search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hygiene"

    • வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.
    • அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்க கோரி பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக ளுக்கு முன்பு பழுதடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது. பள்ளிவாசலுக்கு சொந்த மான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக அரசு க்கு பதிவு செய்து வழங்கப்பட்டளது. ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்ட நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

    கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகம்மது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

    அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, முஸ்லிம் முறைகள் படி, துவா மற்றும் வேத மந்திரங்களுடன் நடைபெற்றது. தரைத்த ளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடு க்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.பல்லாயிரக்க ணக்கா னோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிவேதா முருகன் எம்.எல்.ஏ.விடம், கிராம மக்கள் மேலும் கோரிக்கை விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தவள்ளி ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவர் மணிகண்டன், தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கனி, உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×