search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தை"

    • சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது.
    • இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் 1963-ம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, இன்று வரை இந்த விற்பனை கூடத்திற்கு தேவையான சொந்த இடம் இல்லாமலும், எந்தவித நிரந்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் சிறிய வாடகை இடங்களில் இந்த விற்பனைகூடம் உள்ளது. இந்நிலையில் தற்போது விற்பனைகூடம் வயலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை கூடத்தினால், கடந்த 60 ஆண்டு காலமாக, இப்பகுதி விவசாயிகளுக்கும் மற்றும் வணிகர்களுக்கும் எந்தவித சேவையும் செய்யவில்லை.

    விற்பனைக்கூடத்திற்கு, வெளியே நடக்கும் வணிகத்திற்கு மட்டும் சந்தை கட்டணம் வசூலித்து வருகின்றனர். விற்பனைக்கூடம் வெறும் கட்டண வசூலிப்பு அலுவலகம் போல் மட்டும் செயல்பட்டு வருகின்றது. சரியான முறையில் இந்த விற்பனைகூடம் செயல்பட்டால் இங்குள்ள விவசாயிகளும் வணிகர்களும் விற்பனை கூடத்தின் சேவையைப் பெற்று பயன்பெறுவர். இந்நிலையில் இதற்கு தீர்வு காண, சிதம்பரம் வர்த்தகர் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை உத்தரவு பெற்றுள்ளது. இந்த இடைக்கால உத்தரவு நிரந்தரமாக்கவும், சிதம்பரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விற்பனை க்கூடம் அமைக்கவும் அங்கு நடைபெறும் வணிகத்திற்கு மட்டுமே சந்தை கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதற்கும், உரிய நடவடிக்கை எடுக்க சங்கம் முயற்சி செய்யும் என வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தெரிவித்தார்.

    • தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது.
    • புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.

    எடப்பாடி:

    எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் உள்ள வார சந்தையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று ஆடுகள் வரத்து அதிகரித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் சந்தைக்கு வந்து இருந்தனர். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் உள்ள பகுதியில் இருந்து சுமார் 9000 ஆடுகள், பந்தய சேவல், 4000 கோழிகள் என விற்பனைக்கு வந்தன. 10 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5200 முதல் ரூ.5700 வரையும், 20 கிலோ எடையுள்ள செம்மறி ஆடு ரூ.10,200 முதல் ரூ.11,600 வரையும், வளர்ப்பு குட்டி ஆடு ரூ.2500 முதல் ரூ.3000 வரையும் விலை போனது.

    அதேபோல், பலாப்பழம் ரூ.200 முதல் ரூ.400 வரையும், பந்தய சேவல், காகம்கீரி, செங்கருப்பு மயில், சுருளி ரகத்தைச் சேர்ந்த பந்தய சேவல்கள் ரூ.1000 முதல் ரூ.6500 வரையும் விலை போனது. அதேபோல் தக்காளி, கேரட், கத்தரி, வெண்டைக்காய், முள்ளங்கி என 160 டன் காய்கறிகள் விற்பனையானது. புளி கொட்டையுடன் உள்ள கூடை 6 கிலோ முதல் 7 கிலோ வரை ரூ.450 முதல் ரூ.600 வரை விலை போனது.

    சந்தையில் மொத்தம் ரூ.6.50 கோடிக்கு வர்த்தகம் நடந்தது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.
    • ஆண்டு தோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.

    ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ. 40 வரை விற்பனை ஆகி வருகிறது. அடுத்த 10 நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். படிப்படியாக விலை குறைந்து ரூ. 10-க்கும் குறைவாக விற்பனையாகும்.

    வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் வாழை விவசாயி கள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க. கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி சந்தை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது வாழைத்தார்கள் அறுவடை சீசன் தொடங்கும் நிலையில் உள்ளது.

    பணிகள் தொடங்கி 4 மாதங்களாகியும் 20 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எனவே இன்னும் 1 மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து, சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.
    • மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை மாட்டு சந்தை நேற்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடந்தது.

    மாடுகள் விற்பனைக்கு குவிந்தன மாட்டு சந்தையில் இறைச்சி மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் விற்பனைக்கு வந்தன.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள், விவசாயிகள் வந்தனர்.

    இறைச்சி பசு மாடுகளின் விலை 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 20 ஆயிரத்திற்கும், எருமை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாயிலிருந்து, 45 ஆயிரத்திற்கும், கன்று குட்டிகள் விலை குறைந்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. வளர்ப்பு பசு வத்தகறவை மாடுகள் விலை உயர்ந்து 35 ஆயிரம் ரூபாய்க்கும், வளர்ப்பு கன்று குட்டிகள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. மாடுகளின் வரத்து குறை–வால் விலை அதிகரித்து 2.5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.

    • நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது.
    • இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்த புதன்சந்தை மாட்டு சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு கூடிய சந்தை மாலை 3 மணி வரை நடந்தது. இங்கு கருப்பு வெள்ளை மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள், நாட்டு மாடுகள், எருமைகள் ஆகியவற்றை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    கருப்பு வெள்ளை மாடு ஒன்று ரூ.45 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், ஜெர்சி ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், சிந்து ரூ.38 ஆயிரம் முதல் ரூ.52,000 வரையும், நாட்டு மாடு ரூ.29 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், எருமை மாடுகள் ரூ.19 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையும் விற்பனையானது.

    கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் வந்திருந்து கால்நடைகளை வாங்கிச் சென்றனர். இங்கு 800-க்கும் மேற்பட்ட மாடுகள் ரூ.2 கோடிக்கு வர்த்தகமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள்.
    • ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    தமிழக முழுவதும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தாங்களே விற்கும் வகையில் உழவர் சந்தை திறக்கப்பட்டது அந்த வகையில் விவசாயிகள் தங்கள் பொருட்களை தாங்களே கொண்டு பொதுமக்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் நாமக்கலில் நகரின் மையப்பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வரு கிறது. இந்த உழவர் சந்தைக்கு நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகிறார்கள். வெளி மார்க்கெட்டை விட உழவர் சந்தையில் காய்கறிகள் விலை சற்று குறைவாக இருக்கும் என்பதால் நகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஓட்டல் உரிமையாளர்கள் உட்பட ஏராளமானவர் வந்து காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 7 லட்சம் டன் வரை காய்கறிகள் இந்த உழவர் சந்தை மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த உழவர் சந்தையில் முன்பு சாக்கடை தண்ணீர் ஆறாக ஓடுகிறது அதன் அருகிலையும் விவசாயிகள் காய்கறி போட்டு விற்பனை செய்து வருகிறார்கள் .இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தை முன்பு சாக்கடை நீர் அதிகமாக அளவில் தேங்கியுள்ளதால் துர்நாற்றமும் வீசி வருகிறது .இதனால் உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளும் பொதுமக்களும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே நகராட்சி அதிகாரிகள் உடனே தலையிட்டு சாக்கடை கால்வாய் நீர் தேங்குவதை தடுக்கவும் சாக்கடை கால்வாய் நீரை வேறு பாதைக்கு திருப்பி விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடும் பனிப்பொழிவு-முகூர்த்தம் காரணமாக உயர்வு
    • ஒரு கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம்

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தச் சந்தைக்கு தோவாளை, ஆரல்வாய்மொழி,காவல் கிணறு,புதியம்புத்தூர், மாடநாடார் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மானாமதுரை, மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன் கோவில், ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லி கைப்பூவும் வருகின்றன.

    சேலத்தில் இருந்து அரளி, பெங்களூரூவில் இருந்து மஞ்சள் கேந்தி, பட்டர் ரோஸ், திருக்குறுங்குடி, அம்பாசமுத்திரம், தென்காசி, புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி போன்றவையும், ஆரல்வாய்மொழி, தோவாளை, ராஜாவூர், மருங்கூர் பகுதிகளில் இருந்து கோழிப்பூ, அரளி உள்ளிட்ட பூக்களும் தினமும் விற்பனைக்கு வருகின்றன.

    இங்கிருந்து மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு மட்டுமின்றி, கேரளாவுக்கும் பூக்கள் அனுப்பப்படுகின்றன. எனவே தோவாளை சந்தை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இங்கு பூக்கள் வரத்து குறைவாக உள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக சந்தைக்கு பூக்களின் வரத்து குறைந்தி ருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதே நேரம் தேவை அதிகமாக உள்ள தால் பூக்களின் விலை கிடு கிடு உயர்வை சந்தித்து உள்ளது.

    தோவாளை சந்தையில் இன்று மல்லிகைப் பூ கிலோ ரூ. 3 ஆயிரத்துக்கும், பிச்சிப்பூ ரூ.1750-க்கும் விற்கப்பட்டது.அரளிப் பூ கிலோ ரூ.250, சேலம் அரளி ரூ.220, சம்பங்கி ரூ.125-க்கு விற்கப்பட்டன.

    மஞ்சள் கேந்தி ரூ.60, சிகப்பு கேந்தி ரூ.70, மரிக்கொழுந்து ரூ.150, பட்டர் ரோஸ் ரூ.150,கோழிப்பூ ரூ.50, துளசி ரூ.50 என விற்கப்படுகிறது. இந்த விலையேற்றத்திற்கு பூக்களின் வரத்து குறைவும், அதிக அளவிலான முகூர்த்த ங்கள் நாளை இருப்பதுமே காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.
    • மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது.

    உடுமலை :

    உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே உடுமலை நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை தினசரி சந்தைக்கு கொண்டு வந்து மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு விற்பன செய்து மீதமாகும் காய்கறிகளில் ஏற்படும் கழிவுகள் சந்தை பகுதியிலேயே கொட்டப்பட்டு குப்பை கழிவு கிடங்காக மாறி வருகிறது. இதில் ஆடு மாடுகள் மேய்ந்து பிளாஸ்டிக் உண்பதால் அவற்றுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் குப்பை கிடங்கால் துர்நாற்றம் ஏற்பட்டு சந்தைக்கு வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே கழிவுகளை உடனு க்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.
    • 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    திருப்பூர்:

    திருப்பூர் கோவில்வழி அமராவதிபாளையத்தில் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க, விற்க வருவர்.ஓணம் பண்டிகை முடிந்து இரண்டு வாரம் முடிந்த நிலையில் இந்த வாரம் கூடிய சந்தைக்கு காலை முதலே மாடு வரத்து அதிகமாக இருந்தது.

    கோவில்வழி - பெருந்தொழுவு சாலையில் 2 கி.மீ., தூரத்திற்கு மாடுகளுடன் ஆட்டோ, வேன்கள் அணிவகுத்து நின்றன. 810 மாடுகள் வந்ததால் மாலை, 4 மணி வரை சந்தை சுறுசுறுப்பாக நடந்தது.சிறிய ரக கன்றுக்குட்டிகள் 8,000 ரூபாய்க்கும், நல்ல தரமான முதல் ரக மாடுகள் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் மாடுகளை வாங்க வியாபாரிகள் - விவசாயிகளிடையே போட்டி நிலவியது.

    இது குறித்து மாட்டுச்சந்தை ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், மாடுகளை வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள கேரளா வியாபாரிகள் முன்வருவதால் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.6 மாதத்துக்கு பின் தற்போது தான் 800 மாடு வந்தது. ஒரே நாளில் 1.10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என்றனர்.

    • 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
    • ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது

    கன்னியாகுமரி:

    ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

    தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.

    அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.

    மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • மல்லி கிலோ ரூ.1700
    • வியாபாரிகள் குவிந்தனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற பூச்சந்தை தோவாளையில் உள்ளது. இங்கு ஆரல்வாய்மொழி, புதியம்புத்தூர், மாடன் நாடார் குடியிருப்பு, ஆவரைகுளம், குமாரபுரம், ஆகிய பகுதிகளிலிருந்து பிச்சிப்பூவும் சங்கரன் கோவில், ராஜபாளையம், வத்தலக்குண்டு, மதுரை, மானாமதுரை, கொடை ரோடு ஆகிய பகுதிகளில் இருந்து மல்லிகைப்பூவும் விற்பனைக்கு வருகிறது.

    சேலத்தில் இருந்து மஞ்சள் அரளியும், பெங்களூர் மற்றும் ஓசூர் பகுதியில் இருந்து மஞ்சள் கேந்தி பட்டர் ரோஸ், தென்காசி, அம்பாசமுத்திரம், புளி யங்குடி, திருக்கனங்குடி ஆகிய பகுதிகளில்இருந்து பச்சை, துளசியும் தோவாளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தாமரை, கோழிக்கொண்டை, அரளி, சம்மங்கி ஆகிய பூக்கள் சந்தைக்கு வருகிறது.

    இங்கிருந்து குமரி மாவட்டம், பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங் களுக்கு விற்பனை ஆகி வருகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வந்தது. இன்று வியாபாரிகள், பொதுமக்களும், அரசு அலுவலர்களும், தோவாளை சந்தையில் பூக்களை வாங்கி சென்றனர்.

    இன்றைக்கு பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ.800, மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1700, அரளி ரூ.300, சம்பங்கி ரூ. 500 கோழிக்கொண்டை ரூ.50, பட்டர் ரோஸ் ரூ. 750, சிவப்பு கேந்தி ரூ. 55, மஞ்சள் கேந்தி ரூ.40, துளசி ரூ.30, கொழுந்து ரூ.90, பச்சை ரூ.8, முல்லை ரூ.800, கனகாம்பரம் ரூ.1600 என மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

    இதுகுறித்து வியாபாரி கள் கூறும் போது விநாயகர் சதுர்த்தி மட்டுமல்ல ஓணத்தை முன்னிட்டும் பூக்கள் விலை இதைவிட கூடும் என்றும் தெரிவித்தனர் மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 100 டன் வரை பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

    கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பூக்கள் வரத்து அதிகம் வியாபாரிகள் கூட்டத்தால் வியாபாரம் சூடு பிடித்தது.

    • அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது.மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
    • ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.


    பரமத்திவேலூர்:


    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மின்னனு தேசிய வேளாண்மை சந்தையில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை தோறும் முழுத்தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.


    கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 2ஆயிரத்து 791 கிலோ தேங்காய்களை ‌ விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.25-க்கும், குறைந்த பட்சமாக ரூ.21.77-க்கும், சராசரியாக ரூ.24-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.67 ஆயிரத்து 166-க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    நேற்று செவ்வாய்க் கிழமை நடைபெற்ற ‌ஏலத்திற்கு 5 ஆயிரத்து 535 கிலோ தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ‌ஒன்று ரூ.25.11 -க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.‌24.51-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 544 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


    ×