என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்கால பராமரிப்பு"

    • துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
    • துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.

    மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.

    துணிகளை விரைவாக உலர்த்த

    மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.


    பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்

    உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்

    வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.

    பூஞ்சை வாடைக்குத் 'தடா'

    மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும். 

    • தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன.
    • குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.

    பல்வேறு பகுதியில் கொளுத்தும் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் வகையில், மழை பெய்து வருகிறது. என்னதான் மழை வெப்பத்தில் இருந்து நமக்கு கொஞ்சம் ஆறுதல் தந்தாலும், மழைக்காலத்தில் வைரஸ் மற்றும் நோய் தொற்றுக்களின் ஆபத்து பன்மடங்கு அதிகரிக்கும்.

    எனவே, வெயில் காலத்தை விட மழைக்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எனவே, மழைக்காலத்தில் ஏற்படும் வைரஸ் நோய்கள் அவர்களை எளிதில் பாதிக்கலாம். இந்த பருவத்தில் சிறிய குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    அதேசமயம், மழைக்காலத்தில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகின்றன. இந்த கொசுக்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதும் முக்கியம். அதேபோல, புதிதாகப் பிறந்த குழந்தை சளி, இருமல் மற்றும் நிமோனியா போன்ற பொதுவான வைரஸ் தொற்றுகளால் பாதிக்கலாம்.

    எனவே, மழைக்காலங்களில் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். மழைக்காலத்தில் பிறந்த குழந்தையை எப்படி பராமரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்.

    எப்படி பராமரிப்பது?

    * உங்கள் குழந்தை 6 மாதங்களுக்கும் குறைவாக இருந்தால், குழந்தைக்கு முடிந்தவரை முழு உணவாக தாய்ப்பால் கொடுக்க முயற்சிக்கவும். தாயின் பாலில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.

    * குழந்தைகளுக்கு உணவு கொடுக்க ஆரம்பித்து விட்டால், ஆரோக்கியமான காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    * மழைக்காலங்களில் தூய்மையில் கவனம் செலுத்தாததால் பல நோய் தொற்றுக்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெளியில் இருந்து வந்த பிறகு உங்கள் கைகளை கழுவ முயற்சிக்கவும். அதற்கு பின்னர் உங்கள் குழந்தைகளைத் தொடவும்.

    * கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகள் கொசுக்களிடமிருந்து பாதுகாக்க முழு கை ஆடைகளையும் அணிய வேண்டும்.

    * பருவமழை காலத்தில் அனைத்து இடங்களிலும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம். கூட்ட நெரிசலான இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதால் வைரஸ் தொற்று ஏற்படலாம்.

    * அதேசமயம், புல் அதிகம் வளரும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம், ஏனெனில் இதுபோன்ற இடங்களில் கொசுக்கடி பயம் இருக்கும்.

    * மழைக்காலத்தில் குழந்தைகள் எளிதில் நோய்வாய்ப்படுவார்கள். எனவே, குழந்தையை எப்போதும் உலர்வாக வைக்க முயற்சி செய்யுங்கள். வலுவான சூரிய ஒளியில் குழந்தைகளின் ஆடைகளை உலர்த்தவும்.

    * சூரிய ஒளி குறைவாக இருந்தால், குழந்தையை ஆடை அணிவதற்கு முன் லேசாக அயர்ன் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆடைகளில் உள்ள ஈரப்பதம் நீங்கும். குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவும். ஒரே டயப்பரை நீண்ட நேரம் அணிவதால் குழந்தைக்கு தொற்று மற்றும் சளி கூட ஏற்படலாம்.

    ×