search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரம்"

    • ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.

    துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
    • சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொது சுகாதாரத் துறையின் சேவைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், சமுதாயத்தின் பங்களிப்பு முக்கியமானதாகும். அனைத்து குடிமக்களின் சுகாதார உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றிய புரிந்துணர்வு மேம்பாட்டிற்காக மாநில மற்றும் மாவட்ட சுகாதார பேரவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்தந்த சமுதாயத்தில் உள்ள சுகாதார சிக்கல்கள் மற்றும் தேவைகளை கண்டறிதலும், சுகாதார பங்கீட்டாளர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்துதலும் இதன் முக்கியமான நோக்கம் ஆகும். ஒவ்வொரு மருத்து வர்களும், வட்டார மருத்துவர்களும் ஊராட்சி பணியாளர்கள், அங்கன் வாடி பணியாளர்கள் உள்ளிட்ட களப்பணி யாளர்களின் கருத்துக்களை பெற்று, முன்னுரிமை அடிப்ப டையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு மருத்துவமனை களில் இருக்கக்கூடிய வசதிகளை வைத்து, சிறப்பான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் தங்களது வட்டாரங்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் குறித்தும் அத்தியாவசிய மருத்துவ உட்கட்டமைப்பு வசதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருத்தியமைக்கப்பட்ட காசநோய் திட்டம், தேசிய தொழுநோய் திட்டம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பொது சுகாதாரத்துறை ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் சங்குமணி, இணை இயக்குநர் முருகவேல், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) யசோதாமணி(விருதுநகர்), கலுசிவலிங்கம்(சிவகாசி), துணை இயக்குநர் (குடும்ப நலப்பணிகள்) கவுசல்யாதேவி, துணை இயக்குநர் (காசநோய்) ராஜன், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சசிகலா, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் விவேகன்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க உள்ளது.
    • தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன.இங்குள்ள வீடுகள், கடைகளில் உள்ள குப்பைகள் நாள் தோறும் நகராட்சி தூய்மை–பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு நகராட்சிக்கு சொந்தமான ஈசானியத்தெரு குப்பை உரகிடங்கில் கொட்டப்பட்டு வருவது வழக்கம்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக பொது மக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மைபணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு வழங்காத குப்பைகள் வாங்க வேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தூய்மை பணியாளர்களுக்கு அறிவுறுத்தியதால் வீடுகளில் தரம் பிரிக்காத குப்பைகள் வாங்கப்படுவதில்லை.

    அதேபோல் நகரில் சாலைகள் கொட்டப்படும் குப்பைகளையும் தரம் பிரித்து மட்டுமே உரகிடங்கிற்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என உத்தர–விடப்பட்டுள்ளதால் குறைந்த அளவே உள்ள தூய்மை பணியாளர்கள் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்து கொண்டு செல்லமுடியவில்லையாம்.

    இதனால் நகரில் பிரதான கடைவீதி, பள்ளிகள், கோயில்கள், பஸ் நிறுத்தம் உட்பட பல்வேறு இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்க முடியாமல் கடந்த 6 நாட்களாக கொட்டப்பட்ட குப்பைகள் மலைபோல் தேங்கி அள்ளப்படாமல் கிடக்கிறது.

    இதனால் நகரில் கடும் சுகாதார சீர்கேடும், துர்நாற்றமும் ஏற்பட்டுள்–ளதால் மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சாலையோரம் கொட்டி தேங்கி கிடக்கும் குப்பைகளை கால்நடைகள கிளறி மேய்வதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறி கிடக்கிறது.

    தற்போது மழை பெய்து வருவதால் தேங்கியுள்ள குப்பைகள் நனைந்து ஈக்கள், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.கொசுவினால் ஏற்படும் நோயை தடுக்கவேண்டிய நகராட்சி நிர்வாகமே, குப்பைகளில் உள்ள பிளாஸ்டி டீ கப்புகள், உடைந்த பாட்டில்கள், தேங்காய்மட்டைகளில் மழைநீர் தேங்கி கிடப்பதை அள்ளி அப்புறப்படுதாமல் அலட்சியம் காட்டுவது நகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    குப்பைகள் தரம் பிரித்து அள்ளுவது ஒரு புறம் இருந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் உடனடியாக நகராட்சி நிர்வாகம் சாலையில் தேங்கியுள்ள குப்பைகள் உடனடியாக அகற்றிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியம் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடு கள் மற்றும் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு மருத்துவ கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்நோயா ளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்துகள் இருப்பு விபரம் மற்றும் இருப்பு மருத்துவ உபகரணங்கள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மேம்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருத்து வமனைக்கு வருகை புரி யும் நோயாளிகளின் சராசரியான எண்ணிக்கை, முதல்-அமைச்சரின் மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் பெற்று பயன்பெறுபவர்களின் எண்ணிக்கை குறித்து வட்டார மருத்துவ அலுவலரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார அலகு கட்டிட பணிகள் குறித்தும், அதன் நிலை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமான முறையில் விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வில் வட்டார மருத்துவ அலுவலர் நபீசாபானு மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாலை அணிந்த வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் கூட்டமும் தற்பொழுது அதிகரிக்க தொட ங்கியுள்ளது.
    • பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டாமல் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தளத்தில் ஒன்றாக தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தருமபுரி மாவட்ட பகுதி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பல நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து ராமர் தீர்த்தம் உள்ளிட்ட பல்வேறு தீர்த்தங்களில் குளித்து வழிபாடு செய்து செய்வது பலகாலமாக தொடர்ந்து வருகிறது.

    பிறப்பு முதல் இறப்பு வரை நடக்கும் அனைத்து சுப,துக்க சம்பவங்களின் போது இந்த கோவிலில் சென்று குளித்துவிட்டு சுவாமியை தரிசனம் செய்தால் நல்லது நடக்கும் என்ற ஐதீகம் இருந்து வருகிறது.இதனால் இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறையாமல் உள்ளது.இந்த நிலையில் தற்பொழுதுகார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் சபரிமலை செல்லும் பக்தர்கள் மாலை அணிவதற்கும் வருகின்றனர்.மேலும் மாலை அணிந்த வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்கள் கூட்டமும் தற்பொழுது அதிகரிக்க தொட ங்கியுள்ளது.

    இந்நிலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் கோயிலுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ள மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் தொங்கி மின்சாரத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வருகின்றது. நாள் முழுவதும் ஏராளமான பக்தர்கள் சென்று வரும் வழியில் இருக்கும் இந்த மின் ஒயர்களை மாற்ற கோயிலில் உள்ள நிர்வாக அதிகாரிகள் மற்றும் பணிபுரிந்து வருபவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அலட்சியமாக இருந்துவருகின்றனர்.

    அறநிலைத்துறையின் இந்த அலட்சியப்போக்குக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    தீர்த்தகிரீஸ்வரர் கோவிலில் கடந்த 26-ந்தேதி அன்று உண்டியல் காணிக்கை 8 லட்சத்தி 65 ஆயிரத்து 402 ரூபாய் , தங்கம் 126. கிராம், வெள்ளி 305-கிராம் என்று கூறப்படுகிறது. 3 மாதத்திற்கு ஒரு முறை உண்டியல் திறந்து எண்ணப்படுவதாக கூறப்படுகின்றது.

    ஆனால் குடிதண்ணீர், கழிப்பிட வசதி, சுகாதாரம், பாதுகாப்பு வசதிகள் எதுவும் இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவதிக்கும், சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறும் பொழுது கோவிலுக்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டாமல் வருமானத்தை மட்டுமே எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

    • ஊராட்சியின் தெரு விளக்குகளை முறையாக பயன்படுத்த வேண்டும்.
    • கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்

    நாகர்கோவில்:

    உள்ளாட்சி தினமான இன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த அரசு உத்தர விட்டது.

    அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. அகஸ்தீஸ்வரம் யூனியன் நல்லூர் ஊரா ட்சிக்குட்பட்ட இளைய நயினார் குளம் படிப்பகம் அருகில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்அரவிந்த் கலந்து கொண்டார்.

    அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அவர் பேசு கையில், ஒவ்வொருவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதி களில் முழு சுகாதாரத்தை கடைபிடித்திட வேண்டும். உங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கேட்டுப் பெற முன் வர வேண்டும் என்றார்.

    வடகிழக்கு பருவமழை கால முன்னெச்சரிக்கையாக தாழ்வான மற்றும் மழைநீர் தேங்க கூடிய பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கு மழைநீர் தேங்காமல் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம்மூலம் அவ்வப்போது தரப்படும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் .

    ஊராட்சியின் தெரு விளக்குகளை முறை யாக பயன்படுத்த வேண் டும். தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட உதவி கள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    கூட்டத்தில் அகஸ் தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய தலைவர்அழகேசன் மற்றும் துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் .

    • சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக,பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும்.
    • தயாரிப்பாளர்களுக்கு கலெக்டர் அரவிந்த் எச்சரிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை விற்பனை செய்யும் வணி கர்கள், அந்த பாக்ஸில் ஸ்வீட்ஸ் தயாரிப்பு தேதி மற்றும் உண்ணத் தகுந்த காலம் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிடவேண்டும்.

    உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். இனிப்பு களில் சட்டத்தில் அனுமதிக்க ப்பட்ட செயற்கை வண்ண ங்களை சேர்க்கவேண்டும். அதிகப்படியான வண்ண ங்களை சேர்த்தலை தவிர்க்க வேண்டும் .

    சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விபர ங்களை தகவல் பலகை யாக உணவு விற்பனை கூடத்தில் வைக்கவேண்டும். மேலும் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி உபயோகப் படுத்தக்கூடாது.

    சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக, பாதுகாக்கப்பட்ட தண்ணீராக இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரில் தான் பொரு ட்களை சுத்தம் செய்ய வேண்டும். உணவு கையாளு தல் மற்றும் பரிமாறுதல் ஆகிய பணிகளை செய்ப வர்கள் கையுறைகள், தலைகவசம் மற்றும் மேலங்கிகள் ஆகியவற்றை அணிய வேண்டும்.

    அனைத்து உணவு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 - ன் கீழ் உரிமம் ( அ ) பதிவுச்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பண்டிகை காலமான தற்போது ஏற்படுத்தப்பட்டு உள்ள தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்ட பங்கள், வீடுகள் ஆகிய இடங்களில் ஆர்டரின் பேரில் விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின் படி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்றுத்தான் விற்பனை செய்ய வேண்டும்.

    தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிப்பு மற்றும் கார வகை கள் சில்லறை விற்பனை செய்யும்பொழுது காட்சிப்படுத்தப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள் முன் தயாரிக்க ப்பட்ட தேதி மற்றும் சிறந்த பயன்பாட்டு தேதி கண்டிப்பாக எழுதி வைக்க வேண்டும்.

    மேலும் நுகர்வோர்கள் உணவுப் பொருட்கள் தரம் பற்றிய குறைபாடுகளுக்கு உணவு பாதுகாப்பு துறையின் 'வாட்ஸ்ஆப்' புகார் எண் 9444042322 என்ற எண்ணிலோ உணவு பாதுகாப்புதுறை மாவட்ட நியமன அலுவலக தொலை பேசி எண் 04652-276786 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 129 குழந்தைகளில் 121 பேருக்கு சாதாரண காய்ச்சல், 8 பேருக்கு டெங்கு காய்ச்சல்.
    • மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரியவர்களை விட குழந்தைகளை காய்ச்சல் அதிக அளவில் பாதிக்கிறது.

    சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பருவ மழை காலம் தொடங்கும் நிலையில் சாதாரண காய்ச்சல் மற்றும் ப்ளூ காய்ச்சல் பரவி வருகிறது. இது தொடர்பாக டாக்டர்கள் கூறியதாவது:-

    இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் வலி, தலை வலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டர்களிடம் உரிய ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    பருவநிலை மாற்றம் காரணமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. மருத்துவர்களின் பரிந்துரைபடி மட்டுமே சிகிச்சை எடுக்க வேண்டும். ப்ளூ வைரஸ் களால் பரவும் 'இன்ப்ளூயன்ஸா' காய்ச்சல் நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது.

    எனவே நோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் டாக்டரை உடனடியாக மக்கள் அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே சென்னையில் ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதாக தகவல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காய்ச்சல் பரவுவது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டோம். தமிழகம் முழுவதும் ப்ளூ காய்ச்சலால் 282 குழந்தைகள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளிலும், 215 குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளிலும், 54 குழந்தைகள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெறுகிறார்கள்.

    கடந்த ஆண்டு போலத் தான் குளிர்காற்று, ஈரப்பதம் காரணமாக இந்த காய்ச்சல் பரவி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் தொற்றால் முககவசம் அணிந்து அதிக இடை வெளியை கடைபிடித்தோம். இதனால் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு குறைவாக இருந்தது.

    ஆனால் கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளில் இப்போதைய பாதிப்பை விட ப்ளூ காய்ச்சல் பாதிப்பு 3 மடங்கு அதிகமாக இருந்தது. எனவே ப்ளூ காய்ச்சலுக்கு பொதுமக்கள் பதட்டப்படவோ, பயப்படவோ தேவை இல்லை. எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 129 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் ப்ளூ காய்ச்சல் யாருக்கும் இல்லை. 121 பேர் சாதாரண காய்ச்சலாலும், 8 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் பாதித்த குழந்தைகளை 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும்.

    காய்ச்சல் பாதித்தவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் ப்ளூ வைரஸ் காற்றின் மூலம் மற்றவர்களை பாதிக்கிறது. எனவே குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும்போது முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடை பிடிக்க சொல்ல வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் ஒரு குழந்தைக்கு ப்ளூ காய்ச்சல் ஏற்பட்டிருந்தால் மற்றொரு குழந்தைக்கும் பரவ வாய்ப்பு அதிகம். எனவே வீடுகளில் 2 மீட்டர் இடைவெளியை ஏற்படுத்தி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது.
    • பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவ ட்டம் வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், பெருமைக்கு உரியது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நடைபெற்றது

    தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது அதனை தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டது ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது

    தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்து றை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவி க்கப்பட்டது.

    விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிகாரி இருதயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், நாகை சுகாதாரப் பணிகள் உதவி இயக்குனர்விஜய குமார் ஆகியோர் வழிகாட்டு தலின்படி பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் குடிநீர், பொது சுகாதாரம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லா யிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஏர்வாடியில் சுகாதாரமின்றி செயல்படும் ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள்வே ண்டுதலுக்காக வருகின்றனர்.

    இங்கு சிறிய ஓட்டல்கள், ரோட்டோர கடைகள் அதிகளவில் செயல்படுகின்றன. அவற்றில் பிரியாணி, சாப்பாடு, இட்லி, தோசை, புரோட்டா ஆகியவை காலை, மாலை, இரவு நேரங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு செயல்படும் ஒரு சில ஒட்டல்கள் தவிர பல ஒட்டல்களில் உள்ளே நுழையவே அருவருப்பாகஉள்ளது. சில ஓட்டல்களில் சுத்தம் செய்யப்படாத மேஜை, கழுவப்படாத கிளாஸ், தூசுகளுடன் குடிநீர் தொட்டி, வாழை இலை இல்லாமல் பிளாஸ்டிக் பேப்பரில் உணவு வழங்கப்படுகிறது.

    ஏர்வாடி ஓட்டல்கள், சாலையோர கடைகளில் ஏற்கனவே பலகாரங்கள் தயாரிக்க பயன்படுத்திய எண்ணைகளைமீண்டும் மீண்டும் பயன்படுத்துகி ன்றனர். இதனால் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடும் பொதுமக்கள் உடல்நலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

    இது போன்ற உணவுகளி னால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்தாலும் வேறு வழியில்லாமல் வெளி மாவட்ட பக்தர்கள் இந்த ஓட்டல்களில் உணவு சாப்பிடுகின்றனர்.

    இங்குள்ள சுகாதாரமற்ற ஒட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.
    • அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×