என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "laundry"

    • துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வையுங்கள்!
    • துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் பல பிரச்சனைகளை தீர்க்கலாம்.

    மழைக்காலம் வந்தாலே, பெண்களுக்கு சலவைப் பணிகள் ஒரு பெரும் சவாலாக மாறிவிடுகின்றன. வெயிலும், காற்றின் வேகமும் குறையும் போது, துணிகளை உலர்த்துவது மிகவும் கடினமாகிறது. ஈரப்பதம் வெளியேறாமல், துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிப்பது பலரது வீட்டிலும் நடக்கும் பொதுவான பிரச்சனை. துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகாமல், துணிகளை விரைவாகவும், சுகாதாரமாகவும் உலர்த்துவது எப்படி? அதிகபட்ச நீரை வெளியேற்றுவது முதல், சரியான காற்றோட்டத்தை உருவாக்குவது மற்றும் பூஞ்சை வாடையை அகற்றும் சமையலறை ரகசியம் வரை, மழைக்காலத்தில் சலவை செய்யும் உத்திகள் குறித்து இப்போது விரிவாகக் காணலாம்.

    துணிகளை விரைவாக உலர்த்த

    மழைக்காலத்தில், வெயில் மற்றும் காற்றின் ஈரப்பதம் இல்லாத காரணத்தால் துணிகளை உலர்த்துவது பெரும் சவாலாக உள்ளது. இதனால் துணிகள் சீக்கிரம் காயாமல் பூஞ்சை வாடை வீச ஆரம்பிக்கிறது. இதற்குத் தீர்வாக, முதலில் துணிகளில் உள்ள அதிகபட்ச நீரை வெளியேற்ற வேண்டும்; வாஷிங் மெஷினில் துவைப்பவர்கள் துணிகளை அதிக வேகத்தில் இரண்டு முறை 'சுழற்றுதல் (Spin Cycle)' செய்ய வேண்டும், கைகளால் துவைப்பவர்கள் துணிகளை ஒரு சுத்தமான, உலர்ந்த டவலில் வைத்து இறுக்கமாகச் சுருட்டி அழுத்தி நீரை உறிஞ்சச் செய்யலாம். மேலும், துணிகளை உலர்த்தப் போடும் முன் ஒவ்வொன்றையும் நன்கு உதறி, அதன் இழைகளைப் பிரித்து, துணியின் மேற்பரப்பை அதிகப்படுத்துவதன் மூலம் ஆவியாதல் சீக்கிரமாக நடைபெறும்; குறிப்பாக ஜீன்ஸ் போன்ற கனமான துணிகளை மடிப்பு இல்லாமல் பரப்பிப் போடுவது மிகவும் அவசியமாகும்.


    பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை தவிர்க்க கடைசி அலசலின்போது சிறிதளவு வினிகர் சேர்த்துக் கொள்ளலாம்

    உட்புறத்தில் காற்றோட்டமே முக்கியம்

    வீட்டிற்குள் துணிகளை உலர்த்துவதற்குச் சரியான காற்றோட்டமே மிக முக்கியமாகும். துணிகளை உலர்த்த ஒரு மடிப்பு ஸ்டாண்டைப் பயன்படுத்தி, அதை சீலிங் ஃபேன் அல்லது டேபிள் ஃபேன் இயங்கும் அறையில் வைக்க வேண்டும். ஃபேன் காற்று நேரடியாகத் துணிகள் மீது படுமாறு வைத்தால், ஈரப்பதம் வேகமாக ஆவியாகும். முக்கியமாக, துணிகளை நெருக்காமல், ஒவ்வொரு துணிக்கும் இடையில் குறைந்தபட்சம் 3 அங்குலமாவது இடைவெளி விட வேண்டும். துணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டால், ஈரப்பதம் தங்கிக் கொண்டே இருக்கும், இதனால் துர்நாற்றம் மற்றும் பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், துணிகள் உலரப் போட்டிருக்கும் அறையில், ஒரு கிண்ணத்தில் உப்புக்கற்கள் அல்லது பேக்கிங் சோடாவைத் திறந்து வைத்தால், அவை காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தை ஈர்த்து, உலர்த்தும் செயல்முறையைத் துரிதப்படுத்த உதவும்.

    பூஞ்சை வாடைக்குத் 'தடா'

    மழைக்காலத்தில் சலவை செய்யப்பட்ட துணிகளில் ஏற்படும் பூஞ்சை வாசனை மற்றும் துர்நாற்றத்தைத் தவிர்க்க ஒரு எளிய, செலவு குறைந்த சமையலறை ரகசியம் உள்ளது. துணிகளை அலசும் கடைசித் தண்ணீரில் ஒரு மூடி வெள்ளை வினிகரைச் சேர்ப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையையும் கையாளலாம். வினிகர் பூஞ்சை மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் சக்தி வாய்ந்தது; மேலும், அதன் வாசனை துணி காய்ந்தவுடன் முற்றிலும் ஆவியாகிவிடும். துர்நாற்றம் நீங்கவில்லை எனில், மீண்டும் அலசும் தண்ணீரில் வினிகர் சேர்த்து ஒரு முறை அலசி, பின்னர் உலர வைக்கலாம். இந்த எளிய மற்றும் பயனுள்ள உட்புற நிர்வாக உத்தியின் மூலம், விலை உயர்ந்த இயந்திரங்களைப் பற்றிய கவலை இல்லாமல், எந்தவொரு குடும்பத் தலைவியும் மழைக்காலச் சலவைப் பணிகளை மிகச் சிறப்பாகவும், துர்நாற்றமின்றியும் நிர்வகிக்க முடியும். 

    • புதுக்கோட்டையில் நவீன சலவையகம்-ஆயத்த ஆடையகம் திறக்கப்பட்டது
    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்

    புதுக்கோட்டை,


    புதுக்கோட்டை நகராட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நவீன முறை சலவையகம் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு உற்பத்தி அலகினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சலவைத் தொழில் புரிவோருக்கு, இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்களில் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் சலவை இயந்திரம், மின் உலர் இயந்திரம், தேய்க்கும் மேசை மற்றும் மின்சார அயன்பாக்ஸ் ஆகியவற்றை கொண்ட நவீன முறை சலவையகம் புதுக்கோட்டை நகரம், சின்னப்பா நகர் அருகில், ஸ்ரீநகரில் மகளிர் சுய உதவிக்குழுவால் தொடங்கப்பட்டு உள்ளது.

    மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் தையல் இயந்திரம், வெட்டும் இயந்திரம், மேசை மற்றும் ஓவர்லாக் இயந்திரம் ஆகியன வாங்கப்பட்டு, புதுக்கோட்டை நகரம், நிஜாம் காலனியில் சுய உதவிக்குழுவினரால் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    • 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்படும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.

    இதைத்தொடர்ந்து 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், ஒன்றிய, பேரூர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிரணி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.

    • வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி சார்பில், சலவைத்தொழிலாளர்கள் வசதிக்காக கோமதி நகரில் 2003ம் ஆண்டில் சலவைத்துறை கட்டப்பட்டது.இங்கு வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும், சலவைத்தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை, கழிப்பிடம், குடிநீர், துணிகளை உலர வைத்தல் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், இங்கு வந்து துணிகளை துவைத்து, உலர வைத்து எடுத்துச்சென்றனர்.

    தொடர்ந்து சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது. கட்டடங்களும் உடைந்து வீணாகி வருகிறது. 20 ஆண்டு பழமையான சலவைத்துறை பயனற்று உள்ளதால் அத்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை பகுதியிலுள்ள, சலவைத்தொழிலாளர்கள் எடுக்கும் துணிகளை பல கி.மீ., தூரம் உள்ள, பி.ஏ.பி., கால்வாய், அமராவதி கால்வாய்களில் தண்ணீர் வரும் போதும்,அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று, துவைத்து எடுத்து வரும் அவல நிலை உள்ளது.எனவே சலவைத்துறையை புதுப்பிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×