search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல: டெல்லி ஐகோர்ட்
    X

    பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனம் ஏற்கத்தக்கதல்ல: டெல்லி ஐகோர்ட்

    • பிரதமர் மோடி குறித்த பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
    • ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டது.

    புதுடெல்லி:

    ராஜஸ்தானில் கடந்த மாதம் 22-ம் தேதி காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், பிரதமா் மோடி ஒரு அதிர்ஷ்டமில்லாதவர். மக்களின் கவனத்தை பிரதமர் மோடி திசைதிருப்பும் வேலையில் ஈடுபடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை பிக்பாக்கெட் என கடுமையாக விமர்சித்தார்.

    ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

    இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் பேச்சு ஏற்கத்தக்கதல்ல. ராகுலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவோ, இதுபோன்ற பேச்சுகளை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தவோ பாராளுமன்றத்திற்கு உத்தரவிட முடியாது. ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×