search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்க்கை"

    • இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.
    • நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள 249 சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் 2,922 இடங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது.

    இதற்காக இணையதளம் வழியாக 4,963 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    தற்போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதியில் செயல்படும் 249 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் முதன்மைக்கல்வி அலுவலரால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

    தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையில் 24-ந் தேதி வெளியிடப்படும். இப்படி தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் 29-ந் தேதி சேர்க்க வேண்டும்.

    2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு வகுப்பான எல்.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பில் சேர்க்கை செய்வதற்கு இணையதளம் வழியாக விண்ணப்பித்த அனைத்து பெற்றோர்களும் நாளை காலையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும் குலுக்கலில் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

    பொள்ளாட்சி,

    பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளில் சேர ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொள்ளாட்சி அரசு கல்லூரி முதல்வர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பி.ஏ. (ஆங்கில இலக்கியம்), பி.எஸ்.சி.(கணிதம்), பி.காம், பிபிஏ, பி.காம் (சிஏ) உள்ளிட்ட இளநிலை பாடப்பிரிவுகள் கல்லூரியில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் 60 இடங்கள் உள்ளன. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

    மாற்றுதிறனாளிகள், விளையாட்டுப்பிரிவு, முன்னாள் ராணவத்தினரின் குழந்தைகள், தேசிய மாணவர் படை சி சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். அதற்கான ஆதாரச் சான்றிதழ்கள், நகல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப்பட்டியல் கல்லூரி இணையதள முகவரியில் வருகிற 25-ந் தேதி காலை வெளியிடப்படும். வருகிற 26-ந் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30-ந் தேதி முதல் ஜுன் 2-ந் தேதி வரை பிற பிரிவினருக்கான முதல்கட்ட கலந்தாய்வும் நடைபெறும்.

    சேர்க்கை தொடர்பான விவரங்களை www.gascpollachi.in என்ற கல்லூரி இணையதள முகவரியில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    • கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறை யின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

    இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
    • இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

    சேலம்:

    தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி நாளை (8-ந் தேதி) முதல் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைத்து அதன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். அதேசமயம் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்.

    இந்த விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த இயலாத மாணவர்கள், கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் "The Director, Directorate of Collegiate Education, Chennai-15" என்ற பெயரில், 8-ந் தேதி அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவேலையாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். மாணவர்களுக்கான சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் 19-ந் தேதி கடைசி நாளாகும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 18004250110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

    • இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
    • மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சிறப்பு விளையாட்டு விடுதி, தூத்துக்குடி மாவட்டம்கோவில்பட்டி, வேலூர் காட்பாடியில் மாணவ மாணவிர்ளுக்கு சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 01-01-2023 அன்று 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவ , மாணவிர்ள் தகுதியுடையவர்கள் ஆவர்.

    தனி நபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு , பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் போட்டிகளில் முதல்3 இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் , இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

    விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள், சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை 19.4.2023 முதல் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 2.5.2023 மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3.5.2023 காலை 7 மணியளவில் நடத்தப்பட இருப்பதால் தவறாது கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
    • மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    :தியாகதுருகத்தில் நகர அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர அவைத் தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் வேல் நம்பி வரவேற்றார். நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கி தியாக துருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் அதிகப்படியான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    குறிப்பாக இளை ஞர்கள், இளம்பெண்கள் மற்றும் புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து வார்டு செயலாளர்களிடம் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். இதில் நகர பொருளாளர் பாண்டு, மாவட்ட பிரதிநிதி வேலுமணி, ரமேஷ், இளைஞரணி செயலாளர் ஏழுமலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் நகர இணை செயலாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

    • தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது.
    • சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்..

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் நகர தி.மு.க. சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நகர தி.மு.க. செயலாளர் கோபி தலைமையில் நடைபெற்று வருகிறது. 11-வது வார்டு பகுதிகளில் நகர்மன்ற துணைத் தலைவர் உமா மகேஸ்வரி குணா தலைமையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நகர மன்ற தலைவர் முருகன் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர தி.மு.க. அவை தலைவர் குணா, முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர், தொ.மு.ச நிர்வாகி சரவணன், மண்ணெண்ணை கடை செல்வம், பட்டறை சரவணன், இளைஞர் அணி நிர்வாகி கார்த்தி மற்றும் டிரைவர் சிவா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியின் போது திமுகவில் இணைந்த அனைவருக்கும் நகர திமுகவைத் தலைவர் குணா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு புத்தகம், இலவச சேலை மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பரிசாக வழங்கினார்.

    • நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
    • நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொ ழிதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நாமக்கல் அரசு மருத்து வக்கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நடப்பு 2023-24-ம் கல்வி ஆண்டில், இந்த கல்லூரியில் மருத்து வம் சாராத பட்டப்ப டிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்பு கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது.

    இந்த கல்வியாண்டில், 3 ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்புகளான, கதிரியக்கம் மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம் (ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), சுவாச சிகிச்சை (ரெஸ்பி ரேசன் தெராபி), அறுவை அரங்கம் மற்றும் மயக்க மருந்து தொழில்நுட்பம் (ஆபரேசன் தியேட்டர் மற்றும் அனெஸ்தீசியா டெக்னாலஜி), மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி), சிக்கலான பராமரிப்பு தொழில் நுட்பம் (கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி) ஆகிய 5 இளநிலை பட்டப்படிப்பு களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    2 ஆண்டுகள் படிக்கும் டிப்ளமோ பிரிவில், டிப்ளமோ இன் ரேடியோ டயாக்னோசிஸ் டெக்னா லஜி, டிப்ளமோ இன் மெடிக்கல் லேபாரட்டரி டெக்னாலஜி ஆகிய படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    மேலும், 1 ஆண்டு படிக்கும், அவசர சிகிச்சை தொழில்நுட்பவியலாளர் (எமர்ஜென்சி கேர் டெக்னீசியன்), மயக்க மருந்து தொழில்நுட்ப வியலாளர் (அனெஸ்தீ சியா டெக்னீசியன்), ஆப ரேசன் தியேட்டர் தொழில்நுட்பவியலாளர் (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியசன்), எலும்பி யல் தொழில்நுட்பவிய லளர் (ஆர்த்தோபோடிக் டெக்னீசியன்), பல்நோக்கு மருத்துவ பணியாளர் (மல்டி பர்ப்பஸ் ஆஸ்பிட்டல் ஒர்க்கர்) ஆகிய 5 சான்றிதழ் படிப்புகளுக்கும் சேர்க்கை நடைபெற உள்ளது.

    இந்த பாடங்கள் சேர்க்கை சம்மந்தமான விபரங்களை https://tnmedicalselection.net என்ற வெப்சைட்டில் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க லாம் அல்லது நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சாராத 16 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை 

    • இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார்.
    • வழக்கறிஞர் இள‌.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

    கடலூர்:

    கடலூர் மேற்கு மாவட்டம், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம், விருத்தாசலம் ஒன்றியச் செயலாளர் வேல்முருகன் தலைமையில், விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை தேரடி வீதியில் நடந்தது இதற்கு, தி.மு.க. நகர துணைச் செயலாளர் வக்கீல் பாரி இப்ராஹிம் முன்னிலை வகித்தார். முன்னதாக, நகர செயலாளர் செல்வம் வரவேற்றார். கடலூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தி.மு.க. தேர்தல் பொறுப்பாளருமான வழக்கறிஞர் இள.புகழேந்தி இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாமினை தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி வெங்கடாஜலபதி, ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், பொருளாளர் சேட்டு, ஒன்றிய பிரதிநிதி கோ.மணி, சோழப்பிரகாஷ், டைலர் நடராஜன், டைலர் கணேசன், ஜெயசக்தி, கண்ணன், இளைஞரணி விக்ரம், ராஜேஷ் உள்ளிட்ட வார்டு கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் தொழிற்நிறுவனங்க ளில் காலியாக உள்ள தொழிற்பழகுனர் இடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு சேலம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதம மந்திரி தேசிய தொழிற்ப ழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

    முகாமில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாணவர்ள் தங்க ளுக்கு உரிய தொழிற்பழ குனர் இடங்களை தேர்வு செய்து உதவித்தொகை யுடன் தொழிற்பழகுநர் பயிற்சி பெற அழைக்கப்படுகிறார்கள். இப்பயிற்சியின் இறுதியில் தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் மத்திய அரசால் வழங்கப்படுகின்றது.

    ஏனவே இதுநாள் வரை தொழிற்பழகுனர் பயிற்சி முடிக்காத ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த மாண வர்கள் அனைவரும் தங்க ளது அனைத்து உண்மை சான்றுகள் மற்றும் சுய விவரத்துடன் (பயோ டேட்டாவுடன்) தொழிற்பழ குநர் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கலெக்டர் கார்மேகம் கேட்டுகொண்டுள்ளார்.

    • தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.
    • ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமானில் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார செயலாளர் இளங்கோவன் கூட்டத்தின் பொருள் குறித்து விளக்கி பேசினார்.

    மாவட்டத் தலைவர் மணி, மாவட்ட மகளிர் அணி சத்தியபாமா, வட்டார மகளிர் அணி செயலாளர் சத்தியசீலா, மாவட்டத் துணைத் தலைவர் தர்மபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் வட்டார பொருளாளர்கள் கணேசன், சங்கராஜ், மாவட்ட பிரதிநிதி தண்டபாணி, கண்ணன், மைய செயலாளர்கள் இரவிசங்கர், லூர்து சேவியர், செந்தில் குமார், கல்வி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் கீழநம்பிபுரம் இந்து அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கடுமையான முறையில் தாக்கப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்ல வேண்டும்.

    ஐபெட்டோ அண்ணாமலை கோரிக்கைப்படி தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

    ஏப்ரல் முதல் வாரத்தில் உறுப்பினர் சேர்க்கை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் இயற்றப்பட்டன.முடிவில் வட்டாரப் பொருளாளர் சுந்தரவடிவேலு நன்றி கூறினார்.

    இந்த தீர்மானங்களில் படி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

    • அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.
    • அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    திருப்பூர் :

    தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் சார்பில் கோயம்புத்தூர் மண்டல அளவிலான தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 24ந்தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5மணி வரையில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நீலகிரி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.

    இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (என்.எ.சி) வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் என்.ஏ.சி., பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

    தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி. எஸ்.சி.வி.டி திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் பி.டி.பி வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ள 8, 10,11 மற்றும் 12 -ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் எண்:115-2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி பழைய பேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரிக்கு சென்று நேரிலும் இயலாதவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரத்தை அறிந்து கொள்ளலாம் திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை அலுவலக தொலைபேசி எண்கள் 9499055695, 04212230500, 9944739810, 9894783226, 9499055700, 9499055696 . இத்தகவலை மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

    ×