search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருமனையில் தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க 2 தனிப்படை
    X

    அருமனையில் தப்பி ஓடிய சாராய வியாபாரியை பிடிக்க 2 தனிப்படை

    • மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி :

    தமிழகத்தில் கள்ளச்சாரா யம் விற்பனை மற்றும் திருட்டு மது விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள்.

    குமரி மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மாவட் டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுவிலக்கு போலீசார் குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அருமனை சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் மடத்துவிளை வீடு பகுதியிலுள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அங்கு விஷ வாடையுடன் கூடிய சாராய ஊரல் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கிருந்த 10 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சாராயம் தயாரிக்க பயன்படுத்தப் படும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக பாகோடு பேரை மடத்து விளை வீடு பகுதியை சேர்ந்த ராஜ ஜெபசிங் என்ற ஜினு (வயது 40) என்பவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த ராஜ ஜெபசிங் தலைமறைவாகி விட்டார்.

    அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள். அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அவரை தேடி வருகிறார்கள். கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்ப டையில் தனிப்படை போலீ சார் அங்கு விரைந்துள்ளனர்.

    ஏற்கனவே ராஜஜெபசிங் மீது தக்கலை மதுவிலக்கு போலீஸ் நிலையம் உள்பட 3 இடங்களில் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×