search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்க்கை"

    • வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம்
    • நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் குருந்தன்கோடு கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட குருந்தன்கோடு ஊராட்சி, வெள்ளிச்சந்தை ஊராட்சி போன்ற பகுதி களில் தி.மு.க. செயல்வீரர் கூட்டம் ஒன்றிய செய லாளர் சுரேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. அவைத் தலைவர் நிஜாம், துணை செயலாளர் தாமஸ் கென்னடி, பொருளாளர் பெர்வின் விஜய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் பங்கேற்று ஆலோசனை வழங்கினார். வருகிற 26, 27-ந் தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பட்டியரில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் இளையோர் களை ஊக்குவித்து முகாமில் கலந்து கொண்டு பயனடைய செய்ய பாடுபட வேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டிக்காட்டும் வேட்பாளர் வெற்றிபெற உழைக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி முக வர்களை உடனே நியமிக்க வேண்டும், அரசின் சாதனைகளை விளக்கி தொடர் தெருமுனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

    • துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கள்ளிப்பாளையத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி சார்பாக இல்லம் தோறும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளரும், பொங்கலூர் சேர்மனுமான எஸ்.குமார் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செ.ராஜசேகரன்,பொங்கலூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகு பிரசாத், துணை அமைப்பாளர்கள் கோகுல்,சுரேஷ், சிவ சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.
    • கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் கோண த்தில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுனர் சேர்க்கை முகாம் வருகிற 14-ந் தேதி காலை 9 மணி முதல் நடை பெற உள்ளது.

    மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்று தற்போது வரை தொழிற்பழகுனர் பயிற்சி பெறாத பயிற்சியாளர்கள் பங்கேற்கலாம். மேலும் தொழிற்பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுனர் சட்டத்தின் கீழ் தொழிற்பழகுனர் பயிற்சி வழங்க விரும்பும் தொழில் நிறுவனங்களும் பங்கேற்கலாம்.

    இதில் பங்கேற்று தேர்வு பெறும் ஒரு வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.7,700 மற்றும் 2 வருட தொழில் பிரிவுகளில் தொழிற்பயிற்சி யினை நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு ரூ.8,050 தொழிற்பழகுனர் பயிற்சி காலத்தில் உதவி தொகையாக வழங்கப்படும்.

    தொழிற்பழகுனர் பயிற்சி யினை வெற்றிகரமாக நிறைவு செய்யும் தொழிற் பழகுனர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்ற தேசிய தொழிற்பழகுனர் சான்று வழங்கப்படும். இச்சான்று பெற்றவர்கள் பொதுத்துறை மற்றும் பெரிய தொழில் நிறுவன வேலைவாய்ப்புகளில், ஐ.டி.ஐ. முடித்து தேசிய தொழிற்சான்று பெற்றவரை விட முன்னுரிமை பெற்ற வராக கருதப்படுவர்.

    தொழிற்பழகுனர் சட்டத்தின் படி குறைந்த பட்சம் 30 பணியாளர் களுடன் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள், தொழிற் பழகுனர் இணைய தளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்து தொழிற்பழகுனர் திட்டத்தினை செயல்படுத்து வது கட்டாயம் என்ப தால், அரசின் சட்ட நடவடிக்கை களை தவிர்க்கும் வகை யில் குறைந்த பட்ச பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்பழகுனர் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.

    குறைந்தபட்சம் 4 முதல் 29 பணியாளர்களுடன் இயங்கும் தொழில் நிறு வனங்கள் தங்கள் முழு விருப்பத்தின் பேரில் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதன் மூலம் திறன் வாய்ந்த மனிதவளம் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெறுவதுடன், ஒரு தொழிற்பழகுனருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.1500 வீதம் அனைத்து தொழில் பழகுன ர்களுக்கான ஊக்கத்தொகை கணக்கிடப்பட்டு மத்திய அரசால் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மீள வழங்கப்படும்.

    கூடுதல் விவரங்களுக்கு கோணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் இயங்கும் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04652-264463, 9499055804 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
    • வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழ குநர் இடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்றது.

    எனவே, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மைச் சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகா மில் கலந்துகொண்டு பயன்பெ றாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். 

    • தமிழ்நாடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு (பி.இ, பி.டெக், பி.ஆர்க். பி.பிளான்) ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன.
    • இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    சேலம்:

    தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் சேலத்தில் உள்ள தமிழ்நாடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி உள்பட 431 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு (பி.இ, பி.டெக், பி.ஆர்க். பி.பிளான்) ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது.

    முதல் சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை கடிதம் கடந்த 15-ந்தேதி இணையதளவழியில் வழங்கப்பட்டது. இக்கடிதம் பெற்றவர்கள் 7 நாட்களில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்படும்.

    இன்று கடைசி நாள்

    அதன்படி முதல் சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கான கால அவகாசம் இன்றுடன் (22-ந்தேதி) நிறைவு பெறுகிறது.

    எனவே, மாணவர்கள் கல்லூரிகளிலோ அல்லது அரசு உதவி மையங்களிலோ கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும், செஸ் போட்டியை காணவும் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
    • காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்பட்டுவிடுமோ.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாட்டில் 54 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலும், 29 லட்சம் பேர் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் படிக்கின்றனர்.

    இரு வகை பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களே அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இதுவரை, பாட நூல், பாட குறிப்பேடுகள், சீருடை, சைக்கிள், மடிக்கணினி போன்ற அனைத்து சலுகைகளும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைத்து வந்தன.

    ஆனால், அண்மைக்காலமாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளில், அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தவிர்க்க ப்பட்டு வருகின்றனர்.

    மருத்துவம், பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

    ஐ.ஐ.டியில் படிக்க வாய்ப்பு கிடைக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுச் செலவை அரசே ஏற்கும் என்ற சலுகை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை.

    கல்லூரி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திலும் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காணவும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில், தற்போது தொடங்கப்பட்டுள்ள காலை உணவு திட்டத்திலும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர்க்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

    எனவே இது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுவை பெற்றுக் கொண்ட ஷாநவாஸ் எம்.எல்.ஏ, இது தொடர்பாக சட்டமன்றத்தில் அரசிடம் மீண்டும் வலியுறுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

    • ஆகஸ்டு 25 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் எஸ்.எம். ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 18.08.2022 முதல் 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    தகுதிவாய்ந்த மாணவி கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோ கிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட் டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல்நுட்பவிய லாளர் ஆகிய தொழிற்பிரி வில் சேர்ந்து பயிற்சி பெற லாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்

    மாணவிகள் தொழிற் கல்வி சேர்க்கைக்கு 18.08.2022 முதல் 25.08.2022 வரை நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை சாலையில், வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் திற்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண் ணப்பிக்கலாம்.

    பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலை யில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, பாட புத்தகங்கள். காலணி. மாதந்தோறும் வருகைக் கேற்ப ரூ.750 உதவித் தொகை மற்றும் கட்டண மில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைபடித்த மாணவிகளுக்கு கூடுத லாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மேலும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்து றையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற் கும் ஏற்பாடு செய்து தரப்ப டும். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், கூகுள் பே வாயிலாக செலுத்தலாம்.

    இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 'அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந் தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.

    பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில்சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை கள், செட் காலணிகள் அரசால் வழங்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு நாகர்கோவிலில், கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது.
    • பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி தன்னாட்சி - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தர மதிப்பீட்டு பட்டியலில் அகில இந்திய அளவில் 251 - 300 போர்டு இடம்பெற்று இரண்டாவது முறையாக சாதனை புரிந்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற சான்றிதழ் வெளியீட்டு விழாவில் இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழுமத்தின் தலைவர் ஜோதிமணி அம்மாள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் செந்தில்குமார் மற்றும் இணைச் செயலர் சங்கர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கல்வி குழுமத்தின் ஆலோசகர் பரமேஸ்வரன் மற்றும் கல்லூரி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினர். கல்வி குழுமத்தில் இணை செயலர் தரவரிசை பட்டியல் நகலை கல்லூரி முதல்வரிடம் வழங்கினார். கல்லூரியின் தேர்வு துறை நெறியாளர் சின்னதுரை தேசிய தர மதிப்பீடு பட்டியல் பற்றி விளக்க உரை வழங்கினார். கல்வி குழுமத்தின் செயலர் தேசிய தரவரிசை பட்டியலில் கல்லூரி இடம் பெற அயராது பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில் அனைத்து கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாணவர் சேர்க்கை குழு தலைவர் மணிகண்ட குமரன் மற்றும் ஊடகம் மக்கள் தொடர்பு இயக்குனர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • புதிய அரசு கலை கல்லூரியில் 5 பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது
    • முதல்-அமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார்

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து கானொலி வாயிலாக நேற்று தொடங்கி வைத்தார். இதனையொட்டி அரவக்குறிச்சி புதிய அரசு மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிகமாக செயல்படும் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் குத்துவிளக்கேற்றினார்.

    பின்னர் அவர் கூறியதாவது: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தலா 50 இடங்கள் ஒதுக்கப்பட்டு முதலாமாண்டு மாணவ, மாணவிகள் சேர்கை பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத் தலைவரும், தேர்வு நெறியாளருமான சா.சுதா கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுள்ளார் என்றார்.

    கரூர் எம்.பி. செ.ஜோதிமணி, கரூர் கோட்டாட்சியர் பா.ரூபினா, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், துணைத்தலைவர் பஷீர்அகமது, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வள்ளியாத்தாள், அரவக்குறிச்சி வட்டாட்சியர் ராஜசேகர், பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, துணைத்தலைவர் தங்கராஜ், வார்டு உறுப்பினர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அரசு இசைப்பள்ளியில் நடப்பாண்டில் 2 மாணவர்கள் மட்டுமே சேர்க்கை நடைபெறுகிறது.
    • கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகத்தில் கடந்த 2000ம் ஆண்டில் தி.மு.க, ஆட்சியின் போது ராமநாதபுரம் உள்பட 17 மாவட்டங்களில் தமிழ் வளா்ச்சிப் பண்பாட்டு மற்றும் இந்து சமய அறநிலை யத்துறை சாா்பில் அரசு இசைப் பள்ளி தொடங்கப் பட்டது. அந்த பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கான சான்றிதழ் படிப்பு அறிமு கப்படுத்தப்பட்டுள்ளது.

    அதில் 12 முதல் 25 வயது வரையில் உள்ள இருபாலரும் சோ்க்கப்பட்டு வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்ட அரசு இசைப் பள்ளி அரண்மனை பகுதியில் மாதம் ரூ.11 ஆயிரம் வாடகைக் கட்டி டத்தில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகியவை கற்பிக்கப் படுகிறது. ஆண்டுக் கட்டண மாக மாணவா்களிடம் ரூ.350 பெறப்படுகிறது. மாதந்தோறும் அரசு உதவி யாக ரூ.400 மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது.

    பள்ளியில் தலைமை ஆசிரியா் மற்றும் தவில், வயலின் தவிர அனைத்து பிரிவுகளுக்கும் என 5 ஆசிரியா்கள் உள்ளனா். ஒவ்வொரு பிரிவிலும் ஆண்டுக்கு 20 போ் என மொத்தம் 140 போ் வரை சோ்க்கலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2011 ம் ஆண்டில் மட்டும் இசைப் பள்ளியில் 112 போ் சோ்ந்துள்ளனா். அதற்குப் பிறகு மாணவ, மாணவியா் சோ்க்கை படிப்படியாகக் குறைந்தது.

    ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் கடந்த 2018-ம் ஆண்டில் 38 பேரும், 2019-ம் ஆண்டில் 12 பேரும், 2020-ம் ஆண்டில் 6 பேரும், கடந்த 2021 ம் ஆண்டில் 16 பேரும் சோ்ந்து உள்ளனா். நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் 2 போ் மட்டுமே சோ்ந்துள்ளனா். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மாணவ, மாணவியா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது 2 போ் என்ற அளவில் இருப்பது இசை ஆா்வலா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பார்வைதிறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.
    • 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப்பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு பயிற்றுவிக்கப்படுகிறது.

    தஞ்சாவூர்: 

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவதுதமிழ்நாடு அரசின் மாற்று திறனாளிக்கான நலத்துறையின் கீழ் இருபாலருக்குமான விடுதியுடன் கூடிய பார்வை திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி அளிக்கப்படுகிறது. இந்த சிறப்புப் பள்ளியில் சேரும் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ- மாணவிகளுக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனி இலவச விடுதி வசதி, சத்தான உணவு, 4 செட் விலையில்லா சீருடை, விலையில்லா பிரெய்லி பாடப்புத்தகங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

    மேலும் பார்வைதிறன் குறைபாடு உடைய மாற்று த்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, வாசிப்பாளர் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.இப்பள்ளியில் நடைப்பயிற்சி, விளையாட்டு போட்டிகள், பேச்சுப் போட்டிகள், நடனம், யோகா, சிலம்பம் போன்ற கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாத ந்தோறும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடப் பிரிவுகள் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்களை கொண்டு கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பிரெய்லி முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இலவசக் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பார்வை குறைபாடு உடைய மாணவ- மாணவிகளை தஞ்சாவூர் அரசு பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை பெற சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) தஞ்சாவூர் மேம்பாலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவ -மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×