search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WFI"

    • தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
    • இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார்.

    மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண்சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். இதையடுத்து வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். பின்னர் மல்யுத்த சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் ஆதரவாளர் சஞ்சய்சிங் தலைவராக வெற்றி பெற்றார். இதற்கும் வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் அடுத்த மாதம் கிரிகிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கு இந்திய அணி தேர்வுக்காக தகுதி போட்டிக்கு வருமாறு வீரர்-வீராங்கனைகளுக்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.

    இதை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நிராகரித்துள்ளார். மேலும் வருகிற 10-ந் தேதி டெல்லியில் நடைபெறும் தகுதி தேர்வு போட்டிக்கு தடை விதிக்க கோரி டெல்லி ஐகோர்ட்டில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளார்.

    • ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.
    • இந்திய அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    முதலாவது உலக ரேங்கிங் போட்டியான ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டி குரோஷியாவில் வரும் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கிறது.

    இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மல்யுத்த அணியை இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் நியமிக்கப்பட்ட பூபிந்தர் சிங் பஜ்வா தலைமையிலான இடைக்கால கமிட்டி அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்பட்ட முதல் அணி இதுவாகும். அணியில் 13 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர்.

    ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரருமான பஜ்ரங் பூனியா, சீனியர் உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இளம் வீராங்கனை அன்திம் பன்ஹால் ஆகியோர் இடம் பெறவில்லை.

    இந்நிலையில், மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், சஞ்சய் சிங்குடன் தான் எங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. புதிய கூட்டமைப்பு அமைப்பு அல்லது தற்காலிகக் குழுவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சஞ்சய் சிங்கிற்கு மல்யுத்த கூட்டமைப்பு ஆணையத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை கேட்டுக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் என் குடும்பத்தைக் குறிவைக்கிறார். எங்கள் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என தெரிவித்தார்.

    • புதிய தலைவர் தேர்வை கண்டித்து மல்யுத்தத்தில் இருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் கூறினார்.
    • மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனக்கு அளித்த பத்மஸ்ரீ விருதை திருப்பி அளித்தார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது இளம் வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் பதவி விலக கோரி மல்யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அவர் தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுங்கினார்.

    இதற்கிடையே இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பிரிஜ்பூஷனின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்றார். பெரும்பாலான பதவிகளை அவரது ஆதரவாளர்களே கைப்பற்றினர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீரர்-வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சாக்ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றவரான மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப பிரதமரிடமே அளிப்பதாக அறிவித்தார். அவர் பத்மஸ்ரீ விருதை பிரதமர் இல்லம் அருகே நடைபாதையில் வைத்து விட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு வீரர்-வீராங்கனைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இன்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்யுத்த சம்மேளன நிர்வாகிகள் 15 வயது மற்றும் 20 வயதுக்குட்பட்டோர் போட்டியை வீரர்-வீராங்கனைகள் தயாராவதற்கு போதுமான அறிவிப்பை கொடுக்காமல் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, மறு உத்தரவு வரை இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய அமைப்பு, மல்யுத்த சம்மேளனத்தின் அரசியலமைப்பை பின்பற்றவில்லை. நாங்கள் கூட்டமைப்பை நிறுத்தவில்லை. அடுத்த உத்தரவு வரும் வரை சஸ்பெண்டு செய்துள்ளோம். அவர்கள் சரியான செயல்முறை, விதிகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சாக்ஷி மாலிக் வீட்டிற்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் நேற்று நடைபெற்றது.
    • அதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வானார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில், குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்கமுடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இந்நிலையில், பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு எனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.
    • இதில் முன்னாள் தலைவரின் உறவினரான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானதும் செய்தியாளர்களைச் சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறுகையில்,

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை என்னால் ஏற்க முடியாது. எனவே நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

    • இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதையடுத்து தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் இன்று நடைபெற்றது.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது, மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறியதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தலைநகர் டெல்லியில் 2 மாதத்தும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரிஜ் பூஷன் தலைமையிலான மல்யுத்த கூட்டமைப்பை விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. அதன்பின் மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க பூபேந்தர் சிங் தலைமையில் அடாக் கமிட்டியை இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமித்தது.

    இதற்கிடையே, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறும். 21-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகளை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டார். 47 உறுப்பினர்களில் 40 பேர் அவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    • இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது.
    • தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    சுவிட்சர்லாந்து:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் உறுப்பினர் அங்கீகாரத்தை உலக மல்யுத்த சங்கம் ரத்து செய்தது. இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரத்து காரணமாக மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என உலக மல்யுத்த சங்கம் கடந்த மே மாதம் 30-ம் தேதி கடிதம் எழுதி இருந்தது. அதில், 45 நாட்களுக்குள் தேர்தல் நடத்தாவிடில் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்தியா சார்பில் விளையாடும் வீரர்கள் குறிப்பிட்ட நாட்டை உரிமை கொண்டாட முடியாது.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு கடந்த ஜூன் மாதம் தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், இந்திய மல்யுத்த வீரர்களின் தொடர் எதிர்ப்புகள் மற்றும் போராட்டம் காரணமாக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

    • ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள்.
    • பிரிஜ் பூஷன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதி வேட்பாளர் பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர், மூத்த துணைத் தலைவர், 4 துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர், பொருளாளர், 2 இணைச் செயலாளர்கள் மற்றும் 5 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

    இதில் தலைவர் பதவிக்கான போட்டியில், தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் விசுவாசியான சஞ்சய் குமார் சிங் (உத்தர பிரதேசம்) மற்றும் 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அனிதா ஷியோரன் ஆகியோர் உள்ளனர்.

    துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர் கர்தார் சிங் போட்டியிடுகிறார். இவர் ஆசிய போட்டிகளில் இரணடு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக பல ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார்.

    இவர் தவிர அசித் குமா சகா(மேற்கு வங்காளம்), ஜெய் பிரகாஷ் (டெல்லி), மோகன் யாதவ் (மத்திய பிரதேசம்), என்.போனி (மணிப்பூர்) ஆகியோரும் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

    இதேபோல் 2 இணை செயலாளர் பதவிகளுக்கு 4 பேரும், ஐந்து நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் போட்டியிடுகிறார்கள். பிரிஜ் பூசன் தரப்பினர் 15 பதவிகளுக்கும் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் 5 முக்கிய பதவிகளுக்கான போட்டியில் வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாக பிரிஜ் பூஷன் சிங் கூறினார்.
    • போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கைகளை மாற்றி வருகிறார்கள்.

    கோண்டா:

    இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக பாலியல் புகார் கூறியுள்ள மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

    இப்போராட்டத்தின் உச்சகட்டமாக மல்யுத்த வீராங்கனைகள் தங்களின் பதக்கங்களை கங்கை நதியில் வீச உள்ளதாக அறிவித்து ஹரித்வார் சென்றனர். ஆனால் கடைசி நேரத்தில் மனதை மாற்றிய அவர்கள், பதக்கங்களை கங்கையில் வீசாமல் திரும்பினர். தங்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு 5 நாட்கள் கெடு விதித்துள்ளனர்.

    இதற்கிடையே மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை பிரிஜ் பூஷன் சரண் சிங் தொடர்ந்து மறுத்துவருகிறார். அத்துடன், தனக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் கோண்டாவில் பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விசாரணையை முடிக்கட்டும். முடிவு எப்படி இருந்தாலும் அதன்படி நடப்பேன். எனவே, தேவையில்லாத கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

    ஜனவரி 18ம் தேதி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டபோது, சில கோரிக்கைகளை முன்வைத்தனர். பின்னர் சில நாட்களில் கோரிக்கைகளை மாற்றினர். அதன்பிறகும் கோரிக்கைகளை மாற்றுகிறார்கள். நான் என்ன தவறு செய்தேன்? எப்போது செய்தேன்? என்று மல்யுத்த வீராங்கனைகளிடம் கேட்டேன். ஆனால், அவர்களிடம் இருந்து இதுகுறித்து உறுதியான அறிக்கை எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விசாரணை நிறைவடைந்ததும் அரசு நடவடிக்கை எடுக்கும் என பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

    ×