search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றார்
    X

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமி குழந்தை பெற்றார்

    • தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
    • மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை

    குளச்சல், ஜூலை.20-

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் வந்தார். சிகிச்சைக்கு வந்த அவருக்கு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து டாக்டர்கள், சிகிச்சை அளித்தபோது குழந்தை பெற்ற பெண்ணுக்கு 17 வயதே ஆவது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், சிறுமியிடம் விசாரித்தபோது அவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள சரள் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 34) என்பவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றியபோது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து அவர், சிறுமியை தனது சொந்த ஊருக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி உள்ளார். இதில் தான் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    இதுதொடர்பாக மருத்துவமனை போலீசார், குளச்சல் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியை கர்ப்பமாக்கியது தொடர்பாக அவரது தாயாரிடம் புகார் பெற்று மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

    Next Story
    ×