search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.டி.ஐ."

    • ஐ.டி.ஐ.யில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலு வலகம் தெரிவித்துள்ளது.

    சிவகங்கை

    காரைக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 3 கட்ட கலந்தாய்வு முடிந்து, தற்போது வருகிற 31-ந்தேதி வரை நேரடி சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள் ளது. இந்த நிலையத்தில் தற்போது டர்னர், மெஷி னிஸ்ட், மெக்கானிக் எலக்ட்ரிக் வெஹிக்கில் போன்ற 2 வருட தொழிற்பிரிவுகளுக்கும், கோபா, இன்டஸ்டிரியல் ரோபட்டிக்ஸ் அன்டு டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் போன்ற ஓராண்டு தொழிற்பிரிவு களுக்கும் ஒரு சில இடங்களே காலியாக உள்ளது.

    எனவே மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள 10 ஆம் வகுப்பு தேர்ச்சி/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவர்கள் உடனடியாக காரைக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரடியாக வந்து சேரலாம். இங்கு சேர்ந்து பயிற்சி பெறுகின்ற மாணவர் களுக்கு இலவச பேருந்து கட்டண சலுகை, விலை யில்லா மிதிவண்டி, விலை யில்லா சீருடைகள், விலை யில்லா காலணி, வரைபடக் கருவிகள், நோட்டுப் புத்தகங்கள், போன்றவை வழங்கப்படும். மேலும், ஆண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750/- உதவித் தொகையும், பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1750/- உதவித் தொகையும் வழங்கப்படும். பயிற்சி முடித்த மாண வர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் 100% வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி காரைக்குடி பகுதியில் உள்ள மாண வர்கள் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 9499055784, 9499055785 என்ற அலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
    • புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.

    இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ஆகஸ்டு 25 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு
    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் எஸ்.எம். ஆர்.வி. அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2022-ம் ஆண்டு சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண் ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 18.08.2022 முதல் 25.08.2022 வரை விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்ச கல்வி தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி (ஆடை தயாரித்தல் தொழிற்பிரிவு மட்டும்) மற்றும் 10-ம்வகுப்பு தேர்ச்சிபெற்றவர்கள் விண் ணப்பிக்கலாம். குறைந்த பட்ச வயது வரம்பு 15 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

    தகுதிவாய்ந்த மாணவி கள் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல் லாத தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்னணுவியல், டெஸ்க் டாப் பப்ளிசிங் ஆப்ரேட்டர், கம்யூட்டர் ஆப்ரேட்டர் மற்றும் புரோ கிராம் அசிஸ்டெண்ட், ஆடை தயாரித்தல் (எட் டாம் வகுப்பு தேர்ச்சி), சுருக்கெழுத்து (ஆங்கிலம்), நவீன ஆடை வடிவமைப்பு தொழிற்நுட்பம், மருத்துவ மின்னணுவியல்நுட்பவிய லாளர் ஆகிய தொழிற்பிரி வில் சேர்ந்து பயிற்சி பெற லாம். பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம்

    மாணவிகள் தொழிற் கல்வி சேர்க்கைக்கு 18.08.2022 முதல் 25.08.2022 வரை நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை சாலையில், வேப்பமூடு ஜங்சன் அருகில் உள்ள எஸ்.எம்.ஆர்.வி. அரசினர் தொழிற்பயிற்சி நிலையத் திற்கு (மகளிர்) நேரில் வந்து இலவசமாக விண் ணப்பிக்கலாம்.

    பயிற்சி பெறுபவர் களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் விலை யில்லா மடிக்கணினி, மிதி வண்டி, சீருடை, பாட புத்தகங்கள். காலணி. மாதந்தோறும் வருகைக் கேற்ப ரூ.750 உதவித் தொகை மற்றும் கட்டண மில்லா பேருந்து சலுகை வழங்கப்படும்.

    அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைபடித்த மாணவிகளுக்கு கூடுத லாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.மேலும் பிற்படுத்தப்பட் டோர் நலத்துறை மற்றும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்து றையின் கீழ் செயல்படும் விடுதிகளில் தங்கி பயிற்சி பெற வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் தொழிற்பிரிவில் படிக்கும் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் பயிற்சி உதவி தொகையுடன் வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற் கும் ஏற்பாடு செய்து தரப்ப டும். www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவ ரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகையான ரூ.50-ஐ விண்ணப்பதாரர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், கூகுள் பே வாயிலாக செலுத்தலாம்.

    இது தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், 'அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந் தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கு காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 25 வரை கால நீட்டிப்பு செய் யப்பட்டுள்ளது. விண்ணப் பங்கள் www.skilltraining. tn.gov.in என்ற இணையத ளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு வயது வரம்பு ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை ஆகும்.

    பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு கட்டண மின்றி பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்க ளில்சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.750, பேருந்து கட்ட ணச் சலுகை, மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்த கங்கள் மற்றும் வரைபடக் கருவிகள், 2 செட் சீருடை கள், செட் காலணிகள் அரசால் வழங்கப்படுகிறது.

    மேலும் விபரங்களுக்கு நாகர்கோவிலில், கோணம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரை நேரில் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×