூர்த்தியை வழிமறித்து காருடன் கடத்தி சென்றனர். பின்னர் ஈரோடு அருகே ரங்கம்பாளையம் குறிஞ்சி நகர் காட்டு பகுதியில் சத்தியமூர்த்தியை காருக்குள் கட்டிப்போட்டு ரூ.23 லட்சத்தை கொள்ளை யடித்து சென்றனர்.

    இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னிமலை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் செ ன்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். மேலும் பல்வேறு பகுதி களில் கண்காணிப்பு கேமரா க்களையும் ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே நால்ரோடு என்ற இடத்தில் தனிப்படை போலீசார் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்த போது சந்தேகத்திற்கு இடமாக பேசியுள்ளனர். பின்னர் அவர்களை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுக்கா, கண்ணங்குடி அருகே கள்ளர் தெருவை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் மனோகர் (வயது 29) என்பதும், மற்றொருவர் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் என்பவரின் மகன் நவநீதன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது. இதில் மனோகர் கடந்த 8 வருடங்களாக சத்தியமூர்த்தி வேலை செய்யும் அதே நிறுவனத்தில் ஸ்டோர் உதவியாளராக பணியாற்றி வருகிறார். மற்றொருவரான நவநீதன் என்பவரும் அதே நிறுவனத்தில் 6 மாதங்கள் வேலை செய்து பின்னர் கடந்த 3 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

    மனோகரும், நவநீதனும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது மனோகர் தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை செய்து வருவதால் அந்த நிறுவனத்தில் தினமும் சத்தியமூர்த்தி பண பரிவர்த்தனைக்காக அதே பகுதியில் உள்ள கிளை நிறுவனத்திற்கு சென்று வந்ததை மனோகர் கண்கா ணித்து ள்ளார். இது பற்றி தனது நண்பர் நவநீதனுக்கு தெரிவித்துள்ளார். பின்னர் இந்த தகவலை மனோகரும், நவநீதனும் தங்களது உறவி னர்களுக்கு தெரிவித்து ள்ளனர். அவர்கள் இந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளனர்.

    அதைத்தொடர்ந்து மனோகர் மற்றும் நவநீத னின் உறவினர்கள் 4 பேர் சத்தியமூர்த்தியை கண்கா ணித்து அவர் வரும்போது காருடன் கடத்தி சென்று ரூ.23 லட்சம் பணத்தை பறித்து சென்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து பணம் கொள்ளை போன தற்கு உடந்தையாக இருந்த மனோகர் மற்றும் நவநீதனை சென்னிமலை போலீசார் கைது செய்து பெருந்துறை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மனோகர் மற்றும் நவநீதன் கொடுத்த தகவலின் பேரில் பணத்தை கொள்ளை யடித்து சென்ற தலை மறைவான 4 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
    • ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    கோவை:

    சென்னை அயப்பாக்கம் ராஜம்மாள் நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவரது மகன் யுவன் கதிரவன் (வயது 13). இவர் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    கோடை விடுமுறையொட்டி பள்ளி விடுமுறை என்பதால் மகாலட்சுமி தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் கோவை மசக்காளிபாளையம் சின்னசாமி லே-அவுட் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்தார்.

    நேற்று காலை 8.30 மணியளவில் வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் யுவன் கதிரவன் வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    தொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சிறுவனின் தாய் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் அந்தப் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது ஒண்டிப்புதூர் பஸ் நிலையம் வழியாக சென்ற லோடு வேனில் சிறுவன் ஏறிச்சென்றது தெரியவந்தது.

    அந்த லோடு வேனின் பதிவு எண்ணை கொண்டு வேனை ஓட்டி சென்றது யார்? அவருடன் சிறுவன் ஏன் சென்றான் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

    விசாரணையில், அந்த வேன் வேடப்பட்டியில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த லோடு வேனை யாரோ மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. திருட்டு லோடு வேனில் சிறுவன் சென்றால் அவனை மர்ம நபர்கள் யாராவது கடத்திச் சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சிறுவனை கண்டுபிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் மாணவி ஒருவர் திடீரென மாயமானார். அப்போது சமூக வலைதளங்களில் இந்த தகவல் பரவி மாநிலம் முழுவதும் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த மாணவியை போலீசார் மீட்டனர். இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை வந்த சிறுவன் மாயமாகி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
    • பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சாய்பிரனீத் பொறுப்பேற்று உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தளமான மாமல்லபுரத்தின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். மாமல்லபுரத்தில் சட்ட விரோதமாக வெளிநாட்டு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், ஆன்லைன் விபச்சாரம், உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் ஓ.எம்.ஆர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கட்ட பஞ்சாயத்து செய்யும் ரவுடிகளை தனிப்படை மூலம் ரகசியமாக கண்காணித்து அவர்களை ஒழிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

    மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, பொதுமக்கள் 72991 92194 என்ற செல்போன் எண்ணிற்கும், வாட்ஸ் ஆப் மூலமும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்போரின் பெயர்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர்.
    • இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே காடகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 21). சம்பவத்தன்று இவர் தனது வீட்டிலிருந்து திருக்கோவிலூரில் உள்ள ஆஸ்பத்திரியில் பிரசவத்தி ற்கு அனுமதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார்.திருக்கோவிலூர் -விழுப்புரம் சாலை காடகனூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வடகரை தாழனூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த கார்முகிலன், விநாயகமூர்த்தி ஆகிய 2 பேரும் ஸ்ரீராம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தினர். இதனையடுத்து கார்முகிலன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென ஸ்ரீராமை வெட்டியதுடன் அவரை தாக்கினர். மேலும் ஸ்ரீராம் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூபாய் 1000 பணத்தை திருடிச் சென்றனர்.

    இது குறித்து ஸ்ரீராம் அரங்கண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா, சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கார்முகிலன் மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருக்கு தப்ப முயன்ற கார்முகிலனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கார்முகிலன் மீது அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள விநாயக மூர்த்தியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • கள்ள சாராயம் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கடந்த 13 -ம் தேதி 50-க்கு மேற்பட்டோர் கள்ளசாராயம் குடித்தனர். இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு நேரில் வந்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படுகிறதா? மது பாட்டில்கள், சாராயம் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனையடுத்து கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக 7 தனிப்படைகள் அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நேற்று போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது 293 லிட்டர் சாராயம், 229 மது பாட்டில்கள் ஆகியவற்றை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் 38 வழக்கு பதிவு செய்து 38 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் கள்ள சாராயம் மற்றும் மது பாட்டில்கள் ஆகியவற்றை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மற்றும் கடத்தி வரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பதட்டமான சூழல் நிலவுவதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதி மேட்டு தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகன் கனிவண்ணன் (வயது 30)சமையல் கலைஞர்.

    இவர் தற்சமயம் சீர்காழி நகரில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு தென்பாதி உப்பனாற்றங்கரையில் ரத்த வெள்ளத்தில் கனிவண்ணன் இறந்து கிடந்தார்.

    இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கனிவண்ணன் இறந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு அழுதப்படி விரைந்து வந்தனர்.

    குற்றவாளிகளை கைது செய்ய கோரி தென்பாதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சீர்காழி- மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜவகர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அதனை ஏற்று அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

    தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவுவதால் சீர்காழியில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனிடையே இறந்த கணிவண்ணனின் தலையின் நெத்தி பொட்டில் இருபுறமும் இருக்கும் காயத்தை பார்க்கும் போது கூர்மையான உளுக்கி போன்ற ஆயுதத்தால் குத்தப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறப்பின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக உடலை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த சீர்காழி அரசு மருத்துவ மனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கனிவண்ணன் உடல் எடுத்து செல்ல ப்பட்டது.

    குற்றவாளிக ளை பிடிக்க ஏ .டி .எஸ். பி சுகுமாரன் தலைமையில் 5 டிஎஸ்.பி. கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

    பதட்டமான சூழல் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட போலீசார் சீர்காழியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • தலைமறைவான கொள்ளையனை பிடிக்க 2 தனிப்படை
    • கைதான அரசு ஊழியர் சஸ்பெண்டு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே பெத்தேல் புரம் படுவாக்க ரை பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 71). இவர் செம்பன் விளை- திக்க ணங்கோடு சாலையில் நாட்டு மருத்துவ வைத்திய சாலை நடத்தி வருகிறார். கடந்த 24-ந் தேதி வைத்தியசாலைக்கு வந்த ஒருவர் வைத்தியர் ஜார்ஜின் கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து ஜார்ஜ் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.அப்போது வைத்தியரிடம் நகை பறித்த கொள்ளை யனின் உருவம் சிக்கியது. மேலும் அவர் வெளியே தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் தப்பி செல்வது போன்ற காட்சியும் பதிவாகி இருந்தது.

    அதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் கொடுப்பைகுழி பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகப்படும்படி யாக நின்ற 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது வைத்தியர் ஜார்ஜிடம் திருடியதை ஒப்புக்கொண்ட னர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்த னர்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய போதுபிடிப்பட்ட வர்கள் நட்டாலம் பொற்றைவிளை பகுதியை சேர்ந்த அபிஷேக்( 22 )சாந்தபுரத்தைச் சேர்ந்த சுபின் (19 )கொடுப்பை குழியை சேர்ந்த சிவசங்கு( 53 )அவரது மகன் ஜோதி (29) என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் சிவசங்குவின் மற்றொரு மகன் சிவா என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

    கைது செய்யப்பட்ட அபிஷேக் ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்துள்ளது .அவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் கருணை அடிப்ப டையில் அபிஷேகத்திற்கு வேலை கிடைத்துள்ளது. தற்பொழுது ஒரு வாரமாக அபிஷேக் விடுமுறையில் உள்ளார். இந்த நிலையில் அவரது நண்பருடன் சேர்ந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு சிக்கி கொண்டார். அபிஷேக் கைது செய் யப்பட்டதையடுத்து அவர் மீது துறை வாரியாக நடவ டிக்கை எடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்ட னர்.

    இதைதொடர்ந்து அபிஷேக்கை சஸ்பெண்ட் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சிவசங்கு ஜோதி மீது குமரி மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். கொள்ளை வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×