search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டமைப்பு"

    • மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும்.
    • மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் ரெயில் பயணிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. அரசு தொடர்பு பிரிவு தலைவர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் ராஜகோபால் முன்னிலை வகித்தார்.

    நேசக்கரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், தேசிய மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேதுராமன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இதில் மன்னார்குடி ரெயில்வே நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்வது, மேலும் அங்குள்ள பொது கழிப்பிடத்தை சுத்தமாக பயன்படுத்துவது, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள அரசு மதுபான கடையை அப்புறப்படுத்த வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து டெல்லிக்கு வாரந்தோறும் சிறப்பு ரயிலும், மன்னார்குடியில் இருந்து மானாமதுரை வரை செல்லும் டெமு ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிப்பது, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் அதன் உரிய வழித்தடத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மன்னார்குடியில் இருந்து காலையில் மயிலாடுதுறைக்கு செல்லும் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும்.

    மன்னை ரெயில் நிலைய சாலையை திருவாரூர் செல்லும் சாலையுடன் இணைக்க வேண்டும். மன்னை- பட்டுக்கோட்டை ரெயில் வழித்தட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதையடுத்து மன்னார்குடி ரயில்வே நிலையத்துக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து சேவை சங்க பிரதிநிதிகளுடன் சென்று ரயில்வே நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.பாலுவை சந்தித்து மனு அளிப்பது, திருச்சி கோட்ட ரயில்வே பொது மேலாளரை சந்தித்து மனு அளிப்பது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது.

    ஆலோசனைக் கூட்டத்தில் மன்னார்குடி சேவை சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பின் தலைவர் பத்மநாபன், எஸ்.பி.ஏ.மெட்ரிக் பள்ளி தாளாளர் ரமேஷ், மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் டி.ரெங்கையன், நேசசக்கரம் அமைப்பின் நிர்வாகி சேதுராமன்ஆகியோர் பங்கேற்றனர்.

    ஒருங்கிணைப்பாளர் பாரதி நன்றி கூறினார்.

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தகவல்
    • தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை

    கன்னியாகுமரி:

    தமிழக காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது :-

    தேங்காப்பட்ட ணம் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைப்பு செய்ய சட்டமன்றத்தி லும், தொடர்ந்து தமிழக முதல்வரை நேரில் சந்தித்தும், மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தியதன் அடிப்படையில் துறைமுக கட்டமைப்பை சீரமைக்க மூன்று கட்டங்களாக ரூ.253 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஏற்கனவே அரசாணை வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் மேற்கு பக்கமுள்ள பிரதான அலைத்தடுப்பு சுவரை 200 மீட்டர் நீட்டிப்பு செய்யவும், சேதமடைந்துள்ள முகப்பு பகுதியை சீரமைக்கவும் மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.77 கோடி நிதி ஒதுக்கி அனுமதி அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    2021-ம் ஆண்டு பிப்ரவரியில் – தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.60 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

    2021 அக்டோபரில் நடைபெற்ற 11 –வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில், மத்திய நீர் ஆற்றல் ஆராய்ச்சி நிலையத்தால் அளிக்கப்பட்ட தொழில்நுட்ப அறிக்கை யின்படி துறைமுக வடிவமைப்பு மற்றும் அலை அமைதிக்கான கணிதவியல் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் பிரதான அலை தடுப்பு சுவரை 633 மீட்டர் நீட்டிப்பு செய்ய வேண்டும் என பரிந்து ரைக்கப்பட்டது.அதன் மதிப்பீடு ரூ.193 கோடி என தெரி விக்கப்பட்டது.

    அதன்பிறகு நடைபெற்ற 13-வது மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க 60 கோடி மற்றும் 193 கோடி என மொத்தம் 253 கோடிக்கு ஒப்புதல் அளித்தது.

    இந்த நிலையில் மீன்பிடி துறைமுக கட்டமைப்பை மறு சீரமைக்க தற்போது தமிழக அரசால் கடந்த 13-ந் தேதி ரூ.116 கோடிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், போர்க்கால அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு பணி ஆணை வழங்கி தொய்வின்றி பணிகள் நடைபெற ஆவண செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    அரசாணை பிறப் பித்ததற்காக தமிழக முதல்வர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ஆகியோருக்கும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • ஆனைமலை செல்லும் ரோடு நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
    • ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

    உடுமலை :

    கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உடுமலை முக்கோணம் பகுதியில் பிரிந்து ஆனைமலை செல்லும் ரோடு மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த வழித்தடத்தில் பாப்பனூத்து, சாளையூர், கொடிங்கியம், எரிசனம்பட்டி உட்பட பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளன. தென் மாவட்டங்களிலிருந்து ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு இந்த ரோட்டை பயன்படுத்துகின்றனர்.

    போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில் அபாய வளைவு பகுதிகள் அதிக அளவு உள்ளன. முக்கோணத்திலிருந்து வாளவாடி செல்லும் ரோடு பிரியும் பகுதி, ெரயில்வே கேட் அருகில் சாளையூரிலிருந்து உடுக்கம்பாளையம் ரோடு பிரியும் பகுதி, அதே கிராமத்தில் மழை நீர் ஓடை குறுக்கிடும் பகுதி என ஆறுக்கும் மேற்பட்ட இடங்களில் அபாய வளைவுகள் உள்ளன. ரோடு குறுகலாக இருப்பதால் இந்த வளைவுகளில் விபத்துகள் தொடர்கதையாக உள்ளது.

    கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்லும் போது பிற வாகனங்கள் விலகிச்செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.இவ்வழித்தடத்தில் ஆனைமலை, வேட்டைகாரன்புதூர், உடுக்கம்பாளையம், வல்லக்குண்டாபுரம், தேவனூர்புதூர் உட்பட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    பஸ் மற்றும் கனரக போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், அபாய வளைவு பகுதியை மேம்படுத்த, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாளையூர் உட்பட பகுதிகளில் வேகத்தடை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது.அங்கும் போதிய குறியீடுகள் இல்லாததால் இரவு நேரங்களில் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.இந்த ரோட்டை விரிவுபடுத்தி அபாய வளைவு பகுதிகளில் சென்டர் மீடியன் அமைத்தல், வேகத்தை குறைத்து செல்வதற்கான குறியீடு உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது.
    • அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை மூலம் செயல்படும் ஹெல்த் அசெம்ப்ளி திட்டத்தின் கீழ் திருத்துறைப்பூண்டி வட்டார அளவிலான திட்ட செயல்படுத்தும் குழுவின் செயற்குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி திட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும், அரசு திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்லவும் அங்கன்வாடிகள், பள்ளிகளில் இத்திட்டம் குறித்து உரிய விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதற்கு தொண்டு நிறுவனங்கள் உதவிட வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர், பாரத மாதா நிறுவனர் மணிமாறன், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    ×