search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ஐகோர்ட்"

    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    • பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
    • ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தானில் கடந்த மாதம் 22-ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், பிரதமா் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என கடுமையாக விமர்சித்தார்.

    ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல. ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தவோ பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
    • பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி உமர் அப்துல்லா. தேசிய மாநாட்டு கட்சி தலைவரான அவர் பிரிந்து சென்ற தனது மனைவி பாயல் அப்துல்லாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

    உமர் அப்துல்லாவின் இந்த மனுவை கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ந் தேதி விசாரணை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. திருமண முறிவை நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி கோர்ட்டு அவரது விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து உமர் அப்துல்லா டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். பிரிந்து சென்ற தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்குமாறு அவர் முறையிட்டார்.

    டெல்லி ஐகோர்ட்டு இன்று உமர் அப்துல்லாவின் விவாகரத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    மேல்முறையீட்டில் எந்த தகுதியும் இல்லை என்று கூறி நீதிபதிகள் சஞ்சீவ் சச்தேவா, விகாஸ் மகாஜன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மனுவை தள்ளுபடி செய் தது. கீழ் கோர்ட்டு வழங்கிய உத்தரவை டெல்லி ஐகோர்ட்டு உறுதி செய்தது.

    • ஆக்ராவின் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.
    • இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது.

    புதுடெல்லி:

    உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது தாஜ்மகால்.

    சுமார் 42 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் கட்டிடம் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம் காதலின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.

    முகலாய மன்னரான ஹாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக தாஜ்மகாலை கட்டியதாகத்தான் நாம் படித்து வந்தோம்; வருகிறோம்.

    ஆனால், இதைக் கேள்விக்குள்ளாக்கி மனுதாக்கல் செய்துள்ளார் இந்து சேனா அமைப்பைச் சேர்ந்த சுர்ஜித் யாதவ்.

    இதுதொடர்பாக, டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சுர்ஜித் யாதவ், முகலாய மன்னர் ஷாஜஹான் தாஜ்மகாலை கட்டவில்லை. ராஜா மான் சிங்கின் அரண்மனையையே ஷாஜஹான் சீரமைத்துள்ளார். எனவே வரலாற்றை மாற்றி எழுதவேண்டும் என கோரியுள்ளார்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    • அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    கடந்த ஆண்டு அ.தி.மு.க.வில் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்னர் பொதுக்குழு மூலமாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இது போன்ற மாற்றங்களுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செயலாளருக்கு ஆதரவாக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அ.தி.மு.க. கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை அங்கீகரிக்க முடிவு செய்தோம். அதே நேரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளில் எந்த மாதிரியான தீர்ப்பு வருகிறதோ? அதனையும் பின்பற்றுவோம்.

    சுப்ரீம் கோர்ட்டில் நடைபெறும் வழக்குகளின் போது தற்போதைய நிலையில் மாற்றம் ஏற்படும் வகையில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால் அதற்கேற்ப எங்களின் முடிவு இருக்கும்.

    இவ்வாறு டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. மாநாடு நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
    • இந்த வழக்கு விசாரணை மே 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி :

    2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர்.

    ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர் குப்தா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதற்கு ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க முடியும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது இந்த மனுவுக்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இது பொருளாதார கொள்கை சார்ந்த விஷயம் என கூறியது.

    இந்த வழக்கு விசாரணை கடந்த மே 30-ந்தேதி முடிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தீர்ப்பு இன்று (திங்கட்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார்.
    • கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    டெல்லியில் மதுபான கொள்கை செயல்படுத்தியதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில் ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கடந்த பிப்ரவரி 26-ந்தேதி கைது செய்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு ஜாமீன் வழங்க கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடந்தது.

    இதில் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி ஐகோர்ட்டு மறுத்துவிட்டது. நீதிபதி தினேஷ்குமார் வர்மா கூறும்போது, மணீஷ் சிசோடியா ஒரு செல்வாக்கு மிக்க மனிதர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டால் சாட்சிகள் பாதிக்கப்படும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

    கடந்த மார்ச் 31-ந்தேதி மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். தற்போது டெல்லி ஐகோர்ட்டிலும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    • சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் 2018-ம் ஆண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
    • குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி :

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை ஆகியவை தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்பு கூறியது.

    அந்த தீர்ப்புக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த மேல்முறையீட்டு மனுக்களை டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி தினேஷ்குமார் சர்மா விசாரித்து வருகிறார்.

    கடந்த ஏப்ரல் 13-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்பதால் நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் நீரஜ் ஜெயின் கோரினார்.

    அதை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, 2ஜி வழக்கு தொடர்புடைய மேல்முறையீட்டு மனுக்களுக்கு 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய அனைத்து தரப்பினருக்கும் உத்தரவிட்டு, விசாரணை மே 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

    நேற்று விசாரணை தொடங்கியதும் ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜய் அகர்வால் ஆஜராகி, சி.பி.ஐ. வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படாததால், அமலாக்கத்துறை வழக்கிலும் விடுதலை கிடைத்தது. வரையறுக்கப்பட்ட குற்றம் தொடர்புடைய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நபர் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என விஜய் மதன்லால் சவுத்திரி வழக்கிலும், அதைத் தொடர்ந்து இந்திராணி பட்நாயக் வழக்கிலும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. அதன்படி, சி.பி.ஐ. வழக்கில் விடுவிக்கப்பட்ட நபர்கள் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தானாகே விடுவிக்கப்பட வேண்டும், அமலாக்கத்துறையின் மனுவை முடித்துவைக்க வேண்டும் என வாதிட்டார்.

    அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. சார்பில் வக்கீல் நீரஜ் ஜெயின் ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசு அதிகாரிகளுக்கும், தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இருந்த கூட்டு, கட்-ஆப் தேதியை நிர்ணயித்தது, முதலில் வருபவருக்கு முதலில் சேவை என்ற கொள்கையை மீறியது, நுழைவுக் கட்டணத்தை மாற்றியமைக்காதது, விசாரணையின்போது கண்டறியப்பட்ட 200 கோடி ரூபாய் ஆகிய 5 முறைகேடுகளும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அடங்கியுள்ளன என்பதை விரிவாக சுட்டிக்காட்டினார். மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ரூ.22 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தவறான முடிவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்த சிறப்பு கோர்ட்டின் தீர்ப்பு சட்டப்படி ஏற்கமுடியாத ஒன்று என வாதிட்டார்.

    வாதங்களை பதிவு செய்துகொண்ட டெல்லி ஐகோர்ட்டு, விசாரணை இன்றும் தொடரும் என தெரிவித்தது.

    • கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
    • ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி மற்றும் பொதுக்குழு முடிவுகளை அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்டவிதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கர்நாடக தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் வகையில், கட்சியில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைக் அங்கீகரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகாவில் முன்பு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என அ.தி.மு.க. தரப்பில் வாதிடப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட தேர்தல் ஆணைய தரப்பு வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. எனவே இந்த கோரிக்கை தொடர்பாக முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி தரப்பு வக்கீல் ஏற்கனவே பலமுறை இதுபோன்ற பதிலையே தேர்தல் ஆணையம் கூறி வருகிறது. கடந்த ஜூலை 2022 முதல் இதனையே கூறுகின்றனர். ஆனால் முடிவெடுக்கவில்லை. மேலும் கர்நாடக தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். எனவே 10 நாட்கள் அவகாசம் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    அப்போது குறுக்கிட்ட ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வக்கீல் "சென்னை ஐகோர்ட்டில் இது தொடர்பான மூல வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கை தற்போதைக்கு விசாரிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

    தங்கள் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி புருசந்திரா குமார் கவுரவ், ஏற்கனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க 10 நாட்கள் அவகாசம் வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் கேட்டிருந்த நிலையில் அந்த அவகாசத்தை வழங்குவதாகவும் 10 நாட்களில் அ.தி.மு.க. சட்டவிதிகள் திருத்தத்தை அங்கீகரிக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்தில் அளித்துள்ள மனு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

    மேலும், அ.தி.மு.க.வின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை முடித்து வைப்பதாகவும் தெரிவித்தார்.

    • அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன.
    • ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டங்கள், வன்முறை சம்பவங்கள் நடந்தன.

    மேலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பல்வேறு ஐகோர்ட்டுகளிலும் வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. இந்த நிலையில் ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லி ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    • ஜூலை 17-ந்தேதி 'நீட்' தேர்வு நடைபெற உள்ளது.
    • நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை பெய்து வருகிறது.

    புதுடெல்லி :

    டெல்லி ஐகோர்ட்டில் அனுபவா ஸ்ரீவாஸ்தவா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பெய்துவரும் பருவமழை, மிகவும் தொலைவில் உள்ள 'நீட்' தேர்வு மையங்களை கருத்தில்கொண்டு, ஜூலை 17-ந் தேதி நடைபெற உள்ள 'நீட்' இளநிலை தேர்வை தள்ளிவைக்க வேண்டும்.

    இத்தேர்வில் பங்கேற்க மேலும் ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா தலைமையிலான அமர்வு முன் வக்கீல் மம்தா சர்மா முறையிட்டார்.

    அந்த முறையீட்டை பரிசீலித்த ஐகோர்ட்டு, இன்று இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

    டெல்லியில் மனைவியை சுட்டுக் கொன்று தந்தூரி அடுப்பில் போட்டு எரித்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சுஷில் குமார் சர்மாவை விடுதலை செய்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. #Tandoormurder #HCorders #SushilSharma
    புதுடெல்லி:

    டெல்லியை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுஷில் குமார் சர்மா. இவரது மனைவி நாய்னா சாஹ்னி. நாய்னாவுக்கும் வேறொரு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த சுஷில் குமார் கடந்த 1995-ம் ஆண்டு தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

    அவரது பிரேதத்தை மறைக்கும் முயற்சியில் உடலை துண்டங்களாக வெட்டி, ‘தண்டூரி’ எனப்படும் வறுவலுக்காக இறைச்சியை தீய்க்கும் ‘ஓவன்’-ல் அந்த துண்டங்களை போட்டு தீய்த்து அழிக்க முயன்றார். அதனால் இந்த கொலை வழக்கை ‘தண்டூரி’ கொலை வழக்கு என ஊடகங்கள் வர்ணித்தன.

    இந்த கொலை தொடர்பான தகவல் கசிந்ததும் சுஷில் குமார் சர்மா கைது செய்யப்பட்டார். ஆனால், சரியான ஆதாரங்கள் கிடைக்காததால் அவரை குற்றவாளி என்பதை நிரூபிப்பதற்காக டெல்லி போலீசார் மிகவும் திணறினர். நாய்னா சாஹ்னி உடலின் மிச்சசொச்சங்கள் இருமுறை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

    அப்போது மிகவும் அரிதாக இருந்த மரபணு பரிசோதனை மூலம்  கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் போலீஸ்தரப்பு இந்த வழக்கை நடத்தியது. இவ்வழக்கில் சுஷில் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இதைதொடர்ந்து, சுமார் இருபது ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது ஆயுள் தண்டனை காலம் ஏற்கனவே முடிவடைந்து விட்டதால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என சுஷில் குமார் சர்மா டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார்.

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், சங்கீதா திங்ரா சேஹ்கல் ஆகியோரை கொண்ட அமர்வு சுஷில் குமார் சர்மாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை காலம் முடிவடைந்து விட்டதால் அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டனர். #Tandoormurder #HCorders #SushilSharma
    ×