என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "laundry"
- சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
- 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று குறைகளை கேட்டறிந்தார்.
சோழவந்தான்
சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட சலவை தொழிலாளர்களின் சலவை கூடத்தை வெங்கடேசன் எம்.எல்.ஏ.பார்வையிட்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சலவை கூடத்திற்கு உடனடியாக கூடுதல் கட்டிடம் கட்டித்தரப்படும், தண்ணீர் வசதிக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என எம்.எல்.ஏ. உறுதி கூறினார்.
இதைத்தொடர்ந்து 15, 16-வது வார்டுகளில் மக்களிடம் நேரடியாக சென்று எம்.எல்.ஏ. குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேரூராட்சி நிர்வாகத்திற்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் ஜெயராமன், நகரச் செயலாளர் வக்கீல் சத்யபிரகாஷ், பேரூர் துணைச்செயலாளர் ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், ஒன்றிய, பேரூர் மற்றும் அனைத்து நிர்வாகிகளும், மகளிரணி அமைப்பாளர்கள் உடனிருந்தனர்.
- புதுக்கோட்டையில் நவீன சலவையகம்-ஆயத்த ஆடையகம் திறக்கப்பட்டது
- அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சியில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், நவீன முறை சலவையகம் மற்றும் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு திறப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு உற்பத்தி அலகினை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சலவைத் தொழில் புரிவோருக்கு, இலவச சலவைப் பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இம்மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மக்களில் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அந்த குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் சலவை இயந்திரம், மின் உலர் இயந்திரம், தேய்க்கும் மேசை மற்றும் மின்சார அயன்பாக்ஸ் ஆகியவற்றை கொண்ட நவீன முறை சலவையகம் புதுக்கோட்டை நகரம், சின்னப்பா நகர் அருகில், ஸ்ரீநகரில் மகளிர் சுய உதவிக்குழுவால் தொடங்கப்பட்டு உள்ளது.
மேலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 10 நபர்களை இணைத்து ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. குழுவிற்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மின் தையல் இயந்திரம், வெட்டும் இயந்திரம், மேசை மற்றும் ஓவர்லாக் இயந்திரம் ஆகியன வாங்கப்பட்டு, புதுக்கோட்டை நகரம், நிஜாம் காலனியில் சுய உதவிக்குழுவினரால் தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜி.அமீர் பாஷா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
- சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது.
உடுமலை :
உடுமலை நகராட்சி சார்பில், சலவைத்தொழிலாளர்கள் வசதிக்காக கோமதி நகரில் 2003ம் ஆண்டில் சலவைத்துறை கட்டப்பட்டது.இங்கு வரிசையாக தண்ணீர் தொட்டிகள் மற்றும் துணிகள் துவைப்பதற்கான கல் மேடை, தண்ணீர் வசதி, துணிகளை உலர வைக்கும் வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.மேலும், சலவைத்தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை, கழிப்பிடம், குடிநீர், துணிகளை உலர வைத்தல் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது.உடுமலை நகராட்சி மற்றும் சுற்றுப்புற ஊராட்சிகளில் வசிக்கும் சலவைத்தொழிலாளர்கள், இங்கு வந்து துணிகளை துவைத்து, உலர வைத்து எடுத்துச்சென்றனர்.
தொடர்ந்து சலவைத்துறை பராமரிக்கப்படாததோடு, தண்ணீர் மோட்டார் உள்ளிட்டவை பழுதடைந்தது. கட்டடங்களும் உடைந்து வீணாகி வருகிறது. 20 ஆண்டு பழமையான சலவைத்துறை பயனற்று உள்ளதால் அத்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.உடுமலை பகுதியிலுள்ள, சலவைத்தொழிலாளர்கள் எடுக்கும் துணிகளை பல கி.மீ., தூரம் உள்ள, பி.ஏ.பி., கால்வாய், அமராவதி கால்வாய்களில் தண்ணீர் வரும் போதும்,அமராவதி ஆற்றுக்கு கொண்டு சென்று, துவைத்து எடுத்து வரும் அவல நிலை உள்ளது.எனவே சலவைத்துறையை புதுப்பிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்