search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி"

    • வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கடபராஜி பள்ளியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 21). கூலி தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையானார்.

    அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி. தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று முன் தினம் இரவு சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு சிறுமியிடம் நைசாக பேசி ஊருக்கு வெளியே உள்ள ஓடை பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

    மறைவான இடத்தில் வைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை அருகில் இருந்த குளத்தில் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி உயிர்த் தப்பி குளத்தில் இருந்து வெளியே வந்தார். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமை குறித்து தனது பாட்டியிடம் கூறினார்.

    சிறுமியின் பாட்டி இதுகுறித்து போர்னாலா போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஸ்ரீனுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • மகளிர் போலீசார் விசாரணை
    • பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

    கடலூர்:

    கடலூரை சேர்ந்த 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவி சம்பவத்தன்று தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து மர்ம நபர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர் வீட்டுக்குள் இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த பள்ளி சிறுமி அலறினார். அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் எழுந்த போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சேர்ந்த விக்னேஷ் (வயது 32) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியுள்ளனர்.
    • சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொசவம்பாளையம் சாலையில் காதலனுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பல்லடம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ் குமார்(வயது 31), ஜான்சன் (26), ஊஞ்சப்பாளையத்தை சேர்ந்த பார்த்தீபன் (25) ஆகியோர் வந்தனர். அவர்கள் 2 பேரிடமும் இங்கு தனியாக என்ன செய்து கொண்டிக்கிறீர்கள் என்று கேட்டனர். மேலும் சிறுமியின் காதலனை சரமாரி தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். காளி வேலம்பட்டி அருகே காட்டுப்பகுதி வழியாக செல்லும்போது திடீரென 3 பேரும், சிறுமியை அங்குள்ள புதர் பகுதிக்கு கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அதனை தங்களது செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    இந்த சம்பவத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று சிறுமியை மிரட்டியதுடன், பல்லடம்- கோவை சாலையில் உள்ள செட்டிப்பாளையத்தில் இறக்கி விட்டு விட்டு சென்றுவிட்டனர்.

    இதையடுத்து வீட்டிற்கு சென்ற சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் காளி வேலம்பட்டி, செட்டிப்பாளையம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்ட போது, ரமேஷ்குமார், ஜான்சன், பார்த்தீபன் ஆகியோர் சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் திருப்பூர் சிறையில் அடைத்தனர். சிறுமியை கடத்தி சென்று 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவரது மகள்கள் லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயது குழந்தை ஜெர்சி.

    குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன் சுகாசினிக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்நிலையில் சுரேஷ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுகாசினி மற்றும் அவரது மகள்களை கொல்ல சுரேஷ் முடிவு செய்தார். அவர்களை காரில் ஏற்றிக் கொண்டு கோதாவரி ஆற்று பாலத்திற்கு சென்றார். அப்போது பாலத்தில் நின்று செல்பி எடுக்கலாம் என தெரிவித்தார்.

    இதனை நம்பிய சுகாசினி தனது 2 மகள்களுடன் ஆற்று பாலத்தின் ஓரத்தில் நின்றார்.

    திடீரென சுரேஷ் சுகாசினி மற்றும் அவரது 2 மகள்களையும் ஆற்றில் தள்ளினார். மூத்த மகள் லட்சுமி கீர்த்தனா ஆற்றுப்பாலத்தில் இருந்த பிளாஸ்டிக் குழாயை பிடித்து தொங்கினார்.

    சுகாசினியும் அவரது இளைய மகள் ஜெர்சியம் ஆற்று தண்ணீரில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டனர்.

    சிறுமி லட்சுமி கீர்த்தனா ஒரு கையில் பிளாஸ்டிக் குழாயை பிடித்துக்கொண்டு மற்றொரு கையில் தன்னிடம் இருந்த செல்போன் மூலம் 100 எண்ணில் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    ராவுல பாலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தொங்கிக்கொண்டு இருந்த லட்சுமி கீர்த்தனாவை பத்திரமாக மீட்டனர்.

    மேலும் 2 படகுகள் மூலம் சுகாசினி, அவரது குழந்தை ஜெர்சி ஆகியோரை தேடி வருகின்றனர். அவர்கள் கதி என்ன என்பது தெரியவில்லை.

    ஆற்று வெள்ளத்தில் விழுந்து உயிர் தப்பிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இக்கட்டான நிலையில் சிறுமி 100-க்கு போன் செய்தார்.

    எங்கள் தொலைபேசி அழைப்பிற்கு அந்த சிறுமி பதிலளித்தார், நாங்கள் அவளுக்கு தைரியத்தை ஊட்டினோம். ஒரு கையால் குழாயில் ஒட்டிக்கொண்டு, மறுபுறம் மொபைல் போனை வைத்துக்கொண்டு தொங்கினார். லட்சுமி கீர்த்தனா, டார்ச் லைட் வெளிச்சத்தை அவளைக் கண்டதும் உதவிக்காக கத்தினார்.

    "காலை 3.53 மணிக்கு, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி கீர்த்தனாவிடமிருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது. ரவுலபாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ரஜினி குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 15 நிமிடம் டார்ச் லைட் மூலம் சிறுமியை கண்டுபிடித்தனர்.

    லட்சுமி கீர்த்தனா இருட்டில் குழாயில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சுமார் 36 நிமிடங்கள் வரை அவர் மன தைரியத்துடன் இருந்தார். தைரியமாக போலீசுக்கு ஒத்துழைத்தார்".

    அவர் உயிருக்கு போராடிய நேரத்திலும் 100-க்கு போன் செய்து போலீசாரை அழைத்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
    • ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    அந்த பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டிருந்த சிறுமி உடலை போலீசார் மீட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக அதே பகுதியில் வசித்த அஸ்பாக் ஆலம் (வயது 23) என்பவன் கைது செய்யப்பட்டான். இவனும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் வேலைக்காக கேரளாவில் இருப்பதும் தெரியவந்தது.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் உடல், அவள் படித்த பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    அப்போது சிறுமியின் தாயார் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடன டியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து சிறுமியின் உடல் ஆலுவா கீழ்மடுவில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அப்போது சிறுமியின் தோழி ஒருவர், தகனப்பெட்டியின் மீது கரடிப் பொம்மையை வைத்து கதறினார்.

    இது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்திற்கு ஆளாக்கியது. சிறுமியின் உடல் தகனத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில் கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்று சிறுமியின் பெற்றோர் கூறினர். இதுகு றித்து மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், நீதிக்கான அவர்களது போராட்டத்தில் அரசு துணை நிற்கும் என்றார். அவர்கள் என்னிடம் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினர். அதனை நான் உறுதி செய்வேன் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட அஸ்பாக் ஆலத்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவனுக்கு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அஸ்பாக் ஆலம் மீது வேறு ஏதும் வழக்குகள் உள்ளனவா? அவனது பின்னணி என்ன என்பது பற்றி அறிய, ஆலுவா போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு பீகார் செல்ல உள்ளது.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் காவலில் ஆலுவா துணை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அஸ்பாக் ஆலத்துக்கு வேறு யாருடனும் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிறுமியை கடத்தியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
    • நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சாக்குமூடை ஒன்றில் சிறுமியின் உடல் கட்டப்பட்டு வீசியிருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெளிமாநிலத்தை சேர்ந்த பலரும் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

    எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர், தங்களது 3 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்தனர். இவர்களது 2-வது மகளான 5 வயது சிறுமி அந்த பகுதியில் விளையாடிய போது திடீரென மாயமானாள்.

    அவளை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமியை, ஒரு வாலிபர் அழைத்து செல்வது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியை கடத்தியவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதில் சிறுமியை கடத்தியது அதே பகுதியில் வசிக்கும் வாலிபர் தான் என தெரியவந்தது. அவரும் பீகாரை சேர்ந்தவர் தான். தொழிலுக்காக கேரளா வந்த அவர், கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் சம்பவ இடத்திற்கு குடி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர் வசித்த வீட்டிற்கு சென்றனர். அப்போது அந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அதனால் அவரிடம் இருந்து உடனடியாக தகவல்கள் பெற முடியவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு விசாரணை நடத்தியதில் அவரது பெயர் அஸ்பாக் ஆலம் (வயது 23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவர், சிறுமிக்கு ஜூஸ் வாங்கி கொடுத்து அழைத்துச்சென்றதாக தெரிவித்தார். இருப்பினும் எங்கு அழைத்துச்சென்றார் என்பதை தெரிவிக்காமல் மழுப்பலாக பதில் அளித்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசார் மீண்டும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது சிறுமியுடன் அந்த வாலிபர் திருச்சூர் செல்லும் பஸ்சில் ஏறுவது தெரியவந்தது. மேலும் சிறுமியை அந்த பகுதியில் உள்ள சந்தையின் பின் பகுதியில் குப்பை மேடாக கிடக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றதை பார்த்ததாக ஒருவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சாக்குமூடை ஒன்றில் சிறுமியின் உடல் கட்டப்பட்டு வீசியிருப்பது தெரியவந்தது. அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    களமசேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கழுத்தை நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவம் குறித்து எர்ணாகுளம் ரூரல் போலீஸ் சூப்பிரண்டு விவேக்குமார் கூறுகையில், சிறுமி மாய மானதாக புகார் வந்ததும், சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது தான் வாலிபர் ஒருவர் குழந்தையை அழைத்துச்செல்வது தெரியவந்தது. அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பீகாரை சேர்ந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    பின்னர் சிறுமியின் உடலை சந்தையின் பின் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து மீட்டோம். அந்த பகுதி சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ள இடமாகும். அங்கு மது மற்றும் போதைப் பொருள் கும்பல் அடிக்கடி வந்து செல்வது உண்டு. அங்கு சிறுமியை அழைத்துச் சென்றது ஏன் என்பது தொடர்பாக, கைதான வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது என்றார்.

    • பெற்றோர் உணவு அளிக்காமல் அறையில் பூட்டி வைத்துள்ளனர்
    • 2-வது மாடியில் இருந்து குதித்து அருகில் உள்ள கடையில் தஞ்சம் அடைந்துள்ளார்

    பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் அர்னால்ட்ஸ்பர்க் பகுதியில் வசித்து வருபவர்கள், ரியான் கீத் ஹார்ட்மேன் (33) மற்றும் எல்லியோ எம். ஹார்ட்மேன் (33) தம்பதியர்.

    இவர்கள் தங்களின் 8 வயது மகளுக்கு நீண்ட நாட்களாக குறித்த நேரத்தில் உணவளிக்காமல் இருந்திருக்கின்றனர். மேலும் அந்த சிறுமியை மாடியிலிருந்து கீழே வரவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கவில்லை.

    இதனை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுமி, பசி தாங்க முடியாமல் தனது வீட்டின் இரண்டாம் தளத்து ஜன்னலிலிருந்து டெட்டி பியர் (Teddy Bear) பொம்மையுடன் கீழே குதித்தார். வெறும் கால்களுடன் நடந்த அச்சிறுமி அருகில் உள்ள ஃபேமிலி டாலர் கடைக்கு சென்று அங்குள்ள பணியாளர்களிடம் உண்பதற்கு ஏதேனும் உணவு கேட்டு கெஞ்சியிருக்கிறாள்.

    "என் பெற்றோருக்கு நான் தேவைப்படவில்லை. எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா?" என அவள் கேட்டதாக கெல்லி ஹட்சின்ஸன் எனும் அக்கடை பணியாளர் ஒருவர் கூறினார்.

    "எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அச்சிறுமி பசிக்கு உணவு கேட்டு வந்தது என் இதயத்தை உடைத்துவிட்டது. எந்த குழந்தைக்கும் 'தான் யாருக்கும் தேவைப்படவில்லை' எனும் எண்ணம் வரக்கூடாது" என்றார் சாண்ட்ரா நிக்லி எனும் இன்னொரு பணியாளர்.

    ஒரு வாரத்திற்கும் மேல் அச்சிறுமியை அறையில் வைத்து அவளின் பெற்றோர் பூட்டி வைத்து உணவு தராமல் துன்புறுத்தி வந்ததாகவும், உடன்பிறந்தவர் ஒருவர் கொடுத்த சாண்ட்விச் ஒன்றை 3 நாட்களுக்கு முன் உண்டதாகவும் அச்சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அந்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கு அலமாரிகளிலும், சமையலறையிலும் மற்றும் குளிர்சாதன பெட்டியிலும் ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகாரிகள் போதை மருந்து சம்பந்தமான பொருட்களையும் கண்டெடுத்ததாக தெரிகிறது.

    குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பு, அச்சிறுமியையும் மேலும் 3 குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் அழைத்து சென்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தாய், தந்தை இருவரும் தலா ரூ.80 லட்சம் பிணையில் மட்டுமே வெளியே வர முடியும்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை

    குளச்சல், ஜூலை.20-

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வந்தார். சிகிச்சைக்கு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தபோது குழந்தை பெற்ற பெண்ணுக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரள் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அவர், சிறுமியை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இதில் தான் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மருத்துவமனை போலீசார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் புகார் பெற்று மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

    • முகமதுசுலைமான் மகள் சுகைரா.
    • அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள பொதக்குடி பகுதியை சேர்ந்தவர் முகமதுசுலைமான்.

    இவரது மகள் சுகைரா(வயது4). நேற்று மதியம் தனது மோட்டார்சைக்கிளில் முகமதுசுலைமான் மகளை அழைத்து கொண்டு நீடாமங்கலம் அருகே தண்டாலம் பாலம் வடக்கு பகுதியில் உள்ள கோரையாற்றில் குளிப்பதற்காக சென்றார்.

    பின்னர் ்ஆற்றில் முகமதுசுலைமான் குளிக்க சென்றார்.

    அப்போது கரையில் சுகைரா அமர்ந்து இருந்தார். பின்னர் சுகைராவும் ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

    அப்போது கோரையாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றுள்ளது.

    ஆற்றில் மூழ்கிய சுகைரா அடித்து செல்லப்பட்டார்.

    மகளை காணாததை கண்டு தந்தை அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் தேவங்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் தேவங்குடி போலீசார் மற்றும் கூத்தாநல்லூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் ஆற்றில் இறங்கி சிறுமியை தேடினர். அப்போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தது.

    இதனால் கோரையாறு தலைப்பில் உள்ள அணையை அடைத்து குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ஆற்றில் மூழ்கிய நிலையில் சுகைரா உடல் மீட்கப்பட்டது.

    பின்னர் சிறுமி உடல் மீட்கப்பட்டு மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

    இதுகுறித்து தேவங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோருடன் ஆற்றில் குளிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்முறை செய்துள்ளாா்
    • சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் பகுதியை சோ்ந்தவா் செல்வம் (வயது 18). இவா் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்முறை செய்துள்ளாா். இதில், சிறுமி கா்ப்பமாகியுள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, காங்கயம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், வெள்ளகோவில் பகுதியில் செல்வத்தை கைது செய்தனா்.

    • படுகாயமடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார்.
    • போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கப்பூர் ஊராட்சி பாரதி நகரை சேர்ந்தவர் கார்த்தி. இவரது மகள் கீர்த்தனா (வயது 12) ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.

    கப்பூர் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக மின்கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருப்பதாகவும், கம்பியில் பல இடங்களில் ஜாயிண்ட் அடித்து மின்விநியோகம் செய்யப்படுவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து நேரிடும் அபாயம் உள்ளதால், உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் பலமுறை மின்வாரியத்தினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் கப்பூர் கிராமத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கீர்த்தனா மீது இன்று காலை மின் கம்பி அறுந்து விழுந்தது.

    இதில் படுகாயம் அடைந்த சிறுமி கீர்த்தனா அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சிறுமியை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கப்பூர் கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்கம்பியை சீரமைக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து மயிலாடுதுறை- திருவாரூர் சாலை மார்க்கத்தில் மங்கைநல்லூர் என்ற இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காலை 10:30 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் 45 நிமிடங்களுக்கு மேலாக நீடித்தது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக மின் கம்பியை சீரமைத்து தருவதாகவும் விரைவில் புதிய மின் கம்பங்களை அமைத்து மின் கம்பியை உயர்த்தி கட்டி தருவதாகவும் அளித்த உறுதி மொழியை ஏற்று கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    • மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
    • இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.

    சேலம்:

    சேலம் மத்திய சிறை பின்புறம் உள்ள திருநகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 23). இவருக்கு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது சிறுமி முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மணிகண்டனை தேடி நேற்று இரவு சிறுமி சேலத்திற்கு வந்தார்.

    இதுகுறித்து மணிகண்டனின் பெற்றோர் உடனடியாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு விசாரித்தனர். இதில், 3-வது முறையாக காதலனை தேடி சேலத்திற்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுமிக்கு தகுந்த அறிவுரை கூறி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் சிறுமியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில், சிறுமியின் பெற்றோர் தற்போது சேலத்திற்கு வந்து கொண்டி ருக்கின்றனர். அவர்கள் வந்ததும் சிறுமி பெற்றோ ரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீஸ் தெரிவித்தனர். 

    ×