search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவை சந்தித்த பிரியங்கா காந்தி
    X

    சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியாவை சந்தித்த பிரியங்கா காந்தி

    • பஜ்ரங் புனியாவுக்கு கடந்த 2019-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
    • தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் உறவினரான சஞ்சய் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங்குக்கு கடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய உறவினரான சஞ்சய் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை என்னால் ஏற்கமுடியாது. எனவே மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன் என சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

    இதேபோல், கடந்த 2019-ம் ஆண்டில் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளேன் என பிரதமர் மோடிக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள சாக்ஷி மாலிக் வீட்டிற்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அங்கிருந்த மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

    Next Story
    ×