என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அரசு ஐ.டி.ஐ.களில் மாணவர் சேர்க்கை
- ஆகஸ்டு 25 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
- கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் எஸ்.எம். ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 18.08.2022 முதல் 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
தகுதிவாய்ந்த மாணவி கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோ கிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட் டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல்நுட்பவிய லாளர் ஆகிய தொழிற்பிரி வில் சேர்ந்து பயிற்சி பெற லாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்
மாணவிகள் தொழிற் கல்வி சேர்க்கைக்கு 18.08.2022 முதல் 25.08.2022 வரை நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை சாலையில், வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் திற்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண் ணப்பிக்கலாம்.
பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலை யில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, பாட புத்தகங்கள். காலணி. மாதந்தோறும் வருகைக் கேற்ப ரூ.750 உதவித் தொகை மற்றும் கட்டண மில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.
அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைபடித்த மாணவிகளுக்கு கூடுத லாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மேலும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்து றையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும்.
பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற் கும் ஏற்பாடு செய்து தரப்ப டும். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், கூகுள் பே வாயிலாக செலுத்தலாம்.
இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 'அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந் தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.
பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில்சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை கள், செட் காலணிகள் அரசால் வழங்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு நாகர்கோவிலில், கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்