search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில், 10-ந்தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்
    X

    சேலத்தில், 10-ந்தேதி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

    • சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.
    • வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் நடைபெறும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவனங்களில் காலியாக உள்ள தொழிற்பழ குநர் இடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, வருகிற 10.10.2022 அன்று காலை 09.00 மணியளவில் சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் தங்களுக்கு உரிய தொழிற்பழகுநர் இடங்களைத் தேர்வு செய்து உதவித்தொகையுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் ஒன்றிய அரசால் வழங்கப்படுகின்றது.

    எனவே, இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி முடித்த மாணவர்கள் அனைவரும் தங்களது அனைத்து உண்மைச் சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழகுநர் முகா மில் கலந்துகொண்டு பயன்பெ றாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×